என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமேஸ்வரா"

    • சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
    • அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதனால் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நான்தான் முதல்வராக இருப்பேன். மாற்றம் செய்வது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என சித்தராமையா தெரிவித்தார்.

    நேற்று சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அமைச்சரவையை மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-

    அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா மற்றும் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அகில இந்திய தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் இதைத்தான் சொல்கின்றன, இந்த விஷயம் இப்போது வெளிப்படையாகி வருகிறது. பொதுவாக, அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது தலைமை மாற்றங்கள் ஏற்படாது.

    அமைச்சரவை மாற்றத்திற்கான அனுமதி பெற்ற பிறகு சித்தராமையா மற்றும் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். இதில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.

    இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    • நவம்பர் புரட்சி உள்ளிட்ட எதையும் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
    • நாங்கள் உயர்மட்டக்குழுவின் முடிவைப் பற்றி பேச முடியாது.

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது, இரண்டரை வருடம் சித்தராமையா முதல்வராக இருப்பார், இரண்டரை வருடம் டி.கே. சிவக்குமார் முதல்வராக இருப்பார் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி வருகிற நவம்பர் மாதத்துடன் முதல் இரண்டரை வருடம் நிறைவடைகிறது. இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார். டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இதை சிலர் நவம்பர் புரட்சி என அழைக்கின்றனர்.

    இதற்கிடையே, சித்தராமையா மகன், தனது தந்தை அரசியல் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் எனக் கூறியதுடன், மற்றொரு அமைச்சர் குறித்து பேசினார். இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். டி.கே. சிவக்குமாருடன் மேலும் சிலர் போட்டிக்கு நிற்பார்கள் எனத் தெரிகிறது.

    இதனால் கர்நாடக மாநில காங்கிரசில் ஒரு குழப்பமான நிலை நிலவுகிறது. இந்த நிலையில், மேலிடத்தில் (காங்கிஸ் உயர்மட்டக்குழு) இருந்து நாங்கள் அதுபோன்ற எந்த தகவலையும் பெறவில்லை என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பரமேஷ்வரா கூறியதாவது:-

    நவம்பர் புரட்சி உள்ளிட்ட எதையும் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் உயர்மட்டக்குழுவின் முடிவைப் பற்றி பேச முடியாது. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேவையில்லாமல் மீடியாக்கள் முன் கருத்து தெரிவிப்பது, கூடுதல் குழப்பத்திற்கு வழிவகுக்கும். உயர்மட்ட குழுவில் இருந்து தற்போது வரை யாராவது இதுபற்றி பேசியிருக்கிறார்களா?. நாங்கள் உயர்மட்டக்குழுவில் இருந்து எந்தவொரு தகவலையும் பெறவில்லை.

    நாங்கள் ஏதாவது தகவலை பெற்றிருந்தால்தான், பதில் கூற முடியும். உயர்மட்டுக்குழு முடிவு செய்யும்வரை, எங்களுடைய கருத்துகள் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்காது.

    இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    • எல்லோரையும் விட கட்சி பெரியது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும் டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே அந்த துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமேஸ்வர் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எல்லோரையும் விட கட்சி பெரியது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். முதலில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. நாங்கள் அந்த திசையில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களுக்கு இடமில்லை. நாங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. வரும் காலத்தில் அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். எல்லா தொகுதி மக்களுக்கும், தங்கள் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க இயலாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்புகளை வழங்குமாறு கேட்பது தவறல்ல. ஆனால் வாய்ப்பு கிடைக்காத போது, தியாகங்களை செய்ய தலைவர்கள் தயாராக வேண்டும். முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    கார்நாடக மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு அம்மாநிலத்தில் வசிக்கும் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

    தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் கடந்த இரு தினங்களாக கடும் அமளி ஏற்பட்டது.

    இந்நிலையில், கார்நாடக மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஆப்ரிக்காவை சேர்ந்த 123 பேர் உரிய ஆவணங்கள் இன்றி கர்நாடகாவில் தங்கியிருப்பதை மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்ரிக்காவை சேர்ந்தவர்களோ, வங்கதேசத்தை சேர்ந்தவர்களோ யாராக இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லை எனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்’ என தெரிவித்தார்.
    நாளை பதவியேற்க உள்ள கர்நாடக மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் யாருக்கு எத்தனை இடம், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இன்று இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தின் முடிவில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  குமாரசாமி, பரமேஸ்வரா தவிர 32 பேர் மந்திரிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் பதவி தவிர்த்து 21 மந்திரிகள் காங்கிரஸ் தரப்பிலும், முதல்வர் பதவி தவிர்த்து 11 மந்திரிகள் மஜத தரப்பில் பதவியேற்க உள்ளனர். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karnataka #Kumaraswamy #Congress
    ×