search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமியால் தண்ணீர் கிடைக்கும் நிலையை உருவாக்குகிறார் கமல்ஹாசன்- தமிழிசை குற்றச்சாட்டு
    X

    குமாரசாமியால் தண்ணீர் கிடைக்கும் நிலையை உருவாக்குகிறார் கமல்ஹாசன்- தமிழிசை குற்றச்சாட்டு

    குமாரசாமியால் காவிரி தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை கமல்ஹாசன் உருவாக்குவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. சார்பில் பல்வேறு மாநாடுகள் நடைபெற உள்ளன. மதுரையில் மகளிரணி மாநாடு ஜூலை 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் நடைபெற வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் நடைபெறவில்லை. நீட் தேர்வில் டீக்கடைகாரரின் மகள் வெற்றி பெற்று இருக்கிறார். இதை நாம் மறந்து விட்டோம்.

    நீட் தேர்வினால் உயிர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும். 1½ லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். 4 ஆயிரம் சீட்டுகளுக்கு அரசு தயார் செய்வது போல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர ஊக்குவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட நீட்டுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு உள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் வேறு துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தமிழக அரசியல்வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் செய்தது போல் பேசுகின்றனர்.


    கர்நாடகாவில் காவிரி பிரச்சனை முடிந்த பிறகு கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்து பேசியது தவறு. குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை அவர் உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவு படுத்துகிறார்.

    இது தன்னால்தான் முடியும் என்பது போல் கமல்ஹாசன் செயல்படுகிறார். எஸ்.வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    Next Story
    ×