என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்16 Jan 2019 4:27 PM GMT (Updated: 16 Jan 2019 4:27 PM GMT)
தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சாமந்தி பூ, செண்டுமல்லி, குண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் சொட்டுநீர் பாசனம், கிணற்று பாசனம் மூலம் பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர். அப்படி விவசாயம் செய்துவந்த நிலையில் சாமந்தி பூ ரூ. 20-க்கும், சம்பங்கி ரூ. 40-க்கும், செண்டுமல்லி ரூ. 30-க்கும் விற்பனையாகி வந்தது. அதனால் விவசாயிகளுக்கு அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டனர்.
தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயர்ந்து சாமந்தி பூ ரூ. 140-க்கும், செண்டுமல்லி ரூ. 80-க்கும், குண்டுமல்லி ரூ.800-க்கும், காக்கனாம்பூ ரூ. 400-க்கும், பட்டன் ரோஸ் ரூ.140-க்கும் சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குண்டுமல்லி வரத்து குறைந்து கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுவதால் ஒரு முழம் பூ ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. இருந்தாலும் பெண்கள் பிரியமுடன் வாங்கி செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X