search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horticulture call"

    • ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பழங்களை பழுக்க வைத்து சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.

    விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இதன்படி ஈரோடு ஜெகன்– 94455 12170, மொடக்குறிச்சி மேகலா–96266 62333, கொடுமுடி தியாகராஜன்– 80721 02951, பவானி மல்லிகா– 95437 89894, அம்மாபேட்டை குணவதி – 97507 51385, அந்தியூர் மரகதமணி– 94427 55132, பெருந்துறை குருசரஸ்வதி – 97906 11101, சென்னிமலை சிந்திரா– 97870 45557, கோபி சசிகலா – 93621 19780, டி.என்.பாளையம் கார்த்திக்குமார் – 98427 28398, நம்பியூர் சாந்தி – 94867 94383, சத்தியமங்கலம் பிரியா – 90959 50500, பவானிசாகர் பிருந்தா – 96005 69830, தாளவாடி சாந்தி – 94867 94383 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×