என் மலர்
நீங்கள் தேடியது "Mangalore"
- சுஹாஸ் என்பவர் குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர்.
- சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ் வெட்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், மங்களூர் நகர் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுஹாஸ் ஷெட்டி என்பவர் குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர். சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.
பதற்றம் காரணமாக மங்களூருவில், மே 6-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.
- ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது.
தோகை விரித் தாடும் மயிலின் கால்களில், அர்ச்சகர் ஒருவர் வெள்ளிக்கொலுசு அணி வித்துள்ளார். இந்த மயில் தினமும். கோவிலுக்கு வந்து நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் மானுார் கிராமத்தில் அனந்த பத்மநாப சுப்பிரமணியர் கோவிலில் உள்ள மயில் ஒன்று, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மயில் தோகையை விரித்து நடனமாடும் அழகை பார்க்கவே, தினமும் பக்தர்கள் வருகின்றனர்.

கோவில் அர்ச்சகர் ராஜேஷ் பட், நவராத்திரியின் போது மயிலின் கால்களில் வெள்ளிக் கொலுசு அணிவித்தார்.
தற்போது கொலுசு ஒலிக்கு தகுந்தார் போன்று, மயில் நடனமாட தொடங்கியுள்ளது. ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஒருவர், தனக்கு கிடைத்த பறவை முட்டைகளை, அடைகாத்து வைத்திருந்தார். அவை தானாகவே பொரித்து, மூன்று மயில் குஞ்சுகள், ஒரு கோழி குஞ்சு வெளியே வந்தன.
மயில் குஞ்சுகளை, கோவிலில் ஒப்படைத்தார். இரண்டு மயில்கள் எங்கோ சென்று விட்டன. ஆனால் ஒரு மயில் மட்டும் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற வீடுகளின் அருகிலேயே உள்ளது. இந்த மயிலுக்கு அர்ச்சகர், மயூரா என பெயரிட்டுள்னார். இவரது குடும்பத்தினருடன், மயில் மிகவும் நெருக்கமாக பழகுகிறது. அழைத்தால் அருகில் செல்கிறது.
தினமும் இரவு பூஜையின்போது. தவறாமல் மயில் வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்தால், தோகையை விரித்து "போஸ் கொடுக்கிறது. மொபைல் போனை கண்டால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தோகை விரித்தாடுகிறது.
- காந்தார படத்தின் மூலமாக பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
- ஜரந்தய தெய்வா கோவிலில் விஷால் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காந்தார படத்தின் மூலமாக கர்நாடகா & கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
இந்நிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
- பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.
பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- ஓணம் பண்டிகை கொண்டாட பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்.
- இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் :
செப்டம்பரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில், செப்டம்பர் 11-ந்தேதி மங்களூருவில் இருந்து இரவு 7மணிக்கு புறப்படும் சிறப்பு ெரயில் காசர்கோடு, பையனூர், கண்Èர், தலச்சேரி, சொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று மறுநாள் மதியம் 1:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான கார்வார், உடுப்பி மற்றும் தென்கனராவை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை இலாகா அறிவித்து இருந்தது. இதனால் கடலோர மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ஆனால் இந்த தகவலை அறியாத கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி வழியாக மங்களூருவில் இருந்து 15 மைல் தொலைவில் நங்கூரம் இட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய படகு சேதம் ஏற்பட்டு நீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
இதுகுறித்து அறிந்த மங்களூரு கடற்கரை பாதுகாப்பு படையினர் கடலில் தத்தளித்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களை கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கும் பணியில் கர்நாடக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.






