search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகவிலைப்படி"

    • பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
    • அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    சென்னை:

    தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

    இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அகவிலைப்படி உயர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அறிவுறுத்தினர்.

    சிங்கம்புணரி

    தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டில் முக்கிய நகரங்க ளின் விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம்.

    மத்திய அரசு ஊழியர்க ளுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அதே தேதியில் மாநில அரசு ஊழி யர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரி வித்துள்ளார்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்திருக்கி றோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படு கிறது.

    ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்களை கடந்த சில ஆண்டுகளாகவே எங்களிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்றால்போல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழு தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கிறதோ அதை யொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கட்டு வந்தது.

    கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படி காலம் தாழ்த்தி வழங்கப் பட்டது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களிடம் ஏற்பட்ட அதி ருப்திக்கு பின்னர் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறதோ அதே தேதி யில் தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த மே 2023-ல் வெளியான அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே முதல்- அமைச்சர் தனது செய்தி குறிப்பில் அளித்த உறுதியின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும்.
    • 4 சதவிகித அகவிலைப்படி வழங்க வேண்டும் என முதலமைச்சரை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.
    • அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் பயன் அடைவாா்கள்.

    விலைவாசி உயா்வை அரசுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் வகையில் அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருகிறது. இப்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி விரைவில் 45 சதவீதமாக உயா்த்தப்பட இருக்கிறது.

    இந்த அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது. இதற்கு முன்பு கடந்த மாா்ச் 24-ந்தேதி அகவிலைப்படி உயா்த்தப்பட்டு, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.

    இது தொடா்பாக அகில இந்திய ரெயில்வே பணியாளா்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலா் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், '4 சதவீத அகவிலைப்படி உயா்வு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், 3 சதவீதம் அளவுக்கு உயா்வு கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்பதை நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை கணக்கீட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்' என்றாா்.

    • உண்ணாவிரத போராட்டத்தில் சி.பி.எஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் விளக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்டச் செயலாளர் சாந்தி கண்டன உரையாற்றினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சி.பி.எஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுபடி ஓர் கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணியாளர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை ஆறு மாதம் காலந்தாழ்த்தி வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

    இந்தச் சூழ்நிலையில், 1.1.2023 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க வேண்டும்.

    ஆனால், இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு 1.4.2023 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மூன்று அகவிலைப்படி உயர்வுகளை ஆறு மாதத்திற்கு தள்ளிப்போட்ட தி.மு.க. அரசு, நான்காவது அகவிலைப்படி உயர்வை மூன்று மாதத்திற்கு தள்ளிப்போட்டு இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்படும் உயர்வு ஆகும். இதனைக் காலந்தாழ்த்தி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி விட்டு, 'நிதிப் பற்றாக்குறை' குறைக்கப்பட்டுவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை' குறைந்து விட்டது என்று கூறுவது நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே நிலவுகிறது.

    இதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

    அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
    • பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பண பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் கரந்தை பணிமனை முன்பு இன்று காலை போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தார். கவுரவ தலைவர்சந்திரமோகன்,

    தலைவர் மல்லி. ஜி.தியாகராஜன் முன்னி லை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தொடக்கி வைத்தார்.

    ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க கவுரவத் தலைவர் சுந்தர பாண்டியன் , பொருளாளர் ராஜமன்னன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்,உயர்த்தி வழங்கப்பட வேண்டும், கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வுபெற்றவர்கள், பணியின் போது இறந்தவர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஓய்வு பெற்றோர் சங்க துணை பொதுச் செயலாளர் வெங்கடா பிரசாத், மனோகரன், தங்கராசு, முருகையன் , துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், இருதயராஜ், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, ஞானசேகரன், பிகுணசேகரன், சம்பத்குமார், வீராச்சாமி, அழகிரி, கோவிந்தராஜன், லதா பார்த்திபன், நவநீதம் உதயகுமார், சாந்திதுரை ராஜ், முத்துச்செல்வி சேகர், சித்ரா சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பால சுப்பிரமணியம் நன்றி கூறினார். 

    • ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதற்கு முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை புத்தாண்டு தினத்தில் நிறைவேற்றி உள்ளார்.

    கொரோனா காலங்க ளில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11 சதவீதம் வழங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த ஆண்டு 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

    அதே போல் கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் மீது அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்து ஆசிரியர், அரசு ஊழியர்களின் மன உளைச்சலை போக்கினார்.

    தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    அவர் அனைவரும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத்திட்டம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்ற நம் பிக்கை உள்ளது. மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 15.12. 2000 அன்று முதல்வராக இருந்த கருணா நிதியால் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 1.9.1998 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் சுமார் 86 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்ற னர். இந்த ஓய்வூதியத் திட்டத்தில் 2 வகை யான அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1.9.2010 முதல் அனைவருக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது .

    கடந்த 2015 நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு வழங்காமல் முடக்கப்பட்டது. நவம்பர் 2015 முதல் முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 2.9.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அகவிைைலப்படி உயர்வை நவம்பர் 2022 வழங்கவும். அமல்படுத்திய அறிக்கையை 25.11.2022ல் கோர்ட்டில் தாக்கல் செய்ய வும் உத்தரவிட்டது.

    தமிழக அரசு இந்த பிரச்சினையில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்கை கடைபிடிப்பதை கண்டித்து மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில தலைவர் எஸ். கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தேவராஜ், சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில சம்மே ளன துணைத்தலைவர் பிச்சை உள்பட பலர் பேசினர்.

    இதில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் முருகேசன். சவுரி தாஸ், ஆறுமுகம், செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டியன், ஜேம்ஸ் கர்சன்ராஜ், ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தங்கப்பழம், போஸ், முத்துச்சாமி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் மகாலிங்கம், காமராஜ், நாகராஜன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை நிர்வாகம் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர்.

    • எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொகையை வழங்க வேண்டும்.
    • அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    அகில இந்தியமாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் அழைப்பை ஏற்றுஅனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில முடிவின்படி, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி, ஒன்றிய, மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டக்கி ளைகள் இணைந்து கோட்ட அளவில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்ட தலைவர் ஆ.துரைராஜ் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் பழ. அன்புமணி துவக்கி வைத்து பேசினார்.

    வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் எச். உமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் இரா.ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சொ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், கும்பகோணம் நகர செயலாளர் பக்கிரி சாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, திருவிடைமருதூர் பொறுப்பாளர்கள் உதயகு மார், பன்னீர்செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் நிறைவுரை உரையாற்றினார்.

    நிறைவாக திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கே.சிவராமன் நன்றி தெரிவித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும்.

    எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொ கையை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும்.

    70 வயது முதிர்வடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12000/- ஆக வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.
    • தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது. தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், வழக்கம்போல் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு கோரிக்கை
    • அகவிலைப்படி உயர்வால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என அரசு தகவல்

    சென்னை:

    கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.

    1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    ×