search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangalore"

    • நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.
    • ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது.

    தோகை விரித் தாடும் மயிலின் கால்களில், அர்ச்சகர் ஒருவர் வெள்ளிக்கொலுசு அணி வித்துள்ளார். இந்த மயில் தினமும். கோவிலுக்கு வந்து நடனமாடுவதைப் பார்த்து, மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.

    தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் மானுார் கிராமத்தில் அனந்த பத்மநாப சுப்பிரமணியர் கோவிலில் உள்ள மயில் ஒன்று, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மயில் தோகையை விரித்து நடனமாடும் அழகை பார்க்கவே, தினமும் பக்தர்கள் வருகின்றனர்.

    கோவில் அர்ச்சகர் ராஜேஷ் பட், நவராத்திரியின் போது மயிலின் கால்களில் வெள்ளிக் கொலுசு அணிவித்தார்.

    தற்போது கொலுசு ஒலிக்கு தகுந்தார் போன்று, மயில் நடனமாட தொடங்கியுள்ளது. ஆறு ஆண்டுகளாக மயில், இந்த கோவிவில் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஒருவர், தனக்கு கிடைத்த பறவை முட்டைகளை, அடைகாத்து வைத்திருந்தார். அவை தானாகவே பொரித்து, மூன்று மயில் குஞ்சுகள், ஒரு கோழி குஞ்சு வெளியே வந்தன.

    மயில் குஞ்சுகளை, கோவிலில் ஒப்படைத்தார். இரண்டு மயில்கள் எங்கோ சென்று விட்டன. ஆனால் ஒரு மயில் மட்டும் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற வீடுகளின் அருகிலேயே உள்ளது. இந்த மயிலுக்கு அர்ச்சகர், மயூரா என பெயரிட்டுள்னார். இவரது குடும்பத்தினருடன், மயில் மிகவும் நெருக்கமாக பழகுகிறது. அழைத்தால் அருகில் செல்கிறது.

    தினமும் இரவு பூஜையின்போது. தவறாமல் மயில் வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்தால், தோகையை விரித்து "போஸ் கொடுக்கிறது. மொபைல் போனை கண்டால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தோகை விரித்தாடுகிறது.

    • ஓணம் பண்டிகை கொண்டாட பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்.
    • இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருப்பூர் :

    செப்டம்பரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.

    அவ்வகையில், செப்டம்பர் 11-ந்தேதி மங்களூருவில் இருந்து இரவு 7மணிக்கு புறப்படும் சிறப்பு ெரயில் காசர்கோடு, பையனூர், கண்Èர், தலச்சேரி, சொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று மறுநாள் மதியம் 1:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    மங்களூரு அருகே படகு சேதமாகி கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கடற்படை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
    மங்களூரு:

    கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான கார்வார், உடுப்பி மற்றும் தென்கனராவை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை இலாகா அறிவித்து இருந்தது. இதனால் கடலோர மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஆனால் இந்த தகவலை அறியாத கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி வழியாக மங்களூருவில் இருந்து 15 மைல் தொலைவில் நங்கூரம் இட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய படகு சேதம் ஏற்பட்டு நீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

    இதுகுறித்து அறிந்த மங்களூரு கடற்கரை பாதுகாப்பு படையினர் கடலில் தத்தளித்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களை கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கும் பணியில் கர்நாடக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    ×