என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flowers"

    • பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு.
    • பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், நாகப்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் குண்டுமல்லிகை ரூ.400- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- க்கும், முல்லை ரூ.400- க்கும், செவ்வந்தி ரூ.150- க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லிகை கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லை கிலோ ரூ.1500-க்கும், பச்சை முல்லை ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு அடைந்து உள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மல்லி ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது
    • வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

    கோவை

    கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன.

    கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

    இந்த நிலையில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

    இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்து இருந்தது. மேலும் நாளை மறுநாள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

    அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ரூ. ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது.

    அதேபோன்று வெள்ளை பூசனி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.
    • இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர்.

    திருப்பூர் :

    நாளை மறுநாள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் வர இருப்பதால் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே திருப்பூர் பூ மார்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள், தோரணங்களை வாங்கிச் செல்ல குவிந்தனர்.

    திருப்பூர் பூ மார்கெட், தென்னம்பாளையம் கடைவீதிகளில் அதிகளவில் வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை, அரளி, செவ்வந்தி, செண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் வாகங்களில் வந்து இறங்கின. அதனை வாங்க இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். அதே போன்று பனியன் கம்பெனியை சேர்ந்தவர்களும், பூக்கள், பூசணிக்காய், தோரணங்களை வாங்கி சென்றனர். சில தினங்களுக்கு முனபு வரை கடும் விலை விழ்ச்சியில் இருந்த பூக்களின் விலை திடிரென்று உயர்வு கண்டுள்ளது. மல்லிகை கிலோ- ரூ. 1000க்கும், செவ்வந்தி, ரூ. 340க்கும், அரளி ரூ. 400க்கும் செண்டுமல்லி ரூ. 150க்கும் வி்ற்பனை ஆனாது. இரண்டு நாளுக்கு முன்பே வியாபாரம் களைக்கட்டியுள்ளதால், பூ வியாபாரிகள், பழக்க டைக்கடை க்காரர்கள், சுவிட் கடைகள், மற்றும் மளிகை கடைகள் என வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது. நேற்று சேலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.320-க்கு விற்பனையானது. முல்லை ரூ. 240, ஜாதி மல்லி, ரூ. 260, காக்காட்டான் ரூ.160, கலர் காக்காட்டான்

    ரூ. 120, அரளி ரூ. 100, வெள்ளைஅரளி ரூ. 100, மஞ்சள் அரளி ரூ. 100, செவ்வரளி ரூ. 120, நந்தியாவட்டம் ரூ. 60, சம்பங்கி ரூ. 80, சாதா சம்பங்கி ரூ. 80 க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி சேலம் மார்க்கெட்ககளில் மல்லிகைபூ ஒரு கிலோ இன்று 500 ரூபாக்கு விற்பனையானது. முல்லை 360, ஜாதி மல்லி 260, காக்காட்டான் 200, கல்ர் காக்காட்டான் 160, அரளி 120, செவ்வரளி 140, நந்தியாவட்டம் 60, சம்பங்கி 120 ரூபாய்க்கும் விற்பனையாது. ஆனாலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    • மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.
    • தேர்பவனியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்..பூலோகம் போற்றும் புதுமை மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் விழா நாட்களில் மாலை பூண்டி மாதாவின் சிறிய சுரூபம் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய‌ சப்பரத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து வந்து பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    மாதாவின் பிறப்பு பெருவிழா நாளான நேற்று மாலை பேராலயத்தின் எதிரில் இருந்த கலையரங்கத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற‌ பொருளில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி, மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், பேராலய‌அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், லால்குடி மறைவட்டமுதன்மை குரு பீட்டர் ஆரோக்கியதாஸ், பேராலய‌உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு ஆலயங்களில் இருந்து வந்திருந்த அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவடைந்ததும் பூண்டி பேராலய‌ முகப்பில் சிறப்பு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.

    அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட தும் தேர்ப வனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது ஆலயமணிகள் முழங்கின. வாணவேடிக்கை நடைபெற்றது.

    தேர்பவ னியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.

    பேராலய‌ வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    தேர் பவனி‌ நிறைவ டைந்ததும்‌ இன்று (வெள்ளி) மரியாள் தாய்மை யின் தலைப்பேறு‌ என்ற‌ பொருளில்‌ பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு பூண்டி பேராலயத்தில் மாதா ‌பெருவிழா நிறைவு பெற்றது.

    ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், ஆன்மீக தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    தேர்பவனியின் போது திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
    • கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, ரோஜா பூ, கேந்தி பூ உள்ளிட்ட பூக்கள் இந்த சந்தைகளுக்கு விற்பனைக்காக விவசாயி கள் கொண்டு வருவார்கள்.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை இல்லாததால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் மற்றும் கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1100-க்கும். கேந்தி பூ கிலோ ரூ.100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனை ஆகிறது.

    வரக்கூடிய நாட்களில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரி விக்கின்றனர் இதனால் இப்பகுதியில் உள்ள பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • செண்டு மல்லி பூக்கள் விலை குறைந்ததால் விற்பனை இல்லை
    • பெரும்பாலான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காருவள்ளி, கொங்கு பட்டி, பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி, கொங்காரப்பட்டி, ஜோடுகுளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவ சாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வருகின்றனர்.

    இதில் சாமந்தி பூ கிலோ வுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையும், தக்காளி ரோஸ் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.120-க்கும், செண்டுமல்லிரூ.20 மற்றும் பல வகையான பூக்கள் வரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நேரங்களில் வியாபாரிகள் போட்டி போட்டு குறைந்து விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதில் செண்டுமல்லி ரூ.20க்கு விற்கப்படுவதாலும், விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவ தாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். பெரும்பா லான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    • ஆடித்திருவிழாவையொட்டி சேலம் வ .உ .சி . மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக விற்பனையும் விறுவிறுப்பாக அதிகரித்துள்ளது.
    • தற்போது கிலோவுக்கு ரூ.700 குறைந்து தற்சமயம் ரூ.500 என விற்கப்பட்டு வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் ஆடி மாதத்தில் சேலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழா களை கட்டும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளால் சேலம் வ .உ .சி . மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக விற்பனையும் விறுவிறுப்பாக அதிகரித்துள்ளது .

    கடந்த சில நாட்களாக 1 கிலோ மல்லிகை பூ ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்தது. தற்போது கிலோவுக்கு ரூ.700 குறைந்து தற்சமயம் ரூ.500 என விற்கப்பட்டு வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில்)

    வருமாறு :

    மல்லிகை பூ ரூ.500, முல்லை ரூ.360, ஜாதி மல்லி ரூ.240, காக்கட்டான் ரூ.360, கலர் காக்கட்டான் ரூ.320, சி.நந்தியா வட்டம் ரூ. 160, சம்மங்கி ரூ.130, சாதா சம்மங்கி ரூ.130, அரளி ரூ.160, வெள்ளை அரளி ரூ.160, மஞ்சள் அரளி ரூ.160, செவ்வரளி ரூ.180, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியா வட்டம் ரூ.160.

    பூக்க்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடி மாதம் திருவிழா மாதம், அதனைத் தொடர்ந்து ஆவணி மாத முகூர்த்த தினங்கள் வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்து விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பல ஏக்கர் நிலத்தில் கேந்தி பூ, சேவல் பூ உள்ளிட்ட வகையான பூக்களை பயிரிட்டு வருகின்றனர்.
    • விலை குறைவால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூருக்கு உட்பட்ட லெட்சுமியாபுரம், களக்குடி, எட்டாங்குளம், பள்ளமடை உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் நடைபெறுகிறது. அங்கு விவசாயிகள் பல ஏக்கர் நிலத்தில் கேந்தி பூ, சேவல் பூ உள்ளிட்ட வகையான பூக்களை பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டு தற்போது பல ஏக்கரில் பூக்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மானூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பூக்கள் இன்று வாகனங்கள் மூலம் நெல்லை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கேந்தி, சேவல் பூக்கள் கிலோ ரூ. 10-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் அதிர்ச்சியடைந்தன. இதைத்தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட கேந்தி, சேவல் பூக்களை விவசாயிகள் இன்று மானூர்-சங்கரன்கோவில் சாலையில் கொட்டினர். இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    நாங்கள் அரை ஏக்கர் நிலத்தில் பூக்கள் பயிரிட ரூ. 40 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. பூக்கள் பராமரிப்பு செலவு உள்ளது.

    ஒருநாள் தொழிலாளர்களுக்கு கூலி மட்டும் ஒருவருக்கு ரூ. 250 கொடுக்கப்படுகிறது. அதை கணக்கிட்டால் ஒரு கிலோ பூக்கள் ரூ. 40-க்கு கொள்முதல் செய்யவேண்டும். கடந்த 2 நாட்களாக ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ரூ.10-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டு எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    • திருவிழாக்கள் முடிவடைந்ததால் இந்த சரிவு

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் வாங்கல், மாயனூர், லாலாப்பேட்டை உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பூக்களை கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

    மல்லிகைப்பூ ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லை 200 முதல் 250 ரூபாய், அரலி 150 ரூபாய், ரோஜா 100 ரூபாய், கனகாம்பரம் 150 ரூபாய், ஜாதிமல்லி 200 ரூபாய், தாமரைப்பூ 10 ரூபாய்க்கு ஏலம் போயின.

    திருமணம், கோவில் திருவிழாக்கள் முடிவடைந்ததால் பூக்கள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.
    இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.

    செந்தாமரை மலர் - செல்வம் பெருகும்

    வெண்தாமரை மலர் - மனக்குறை போக்கும்

    தங்க அரளி - கடன் சுமை குறையும்

    செவ்வரளி - குடும்ப ஒற்றுமை உருவாகும்.

    நீல சங்கு புஷ்பம் - ஆயுள் விருத்திக்கும்

    மனோரஞ்சிதம் - கணவன்-மனைவிக்குள் அன்பை வலுப்படுத்தும்.

    ரோஜா, மல்லிகை, முல்லைப்பூ, பாரிஜாதம், செவ்வந்தி போன்ற வாசமுள்ள மலர்களை இறைவனுக்குச் சூட்டி வழிபட்டால், நேச மனப்பான்மை கொண்டவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
    புத்தாண்டையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கல் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #thovalaimarket
    நாகர்கோவில்:

    தோவாளை பூ மார்க்கெட்டுக்கு நெல்லை, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தாண்டையொட்டி பூக்கள் வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் இன்று காலையில் தோவாளை பூ மார்க் கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் மார்க்கெட் களை கட்டி இருந்தது.

    மல்லிகை, பிச்சிப்பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மல்லிகைப்பூவும் நேற்றையவிட இன்று விலை உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.2200-க்கு விற்கப்பட்டது.

    சம்பங்கி ரூ.40, கேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, கோழிப் பூ ரூ.40, வாடாமல்லி ரூ.40, கனகாம்பரம் ரூ.800, துளசி ரூ.30, சிவந்தி ரூ.80-க்கு விற்பனையானது.

    விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் குறைந்த அளவுதான் வருகின்றன. ஆனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். #thovalaimarket
    ×