தஞ்சையில், போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்.பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பண பலன்கள் வழங்கப்பட வேண்டும்.
தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் கரந்தை பணிமனை முன்பு இன்று காலை போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தார். கவுரவ தலைவர்சந்திரமோகன்,

தலைவர் மல்லி. ஜி.தியாகராஜன் முன்னி லை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தொடக்கி வைத்தார்.

ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க கவுரவத் தலைவர் சுந்தர பாண்டியன் , பொருளாளர் ராஜமன்னன் உள்ளிட்ட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்,உயர்த்தி வழங்கப்பட வேண்டும், கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வுபெற்றவர்கள், பணியின் போது இறந்தவர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஓய்வு பெற்றோர் சங்க துணை பொதுச் செயலாளர் வெங்கடா பிரசாத், மனோகரன், தங்கராசு, முருகையன் , துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், இருதயராஜ், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, ஞானசேகரன், பிகுணசேகரன், சம்பத்குமார், வீராச்சாமி, அழகிரி, கோவிந்தராஜன், லதா பார்த்திபன், நவநீதம் உதயகுமார், சாந்திதுரை ராஜ், முத்துச்செல்வி சேகர், சித்ரா சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பால சுப்பிரமணியம் நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com