search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flowers"

    • கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.

    • பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம்.
    • குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற குருவி வடிவிலான மலர்கள் தற்போது அதிக அளவில் பூத்துள்ளது. மேலும் இந்த பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம் கொண்டு இருப்பதால் குருவிப்பூ என (குரெட்டலேரியா) என அழைக்கபடுகின்றது.

    மேலும் இந்த பூவானது மரத்தில் மலரக்கூடியதும், மரத்தில் உள்ள கிளையில் குருவி அமர்ந்து 2 பக்கம் இறக்கையை விரித்து பறப்பது போலவும் இயற்கையாக அமைந்துள்ளது.

    மேலும் இந்த பூவின் அடி பகுதியில் மகரந்த தாள் பகுதி நூல் போன்று அமைந்துள்ளதை பிடித்து இழுக்கும் போது குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.


    இந்த பூவின் நடுப்பகுதியில் தேன் இருந்தும், அதனை தேனீக்கள் எடுக்கமுடியாதவாறு இதழ்கள் மூடி காணப்படுவதால் தேனை எடுக்கமுடியாமல் தேனீக்கள் ஏமாற்றமடைகிறது.

    மேலும் இவ்வகையான அபூர்வ வகை குருவி மலர்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்குகின்றன. இதனையடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் இந்த பூக்களை கண்டு ரசிப்பதுடன் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

    • பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது.
    • சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு நிலக் கோட்டை, அருப்புக் கோட்டை, உசிலம்பட்டி, ஈரோடு, ஓசூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    இப்போது பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    இதனால் பூ விற்பனைகளை கட்டியது. வரத்து குறைந்து இருந்த நிலையில் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீரென உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கனகாம்பரம் ரூ.700-க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.150முதல் ரூ.200வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை (கிலோவில்) வருமாறு:-

    சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, ஜாதி-ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120.

    • ஆலயங்களுக்கு செல்லும் போது வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது.
    • ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த மலர், பிடிக்காத மலர்கள் என்று உள்ளது.

    ஆலயங்களுக்கு செல்லும் போது வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது.

    குறைந்தபட்சம் ஒரு முழம் பூவாவது வாங்கி செல்ல வேண்டும். அந்த ஒரு முழம் பூ உங்கள் வாழ்வை நிச்சயம் மேம்படுத்தும்.

    ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த மலர், பிடிக்காத மலர்கள் என்று உள்ளது.

    அவற்றை தெரிந்து கொண்டு இறை வனை பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

    பூக்களினால் செய்யப்படுவது பூசையாகும்.

    அதாவது பூ + செய் என்பது "பூசெய்" என்ற பொருளில் வழங்கப்பட்டு பின்னர் அதுவே பூசை என்றும் பூஜை என்றும் மருவி விட்டது.

    சத்வ குணமுடைய வெள்ளெருக்கு, வெள்ளை அலரி, பிச்சி, சிறு சண்பகம், மந்தாரை, கொக்கரகு, புன்னை, நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை, தும்பை இந்த வகையான வெண்ணிற மலர்களை வைகறையிலும், மாலையிலும், இரவிலும் அர்ச்சிப்பவர்கள் பேரானந்தத்தையும், மோட்சத்தையும் அடைவர்.

    சிகப்பு நிறம் கொண்ட பாதிரி, செந்தாமரை, பட்டி, செவ்வலரி, செங்கடம்பு, செம்பருத்தி போன்ற ராஜஸ மலர்களை மதிய வேளையில் ராஜஸ காலத்தில் அர்ச் சிப்பவர்கள் போகத்தை அடைவார்கள்.

    பொன்னிறம் கொண்ட கொன்றை, சண்பகம், தங் கரளி, ஜவந்தி போன்ற ராஜஸ - தாமஸ மலர்களைக் கொண்டு விடியற்காலையில் அர்ச்சிப்பவர்கள் போக - மோட்சம் இரண்டையும் அடைவார்கள்.

    வில்வம், துளசி, மரிக்கொழுந்து, அருகு பச்சை (அருகு துர்க்கை மற்றும் அம்பாளுக்கு விலக்கு) முதலிய ராஜஸ பத்திரங்களால் அர்ச்சிப்பவர்கள் சதுர்வித - சாம, அர்த்த, காம, மோட்ச பலன்களை அடைவார்கள்.

    நீல நிறமுள்ள நீலோற்பவத்தால் அர்ச்சித்தவர்கள், வசீகரம், மோகம், இன்பம் ஆகியவற்றை அடைவார்கள்.

    கோங்கு பூவில் சரஸ்வதியும், அலரிப் பூவில் பிரம்மாவும், வன்னி பத்ரத்தில் அக்கினியும், நந்தியாவட்டத்தில் நந்தித்தேவரும், புன்னைப் பூவில் வாயுவும், எருக்கில் சூரியனும், செண்பகத்தில் செவ்வேளும், வில்வத்தில் லட்சுமியும், கொக்கரகு பூவில் விஷ்ணுவும், மாவிலங்கில் வருணனும், மகிழம்பூவில் சயசை யும், வாகைப்பூவில் நிருருதியும், சாதிப்பூவில் ஈசானனும், செங்கழுநீர்ப் பூவில் பரிதியும், குமுதப் பூவில் திங்களும், மந்தாரப் பூவில் இந்திரனும், ஊமத்தம் பூவில் குபேரனும், தாமரைப் பூவில் சிவபெருமானும், நீலோற் பவத்திலும், வாசனை மிகுந்த பூக்களிலும் உமா தேவியரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

    இந்த மலர் களால் பூஜிப்பவர்கள் சகல போகத்தையும், பெருஞ் செல்வங்களையும் பெறுவார்கள்.

    அருகு சகோதர வததோசத்தையும், கொன்றை தாயாருக்குச் செய்த கொடுமையையும், வெள்ளெருக்குப் பூ பரஸ்தீரி மன தோசத்தையும், நீலோற்பவம் வாக்கினால் ஏற்பட்ட தோசத்தையும், குங்குமப்பூ ந்வக்கிரக தோசத்தையும், வில்வம் பொய் சொன்ன தோசத்தையும், கத்தரிப் பத்ரம் குஷ்ட ரோகத்தையும், துளசி வறுமையையும், தும்பை கோஹத்தி தோசத்தையும், நெய்தல் பூவும், நெல்லி பத்ரமும், நோய்களை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டவை.

    இம்மலர்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சிப்பதால் மேற்கண்ட தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

    தெய்வங்களுக்கு சகஸ்ர நாமம், அஷ்டோத்தரம் போன்ற அர்ச்சனைகள் செய்யும் போது, பூக்கள் குறைவாக இருக்கும்.

    அப்போது ரோஜாப்பூ சாமந்திப்பூ போன்ற பூக்களின் இதழ்களையே சிறிது சிறிதாக பிய்த்து அர்ச்சனை செய்யலாமே என்று தோன்றும்.

    ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது.

    தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அர்ச்சனை மந்திரங்கள் நிறைய பாக்கி இருந்து, அர்ச்சனை செய்ய பூக்கள் குறைவாக இருக்கும் போது கூட, முழுமையான ஒரே ஒரு பூவை கையில் வைத்துக் கொண்டு, பாக்கியுள்ள அனைத்து மந்திரங்களையும் சொல்லிவிட்டு, இறுதியில் அந்த ஒரே ஒரு பூவை தெய்வங்களின் பாதங்களில் சேர்த்து விடலாம்.

    இப்படி செய்வதால் ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒவ்வொரு பூவைப்போட்டு அர்ச்சனை செய்த பலன் முழுமையாகக் கிடைக்கும்.

    • பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
    • மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.

    இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.

    இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.

    மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பா ளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90-க்கும், அரளி கிலோ ரூ.170-க்கும், ரோஜா கிலோ ரூ.280-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1200-க்கு விற்பனை
    • பூக்கள் விலை உயர்ந்தாலும் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    கோவை,

    கோவை பூ மார்க்கெ ட்டுக்கு கோபிச்செட்டி பாளையம், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருநது தினமும் 40 டன்னுக்கு மேல் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக பூக்கள் விலை குறைந்து இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் பூக்கள் விலை உயரத் தொடங்கி உள்ளது.

    மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. இன்று கிலோ ரூ.400 உயர்ந்து ரூ.1200-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. பூக்களின் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-

    செவ்வந்தி - ரூ.100, செண்டுமல்லி - ரூ.80, ரோஜா - ரூ.100, அரளி - ரூ.160, வாடாமல்லி - ரூ.120, வெள்ளை செவ்வ ந்தி - ரூ.240, மரிக்கொழுந்து - ரூ.30, துளசி - ரூ.30, கோழிக்கொண்டை - ரூ.80, கலர் செவ்வந்தி- ரூ.100, சம்பங்கி - ரூ.80,

    தாமரைப்பூ ஒன்று ரூ.40க்கும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.20-க்கும், வாழைக்கன்று ஜோடி - ரூ.20-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ ரூ.100, தேங்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பூக்கள் விலை உயர்ந்தாலும் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    • காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    காவிரி நதியை தூய்மை யாக வைத்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற யாத்திரையில் கொண்டு வரப்பட்ட காவேரி அன்னை சிலையை திருக்காட்டு பள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் வைத்து மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    பூஜைகளை திருக்காட்டு பள்ளி ராஜராஜேஸ்வரி சாமிகள், கோவில் பத்து தங்கமணி சாமிகள் செய்தனர்.நிகழ்ச்சியில் வளப்பகுடி சுந்தரேசன், திருக்காட்டுபள்ளி திருஞானசம்பந்தம், கமலசேகர், பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர்.
    • பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லைப்பூ , அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஏலம் எடுத்த பூக்களை வியாபாரிகள் பல்வேறு வகையான மாலைகளாகவும் தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம். போனது.

    பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.
    • முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    ஆயுதபூஜை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    பொதுவாக, ஆயுதபூஜை நாளில், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    பூக்கள் நிறைந்த அலங்காரத்துடன் அலுவலகங்கள் மிளிர, பழங்கள், பொரி மற்றும் கடலைகள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

    அந்த வகையில், தஞ்சையில் இன்று பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், தேங்காய், பூசணி, பொரி, கடலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

    இதேபோல் தஞ்சை பூக்கார தெரு மற்றும் விளார் சாலை தனியார் மண்டபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல், மதுரை, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

    பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பூ மார்க்கெட்டில் இன்று பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    2 நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கனகாம்பரம் , முல்லை தலா ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.

    இந்த பூக்களின் விலையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விற்கப்பட்டதை விட தற்போது விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு இன்று பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது.

    இன்று முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.

    • மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்பனை
    • பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோவை,

    நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவ னங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கோவில்களில் தினந்தோறும் அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. இதற்காக பூக்கள் அதிக ளவில் பயன்படுத்தப்படு கிறது. பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பூக்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோது கிறது. பூக்கள் விலை உயர்ந்திருந்தாலும் பூஜை க்காக பொதுமக்கள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

    மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200-க்கும், மற்றொரு ரகம் ரூ.800-க்கும் விற்பனையானது. முதல் ரக மல்லிகைப்பூ மார்க்கெட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது.முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.320-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்கள் விற்பனையான விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

    சம்பங்கி - ரூ.240, அரளி - ரூ.400, ஜாதி பூ- ரூ.800, ரோஜா - ரூ.300, கலர் செ வ்வந்தி - ரூ.240, தாமரை 1 - ரூ.40, செண்டுமல்லி - ரூ.80, கோழிக்கொண்டை பூ - ரூ.120, மஞ்சள் அரளி - ரூ.400, துளசி - ரூ.50, மருகு ஒரு கட்டு -ரூ.20, மரிக்கொழுந்து 1 கட்டு - ரூ.30, வாடாமல்லி -ரூ.120

    வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை மற்றும் 24-ந் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உற்பத்தி குறைவு
    • பூக்களின் விலை உயர்வு


    வேலாயுதம் பாளையம்


    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,குளத்துப்பாளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.


    பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களைப் பறித்து கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.


    கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். தற்போது குண்டுமல்லி ரூ.900- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும் வாங்கிச் சென்றனர். ஜப்பசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் வருவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.




    ×