search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், கிர்ணி பழம் விற்பனை மும்முரம்
    X

    விற்பனைக்காக குவிந்துள்ள கிர்ணி பழங்கள்.

    திருவாரூரில், கிர்ணி பழம் விற்பனை மும்முரம்

    • சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை.
    • 1 கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் பகுதியில் சில தினங்களாக பனிப்பொழிவு குறைந்து பகலில் வெயில் வெயில் அதிகரித்துள்ளது.

    இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள் பழரச கடைகள் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக முலாம்பழம் என்னும் கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருவாரூர் பகுதியில் பழக்கடையில் இடம்பெற்றிருந்த கிர்ணி பழம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரத்திலும் கொட்டி விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் ஆந்திராவில் விளைந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் உள்ள மார்க்கெட் வந்து அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் உட் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர் நகருக்கு திருச்சியிலிருந்து கிர்ணி பழம் வருகிறது.

    வியாபாரிகளுக்கு 1கிலோ ரூ 25 க்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தினை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    Next Story
    ×