என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓணம் பண்டிகையால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு - பூ மார்க்கெட்டில் குவிந்த வியாபாரிகள்
- தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
- கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, ரோஜா பூ, கேந்தி பூ உள்ளிட்ட பூக்கள் இந்த சந்தைகளுக்கு விற்பனைக்காக விவசாயி கள் கொண்டு வருவார்கள்.
கடந்த சில நாட்களாக பூக்கள் விலை இல்லாததால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் மற்றும் கேரளாவின் ஓணம் பண்டிகை வருவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1100-க்கும். கேந்தி பூ கிலோ ரூ.100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனை ஆகிறது.
வரக்கூடிய நாட்களில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரி விக்கின்றனர் இதனால் இப்பகுதியில் உள்ள பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்