search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "144 imposed"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Puducherry
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



    நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Puducherry


    கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட எதிர்ப்பு பெருகிவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu #TipuJayanti
    பெங்களூரு:

    கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு பகுதிகளை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை  சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக சமீபகாலமாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

    நாளை நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த முதல் மந்திரி குமாரசாமி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க  குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu  #TipuJayanti 
    ×