search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase"

    • ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது.
    • மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது.

    சேலம்:

    ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது. தனியார் தோட்டங்களிலும், சாலை யோரத்திலும் பரா மரிக்கப்பட்டு வரும் விளிம்பு மரங்களில் இருந்து இந்த பழங்கள் கிடைக்கிறது.

    மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது. மரத்தில் தானாக பழுத்து கீழே விழும் பழங்களை சேகரித்து விற்பனைக்காக வியாபாரி கள் சேலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    மருத்துவ குணம்

    மருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் பி,சி மற்றும் பொட்டாசியம், இரும்பு சத்து, நார்சத்து உளளது. இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது.

    இந்த பழம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. ஏற்காடுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பழத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    • எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்

    கோவை,

    கோவை-அவினாசி சாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மேம்பால பணிகள் மெதுவாக நடந்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

    குறிப்பாக சேலம் மற்றும் திருப்பூரில் இருந்து கோவைக்கு வரும் புதிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    எல்.ஐ.சி சிக்னலில் மேம்பாலம் பணிக்காக சிக்னலில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் லட்சுமி மில் சிக்னல் வரை சாலையில் ஆங்காங்கே யூடன் முறை அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

    மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. போக்குவரத்து மாற்றம் செய்வதற்காக ஆங்காங்கே சாலைகளில் யூடன் முறை அமைக்கப்பட்டுள்ளதால் கோவை விமான நிலையம் சிக்னல் முதல்-லட்சுமி மில் சிக்னல் வரை இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இந்நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக மாலை வேலைகளில் மழை பெய்து வருவதால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகுகிறது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பாலம் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்தக் கட்டுமான பணி எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் கட்டப்படுவதைத்தான் கண்டிக்கிறோம்.

    பாலப் பணிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டி–ருந்தாலும் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்ற முன்னறிவிப்பு பலகை எதுவும் முறையாக வைக்கவில்லை.

    அத்துடன் கட்டுமானப்பணிகள் நடைபெறும் சாலையில் போதிய பாதுகாப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கோவை-அவிநாசி சாலையில் பயணம் செய்யும் புதிய வான ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    இங்கே மட்டுமல்லாமல் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் பாலம் கட்டுமான பகுதிகளிலும் இதுபோல் முன்னெச்சரிக்கை பலகை, தடுப்புச்சுவர் இல்லாததால் பல விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு 3.97 சதவீதமாக இருந்தது.

    அதன்பின்பு இம்மாவட்டத்தில் இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்பு சதவீதத்தை காட்டிலும் அதன்பின்பு வந்த ஆண்டுகளில் இறப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    அதாவது 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் முதியோர் இறப்பு 12 சதவீதமாகவும், பெண்கள் 11 சதவீதமாகவும், இதய நோய் உள்ளவர்கள் 10 சதவீதமாகவும் உள்ளனர்.

    இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தோம்.

    இந்த பதிவேடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 7931 ஆக பதிவாகி உள்ளது. இது 2022-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 8665 ஆக பதிவாகி உள்ளது.

    கொரோனா தொற்று குறைந்த நிலையில் அதற்கு பிந்தைய இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர்.

    கொரோனாவுக்கும், கொரோனாவுக்கு பிந்தைய சாவு எண்ணிக்கை உயர்வதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நாகையாபுரம் அருகே ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.
    • திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் சபரிமலை கண்ணன் என்பவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இவரது ஆட்டு கொட்டகையில் இருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது. இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் ஆடுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

    • சேலம்- விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம்- விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.

    அதன்படி விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் (06121) விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் (06122) சேலத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும். இதேபோல் சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் (06896) சேலத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும்.

    விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் (06895) விருத்தாசலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு;

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் உச்சம் அதிக அளவில் உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வீடுகளில் வெயில் தாக்கம் அதிக அளவில் தெரிகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், கரும்பு பால், தர்பூசணி ஆகியவற்றை அதிகம் விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் வீடுகளில் பெரும்பாலா னவர்கள் பிரிட்ஜில் தண்ணீர் வைத்து பருகி வருகின்றனர்.

    அதேபோன்று மண்பானையி லும் தண்ணீர் வைத்து குடிக்க தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இது குறித்து மண்பானை விற்பனை செய்வோர் கூறியதாவது:-

    தரமான மண்பானை செய்வதற்காக மண் எடுப்பதில் கட்டுப்பாடு, விதிமுறை அதிகம் உள்ளதால் தயாரிப்பு குறைந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    சாதாரண மண் பானை 350 ரூபாய், பைப் இணைக்கப்பட்ட மண்பானை ரூ. 450-க்கும் விற்பனை ஆகிறது. உடலுக்கு நல்லது என்ற நோக்கத்தில் வீடு, கடைகள் அலுவலக ங்களு க்காக வாங்கி செல்கின்றனர்.

    மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர். இதனால் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • தை மாதம் நிறைவுற்ற நிலையில் சமீப காலமாக மாலை முதல் காலை நேரம் வரையிலும் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.
    • பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் செல்வோர் விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை விட மிக குறைவாகவே பெய்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி பணிகள் நடைபெறவில்லை.

    பனிப்பொழிவு அதிகரிப்பு

    அதற்கு மாறாக இந்த 2 மாவட்டங்களிலும் கடந்த கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து தை மாதம் நிறைவுற்ற நிலையில் சமீப காலமாக மாலை முதல் காலை நேரம் வரையிலும் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.

    நெல்லை சுற்றுவட்டா ரங்களில் வென்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் அதிக அளவு காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வண்ணா ர்பேட்டை பைபாஸ் சாலை, நயினார்குளம் சாலை, ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தொலை தூரத்தில் வரும் வாகனங்களை சரியாக அறிய முடியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் வேதனை

    பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் செல்வோர் விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர். வயல்களில் நிறைந்திருக்கும் நெல் மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழையால் விளைய வேண்டிய பயிர்கள், பனியால் பாதிக்கப்படும் நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் பனி காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பெரும்பாலான ஆஸ்பத்திரி களில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

    • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
    • சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதைத்தவிர தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிைலயில் தை மாதத்தில் திருவிழாக்கள், பல்வேறு சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற 5-ந்தேதி தைப்பூசம் பண்டிகை தினமாகும். இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    இதனிடையே இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.

    இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.320-க்கும், கலர் காக்காட்டான் ரூ.320, மலை காக்கட்டான் - ரூ.240, சாதா சம்பங்கி ரூ.80, உயர் ரக சம்பங்கி ரூ.50, அரளி -ரூ.70, வெள்ளை அரளி ரூ.70, மஞ்சள் அரளி- ரூ.70, செவ்வரளி ரூ.140, ஐ.செவ்வரளி-ரூ.100, நந்தியாவட்டம் ரூ.150, சி.நந்தியாவட்டம் ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    • மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் ரூ.280.80 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து ரூ.502.05 கோடி வருமானம் ஈட்டப் பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ரூ.191.44 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27 சதவீதம் அதிகரித்து, நடப்பாண்டில் ரூ.242.60 கோடியாக உயர்ந்துள்ளது.

    மதுரை கோட்ட ரெயில்களில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.654.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் பயணச்சீட்டு இல்லாத, டிக்கெட் இன்றி வர்த்தக சரக்குகள் கொண்டு சென்ற, ரெயிலில் புகை பிடித்த, ரெயில் நிலையத்தை அசுத்தப்படுத்தி யவர்களிடம் இருந்து ரூ.834.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில்களில் 21 ஆயிரத்து 358 டன் சரக்குகளும், சரக்கு ரெயில்களில் 2.20 மில்லியன் டன் சரக்குகளும் கையாளப்பட்டு உள்ளன.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதற்கு முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை புத்தாண்டு தினத்தில் நிறைவேற்றி உள்ளார்.

    கொரோனா காலங்க ளில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11 சதவீதம் வழங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த ஆண்டு 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

    அதே போல் கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் மீது அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்து ஆசிரியர், அரசு ஊழியர்களின் மன உளைச்சலை போக்கினார்.

    தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    அவர் அனைவரும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத்திட்டம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்ற நம் பிக்கை உள்ளது. மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும்.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் வெல்லம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், நாலுகால்பாலம், டேனிஷ்பேட்டை, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, பேளூர், தும்பல், உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை அதன் விவசாயிகள் சேலம் அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வண்டிக்காரன் நகர் பகுதியில் கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் பொது ஏலத்தில் விட்டு வருகிறார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் சபரிமலை கோவில் சீசன் கடந்த மாதம் 16- ம் தேதி தொடங்கியது. அய்யப்ப சாமிக்கு அரவணை, அப்பம், பாயாசம், பஞ்சாமிர்தம், பானகம் போன்ற பிரசாதங்கள் நிவேதிக்கப்படுகிறது. இதனால் வெல்லத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    மேலும் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும். இதனால் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தியாகி இங்கு வரும் வெல்லத்தை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கிச் செல்கின்றனர். 

    சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 முதல் 70 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 80 முதல் 100 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்றைய விலை நிலவரப்படி 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் குண்டு வெல்லம் ரூ.1230 முதல் ரூ.1290 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெல்லம் ரூ.41- ரூ.43 என விற்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வெல்லம் விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை சீசன் வரை விற்பனை மும்முரமாக நடைபெறும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    • 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.
    • முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தமிழகத்தின் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டுவரப்படும்.

    இதே போல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பூக்களின் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்களின் மொட்டுக்கள் கடும் பனியால் செடியிலேயே கருகி உள்ளது. பூக்களின் விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.

    இது குறித்து வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது, தற்போது கடும் பனி நிலவி வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாளை வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது ‌‌ . இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது என்றார்.

    ×