search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flowers price hike"

    தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சாமந்தி பூ, செண்டுமல்லி, குண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் சொட்டுநீர் பாசனம், கிணற்று பாசனம் மூலம் பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர். அப்படி விவசாயம் செய்துவந்த நிலையில் சாமந்தி பூ ரூ. 20-க்கும், சம்பங்கி ரூ. 40-க்கும், செண்டுமல்லி ரூ. 30-க்கும் விற்பனையாகி வந்தது. அதனால் விவசாயிகளுக்கு அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டனர்.

    தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயர்ந்து சாமந்தி பூ ரூ. 140-க்கும், செண்டுமல்லி ரூ. 80-க்கும், குண்டுமல்லி ரூ.800-க்கும், காக்கனாம்பூ ரூ. 400-க்கும், பட்டன் ரோஸ் ரூ.140-க்கும் சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    குண்டுமல்லி வரத்து குறைந்து கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுவதால் ஒரு முழம் பூ ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. இருந்தாலும் பெண்கள் பிரியமுடன் வாங்கி செல்கின்றனர்.
    தருமபுரியில் தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. 1 கிலோ குண்டு மல்லி ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி டவுன் பேருந்து நிலையத்தில் பூ மார்கெட் அமைந்துள்ளது. இந்த பூ மார்கெட்டில் இன்று தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை தீபாவளி என்பதால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பூக்களின் விலை விவரம் வருமாறு:-

    குண்டு மல்லி 1 கிலோ ரூ.700க்கும், சன்ன மல்லி 1 கிலோ ரூ.600க்கும், ஜாதி மல்லி 1 கிலோ ரூ.300க்கும், சம்பங்கி 1 கிலோ ரூ.80க்கும்,  கனகாமரம் 1 கிலோ ரூ.700க்கும், பட்டன் ரோஸ் 1 கிலோ ரூ.80க்கும், ரோஸ் 1 கிலோ ரூ.100க்கும், காக்கடா பூ 1 கிலோ ரூ.450க்கும், சாமந்தி 1 கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அருகம்புல் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. #vinayagarsathurthi

    ஆரல்வாய்மொழி:

    தோவாளையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்தும் பலவிதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று தோவாளை மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட அதிக அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. உள்ளூர் வியாபாரிகள் பலர் பூக்களை வாங்கி சென்றனர். பிச்சி, மல்லி போன்ற பூக்கள் விலையில் மாற்றம் இல்லை. நேற்றும் இன்றும் இந்த பூக்கள் ஒரே விலையில் விற்பனையானது. பிச்சி கிலோ ரூ. 500க்கும், மல்லி கிலோ ரூ.600க்கும் விற்பனையானது. மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வெள்ளை செவ்வந்தி ரூ.200, வாடாமல்லி ரூ.25, ரோஜாப்பூ ரூ.150க்கு விற்பனையானது.

    வழக்கமாக அருகம்புல் ஒரு கட்டு ரூ.10க்கு விற்பனையாகும். இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து பூஜை செய்யப்படும் என்பதால் அருகம்புல் தேவை அதிகமாக இருந்தது. இதனால் அருகம்புல் கட்டு 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.30க்கு விற்பனையானது. பிள்ளையார் சிலைக்கு மாலையாக போடப்படும் எருக்கம்பூ கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டது. பூஜையில் பயன்படுத்தப்படும். தேட்டிப்பூ கிலோ ரூ.200 ஆக இருந்தது. #vinayagarsathurthi

    விநாயகர் சதுர்த்தி - முகூர்த்த தினத்தையொட்டி அரூர் பகுதியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    அரூர்:

    தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில் கடத்தூர், பொம்மிடி, தீர்த்த மலை, கீரைப்பட்டி, மோட்டாங்குறிச்சி, புட்டி ரெட்டிப்பட்டி பகுதிகளில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பரளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து பெங்களூர், சேலம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் என்பதால் அனைத்து பூக்களின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது செண்டுமல்லி கிலோ ரூ. 30, சாமந்தி ரூ. 140 விறபனை செய்யப்படுகிறது. 

    தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் விலை உயர்ந்து சாமந்தி கிலோ ரூ. 200க்கு மேலும், செண்டுமல்லி ரூ. 60 வரையும் விலைபோகும் என பூக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    ×