என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » karnataka bus accident
நீங்கள் தேடியது "Karnataka bus accident"
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Mandyabus #kumarasamy
மண்டியா :
மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து மண்டியாவுக்கு கடந்த 24-ந் தேதி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அந்த பஸ் கனகனமரடி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா, மந்திரிகள் டி.சி.தம்மண்ணா, புட்டராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாண்டவபுரா தாலுகா கனகனமரடி பகுதியில் கால்வாயில் பஸ் பாய்ந்து 30 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது. இறந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இருக்க மாட்டார்கள்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Mandyabus #kumarasamy
மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து மண்டியாவுக்கு கடந்த 24-ந் தேதி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அந்த பஸ் கனகனமரடி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா, மந்திரிகள் டி.சி.தம்மண்ணா, புட்டராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாண்டவபுரா தாலுகா கனகனமரடி பகுதியில் கால்வாயில் பஸ் பாய்ந்து 30 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது. இறந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இருக்க மாட்டார்கள்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Mandyabus #kumarasamy
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X