search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fruit"

    • ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது.
    • மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது.

    சேலம்:

    ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது. தனியார் தோட்டங்களிலும், சாலை யோரத்திலும் பரா மரிக்கப்பட்டு வரும் விளிம்பு மரங்களில் இருந்து இந்த பழங்கள் கிடைக்கிறது.

    மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது. மரத்தில் தானாக பழுத்து கீழே விழும் பழங்களை சேகரித்து விற்பனைக்காக வியாபாரி கள் சேலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    மருத்துவ குணம்

    மருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் பி,சி மற்றும் பொட்டாசியம், இரும்பு சத்து, நார்சத்து உளளது. இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது.

    இந்த பழம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. ஏற்காடுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பழத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    • வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
    • சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    ேசலம்:

    சேலம் மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    முலாம் பழம்

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.

    நடப்பாண்டில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் முலாம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு முலாம் பழம் அறுவடை செய்து லாரிகளில் லோடு ஏற்றி சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது.

    குவிப்பு

    ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதேபோல் சாலையோர கடைகளிலும் முலாம்பழம் அதிகளவில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை.
    • 1 கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் பகுதியில் சில தினங்களாக பனிப்பொழிவு குறைந்து பகலில் வெயில் வெயில் அதிகரித்துள்ளது.

    இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள் பழரச கடைகள் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக முலாம்பழம் என்னும் கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருவாரூர் பகுதியில் பழக்கடையில் இடம்பெற்றிருந்த கிர்ணி பழம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரத்திலும் கொட்டி விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் ஆந்திராவில் விளைந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் உள்ள மார்க்கெட் வந்து அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் உட் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர் நகருக்கு திருச்சியிலிருந்து கிர்ணி பழம் வருகிறது.

    வியாபாரிகளுக்கு 1கிலோ ரூ 25 க்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தினை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழச்செடிகள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்

    திட்டத்தின் கீழ் இருக்கூர்,

    குன்னத்தூர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், வட

    கரையாத்தூர், சிறு நல்லிக்கோவில், சுள்ளிபா

    ளையம், குப்பிரிக்காபா ளையம் ஆகிய கிராமங்க ளுக்கு பழப்பயிர் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு மா, கொய்யா மற்றும் எலுமிச்சை செடிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து தோட்டக்கலை துறையின் மூலம் பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வட்டார

    தோட்டக்கலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 

    • பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர்.
    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று ஆடி 18-ம் நாள் விழா அதாவது ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி கரைகளில் ஆடிபெருக்கு விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சையில் பெருக்கெடுத்து ஓடும் கல்லணை கால்வாய் படித்துறைகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர். புதுமண தம்பதிகள் தங்களது மாங்கல்யத்தை கோர்த்து புதிதாக அணிந்து கொண்டனர்.

    திருவையாறு காவிரி புஷ்ய மண்டபதுறையில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர். மேலும், ஆடி மாதத்தில் பிரிந்திருந்த புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். 'கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும்' என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டினர்.

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தீர்த்த குளத்தில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர். அந்த ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். கும்பகோணம் மகாமககுளத்திலும் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரையில் பொதுமக்கள் பலர் புனித நீராடி வேதாரண்யேஸ்வர சுவாமியை வழிப்பட்டனர். மயிலாடுதுறை துலா கட்டம், பூம்புகார் கடற்கரைகளிலும் புதுமண தம்பதிகள் குவிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

    • ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பழங்களை பழுக்க வைத்து சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.

    விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இதன்படி ஈரோடு ஜெகன்– 94455 12170, மொடக்குறிச்சி மேகலா–96266 62333, கொடுமுடி தியாகராஜன்– 80721 02951, பவானி மல்லிகா– 95437 89894, அம்மாபேட்டை குணவதி – 97507 51385, அந்தியூர் மரகதமணி– 94427 55132, பெருந்துறை குருசரஸ்வதி – 97906 11101, சென்னிமலை சிந்திரா– 97870 45557, கோபி சசிகலா – 93621 19780, டி.என்.பாளையம் கார்த்திக்குமார் – 98427 28398, நம்பியூர் சாந்தி – 94867 94383, சத்தியமங்கலம் பிரியா – 90959 50500, பவானிசாகர் பிருந்தா – 96005 69830, தாளவாடி சாந்தி – 94867 94383 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×