search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமேஸ்வரா"

    • எல்லோரையும் விட கட்சி பெரியது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும் டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே அந்த துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமேஸ்வர் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எல்லோரையும் விட கட்சி பெரியது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். முதலில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. நாங்கள் அந்த திசையில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களுக்கு இடமில்லை. நாங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. வரும் காலத்தில் அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். எல்லா தொகுதி மக்களுக்கும், தங்கள் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க இயலாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்புகளை வழங்குமாறு கேட்பது தவறல்ல. ஆனால் வாய்ப்பு கிடைக்காத போது, தியாகங்களை செய்ய தலைவர்கள் தயாராக வேண்டும். முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    கார்நாடக மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு அம்மாநிலத்தில் வசிக்கும் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

    தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் கடந்த இரு தினங்களாக கடும் அமளி ஏற்பட்டது.

    இந்நிலையில், கார்நாடக மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஆப்ரிக்காவை சேர்ந்த 123 பேர் உரிய ஆவணங்கள் இன்றி கர்நாடகாவில் தங்கியிருப்பதை மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்ரிக்காவை சேர்ந்தவர்களோ, வங்கதேசத்தை சேர்ந்தவர்களோ யாராக இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லை எனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்’ என தெரிவித்தார்.
    நாளை பதவியேற்க உள்ள கர்நாடக மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் யாருக்கு எத்தனை இடம், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இன்று இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தின் முடிவில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  குமாரசாமி, பரமேஸ்வரா தவிர 32 பேர் மந்திரிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் பதவி தவிர்த்து 21 மந்திரிகள் காங்கிரஸ் தரப்பிலும், முதல்வர் பதவி தவிர்த்து 11 மந்திரிகள் மஜத தரப்பில் பதவியேற்க உள்ளனர். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karnataka #Kumaraswamy #Congress
    ×