search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thovalai market"

    • கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.
    • பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், கோலியான்குளம் மற்றும் மதுரை, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000-க்கு கீழ் விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு இன்று மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கும், பிச்சிப்பூ ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் அரளி ரூ.230, தோவாளை அரளி ரூ.200, வாடாமல்லி ரூ.80, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.130, சம்பங்கி ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. தாமரை பூ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விவசாயிகள் பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனை நடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, மல்லிகைப்பூ ரூ.400, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    • குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
    • நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை உள்ளது. இங்கிருந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்துக்கும் பூக்கள் விற்பனையாகின்றன.

    தற்போது குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் நாளை (19-ந் தேதி) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    பிச்சிப்பூ ரூ.2 ஆயிரம், மல்லிகைப்பூ ரூ.1200, முல்லைப்பூ ரூ.2 ஆயிரம், வில்வம் ரூ.200, அரளி ரூ.320, சேலம் அரளி ரூ.300, கனகாம்பரம் ரூ.1000, சம்பங்கி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150, ரோஜா ரூ.30, மரிக்கொழுந்து ரூ.200, கொழுந்து ரூ.100, கோழி கொண்டை ரூ.70, வாடாமல்லி ரூ.100, மஞ்சள் கேந்தி ரூ.80, சிவப்பு கேந்தி ரூ.80, தாமரை ஒரு பூ ரூ.35 என அனைத்து பூக்களுமே விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புத்தாண்டையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கல் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #thovalaimarket
    நாகர்கோவில்:

    தோவாளை பூ மார்க்கெட்டுக்கு நெல்லை, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தாண்டையொட்டி பூக்கள் வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் இன்று காலையில் தோவாளை பூ மார்க் கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் மார்க்கெட் களை கட்டி இருந்தது.

    மல்லிகை, பிச்சிப்பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மல்லிகைப்பூவும் நேற்றையவிட இன்று விலை உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.2200-க்கு விற்கப்பட்டது.

    சம்பங்கி ரூ.40, கேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, கோழிப் பூ ரூ.40, வாடாமல்லி ரூ.40, கனகாம்பரம் ரூ.800, துளசி ரூ.30, சிவந்தி ரூ.80-க்கு விற்பனையானது.

    விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் குறைந்த அளவுதான் வருகின்றன. ஆனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். #thovalaimarket
    இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அருகம்புல் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. #vinayagarsathurthi

    ஆரல்வாய்மொழி:

    தோவாளையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்தும் பலவிதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று தோவாளை மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட அதிக அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. உள்ளூர் வியாபாரிகள் பலர் பூக்களை வாங்கி சென்றனர். பிச்சி, மல்லி போன்ற பூக்கள் விலையில் மாற்றம் இல்லை. நேற்றும் இன்றும் இந்த பூக்கள் ஒரே விலையில் விற்பனையானது. பிச்சி கிலோ ரூ. 500க்கும், மல்லி கிலோ ரூ.600க்கும் விற்பனையானது. மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வெள்ளை செவ்வந்தி ரூ.200, வாடாமல்லி ரூ.25, ரோஜாப்பூ ரூ.150க்கு விற்பனையானது.

    வழக்கமாக அருகம்புல் ஒரு கட்டு ரூ.10க்கு விற்பனையாகும். இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து பூஜை செய்யப்படும் என்பதால் அருகம்புல் தேவை அதிகமாக இருந்தது. இதனால் அருகம்புல் கட்டு 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.30க்கு விற்பனையானது. பிள்ளையார் சிலைக்கு மாலையாக போடப்படும் எருக்கம்பூ கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டது. பூஜையில் பயன்படுத்தப்படும். தேட்டிப்பூ கிலோ ரூ.200 ஆக இருந்தது. #vinayagarsathurthi

    ×