என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்
- எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொகையை வழங்க வேண்டும்.
- அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
கும்பகோணம்:
அகில இந்தியமாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் அழைப்பை ஏற்றுஅனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில முடிவின்படி, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி, ஒன்றிய, மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டக்கி ளைகள் இணைந்து கோட்ட அளவில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்ட தலைவர் ஆ.துரைராஜ் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் பழ. அன்புமணி துவக்கி வைத்து பேசினார்.
வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் எச். உமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் இரா.ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சொ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், கும்பகோணம் நகர செயலாளர் பக்கிரி சாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, திருவிடைமருதூர் பொறுப்பாளர்கள் உதயகு மார், பன்னீர்செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் நிறைவுரை உரையாற்றினார்.
நிறைவாக திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கே.சிவராமன் நன்றி தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொ கையை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும்.
70 வயது முதிர்வடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12000/- ஆக வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்