search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lights"

    • மின்விளக்குகள் எரியாததால் திருப்பரங்குன்றம் நிலையூர் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர், கைத்தறிநகரில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து நாள் ேதாறும் ஏராளமானோர் வேலைக்கு நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் மாணவ-மாணவி கள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்கின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் இருந்து நிலையூர் செல்லும் மெயின்ரோடு பெரும் பாலான நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும். தற்போது இந்த ரோட்டில் மின்விளக்கு களும் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திருப்ப ரங்குன்றம்-நிலையூர் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் பெண், குழந்தைகளுடன் செல்வோர்கள் அச்சத்து டன் செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், வழிப் பறி, பணம் பறிப்பு போன்ற செயல்களிலும் ஈடுபடு கின்றனர். போலீசாரும் இந்த பகுதியில் ரோந்து வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

    எனவே திருப்பரங் குன்றம்-நிலையூர் ரோட்டில் மின்விளக்குகள் பழுதை சரி செய்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன.
    • பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு பகுதி பல்லடம் நகரத்தின் முக்கிய கடைவீதி ஆகும். இங்கு ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த ரோட்டில் பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அது கடந்த பல நாட்களாக எரியாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல நாட்களாக அவைகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.மேலும் இரவு நேரத்தில் பெண்கள், சிறுவர்கள் அந்த ரோட்டில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை.
    • பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து அனைத்து துறைஅதிகாரிகளின் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞான சுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கராசு, ஊராட்சி செயலாளர் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் வேதாரத்தனம் ,வட்டார கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் நிலவி வரும் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் நேரில் எடுத்துரைத்தும் மனுக்களும் அளித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தர பாண்டியன், ஊராட்சியில் கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை .இதற்கு பலமுறை மின்சார அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும்இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனை உடன் சரி செய்யப்பட வேண்டும்.

    இல்லையென்றால் 15 நாட்களில் மின்சார துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். மேலும் நாலுவேதபதி பகுதியில் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெற்று கட்டப்படும் வீடுகள் மற்றும் பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணல் எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த கோரிக்கையை ஊராட்சியில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் எடுத்துரைத்தனர் .இதற்குதாசில்தார் ரவிச்சந்திரன் அரசு கட்டிங்களுக்கும் அரசு உதவி பெற்று கட்டப்படும் வீடுகளுக்கும் மற்றும் தனிநபர் விடுகட்டுவதற்கும் அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்தமுறையான அனுமதிக்கு விண்ணப்பித்தால் பரிசீலித்து அரசு விதிகளுக்கு உட்பட்டுஅனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.
    • தேர்பவனியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்..பூலோகம் போற்றும் புதுமை மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் விழா நாட்களில் மாலை பூண்டி மாதாவின் சிறிய சுரூபம் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய‌ சப்பரத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து வந்து பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    மாதாவின் பிறப்பு பெருவிழா நாளான நேற்று மாலை பேராலயத்தின் எதிரில் இருந்த கலையரங்கத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற‌ பொருளில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி, மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், பேராலய‌அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், லால்குடி மறைவட்டமுதன்மை குரு பீட்டர் ஆரோக்கியதாஸ், பேராலய‌உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு ஆலயங்களில் இருந்து வந்திருந்த அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவடைந்ததும் பூண்டி பேராலய‌ முகப்பில் சிறப்பு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.

    அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட தும் தேர்ப வனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது ஆலயமணிகள் முழங்கின. வாணவேடிக்கை நடைபெற்றது.

    தேர்பவ னியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.

    பேராலய‌ வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    தேர் பவனி‌ நிறைவ டைந்ததும்‌ இன்று (வெள்ளி) மரியாள் தாய்மை யின் தலைப்பேறு‌ என்ற‌ பொருளில்‌ பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு பூண்டி பேராலயத்தில் மாதா ‌பெருவிழா நிறைவு பெற்றது.

    ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், ஆன்மீக தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    தேர்பவனியின் போது திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×