search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள்"

    • கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.

    • பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது.
    • சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு நிலக் கோட்டை, அருப்புக் கோட்டை, உசிலம்பட்டி, ஈரோடு, ஓசூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    இப்போது பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    இதனால் பூ விற்பனைகளை கட்டியது. வரத்து குறைந்து இருந்த நிலையில் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீரென உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கனகாம்பரம் ரூ.700-க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.150முதல் ரூ.200வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை (கிலோவில்) வருமாறு:-

    சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, ஜாதி-ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120.

    • பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
    • மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.

    இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.

    இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.

    மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்பு ப்பாளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கி ன்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.700- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

    கார்த்திகை தீபம், கிருத்திகை மற்றும் பவுர்ண மியை முன்னிட்டு நடை பெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.220- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1,800-க்கும், செவ்வ ந்திப்பூ ரூ.250- க்கும், கனகா ம்பரம் ரூ.1,200-க்கும் ஏலம். போனது.

    பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    • குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடு துறை, பேச்சிப்பா றை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.600- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தற்போது நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பா ளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90-க்கும், அரளி கிலோ ரூ.170-க்கும், ரோஜா கிலோ ரூ.280-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1200-க்கு விற்பனை
    • பூக்கள் விலை உயர்ந்தாலும் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    கோவை,

    கோவை பூ மார்க்கெ ட்டுக்கு கோபிச்செட்டி பாளையம், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருநது தினமும் 40 டன்னுக்கு மேல் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக பூக்கள் விலை குறைந்து இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் பூக்கள் விலை உயரத் தொடங்கி உள்ளது.

    மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. இன்று கிலோ ரூ.400 உயர்ந்து ரூ.1200-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. பூக்களின் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-

    செவ்வந்தி - ரூ.100, செண்டுமல்லி - ரூ.80, ரோஜா - ரூ.100, அரளி - ரூ.160, வாடாமல்லி - ரூ.120, வெள்ளை செவ்வ ந்தி - ரூ.240, மரிக்கொழுந்து - ரூ.30, துளசி - ரூ.30, கோழிக்கொண்டை - ரூ.80, கலர் செவ்வந்தி- ரூ.100, சம்பங்கி - ரூ.80,

    தாமரைப்பூ ஒன்று ரூ.40க்கும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.20-க்கும், வாழைக்கன்று ஜோடி - ரூ.20-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ ரூ.100, தேங்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பூக்கள் விலை உயர்ந்தாலும் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    • பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர்.
    • பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லைப்பூ , அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஏலம் எடுத்த பூக்களை வியாபாரிகள் பல்வேறு வகையான மாலைகளாகவும் தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம். போனது.

    பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.
    • முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    ஆயுதபூஜை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    பொதுவாக, ஆயுதபூஜை நாளில், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    பூக்கள் நிறைந்த அலங்காரத்துடன் அலுவலகங்கள் மிளிர, பழங்கள், பொரி மற்றும் கடலைகள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

    அந்த வகையில், தஞ்சையில் இன்று பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், தேங்காய், பூசணி, பொரி, கடலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

    இதேபோல் தஞ்சை பூக்கார தெரு மற்றும் விளார் சாலை தனியார் மண்டபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல், மதுரை, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

    பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பூ மார்க்கெட்டில் இன்று பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    2 நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கனகாம்பரம் , முல்லை தலா ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.

    இந்த பூக்களின் விலையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விற்கப்பட்டதை விட தற்போது விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு இன்று பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது.

    இன்று முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.

    • ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபடுவார்கள்.
    • ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது.

    நெல்லை:

    நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் 9-வது நாளான நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டா டப்படுகிறது.

    இதில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையான நாளைய தினம் தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, பழங்கள், இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்று கள் கட்டியும் பூ மாலை அணிவித்தும் பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். கல்வியாளர்கள் தங்களது படிப்பறை, புத்தகங்களில் பூஜை செய்வார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் சரஸ்வதி பூஜைக்கு தேவை யான பொருட்கள் வாங்குவதற்காக இன்று சந்தைகளில் மக்கள் கூட்டம் களை கட்டியது. டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அவல், பொரி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் காலை முதலே வர தொடங்கினர்.

    நேற்று தொடங்கி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலா னோர் தங்களது குடும்பத்து டன் இன்று மார்க்கெட்டு களில் குவிந்தனர். இதனால் மார்க்கெட்டுகள் களைகட்டி காணப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், கொத்தமல்லி இலை உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.

    பண்டிகை தினம் என்பதால் அவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. காய்கறிகள் மட்டுமல்லாது பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கொய்யாப்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்து காணப்பட்டது.

    இதேபோல் பூஜைக்கு தேவைப்படும் முக்கிய பொருளான பொரி ஒருபடி ரூ.45-க்கு விற்பனையானது. உடைத்த கடலை கிலோ ரூ.70-க்கும், சிறிய ரக அவல் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. வாழைத் தார்கள் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், சிறிய ரக வாழைகள் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    பாளை காந்தி மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூக்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.300 வரை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.1,800 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ விலை நேற்று ரூ.1,200 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,500 ஆக அதிகரித்தது.

    மேலும் சம்பங்கி ரூ.500, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.100-க்கு விற்பனை யானது. இதேபோல் அரளி பூ ரூ.500-க்கும், கோழி பூ ரூ.60-க்கும், நந்தியா விட்டம் ரூ.500-க்கும் விற்பனை யானது. பூக்கள், காய்கறிகள், பூஜை பொருட்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் வாங்கி சென்றனர்.

    இன்று மாலை மார்க்கெட்டுகளில் பொருட் கள் வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று வரு கின்றனர். மாவட்டத்தில் திசையன் விளை, வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதி களிலும் பஜார் பகுதிகளில் களை கட்டி காணப்பட்டது.

    இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் சரஸ்வதி பூஜையை யொட்டி பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டு களில் குவிந்தனர்.

    சங்கரன் கோவில், தென்காசி பூ மார்க்கெட்டு களிலும் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி யில் பஜார் பகுதிகளில் காலை முதலே அவல், பொரி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.


    சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.

    சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.


    நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.

    நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.


     


     


    • தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை
    • இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதிகளில் இருந்து கேந்திபூக்களும் நெல்லை மாவட்டம் பழவூர் உள்பட பல்வேறு பகுதிக ளில் இருந்து பிச்சி, மல்லிகை பூக்களும் அதி களவு விற்பனைக்கு வருகி றது.

    மேலும் பெங்களூர், ஓசூர், சேலம், சத்தியமங்கலம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி இன்று பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது. பூக்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்திருந்தனர்.

    இதனால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியி ருந்தது. சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர். இதனால் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை, பிச்சி பூக்களின் விலை வழக்கத்தை விட 2 மடங்கு உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை யானது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தாமரை பூக்கள் விற்பனைக்கு குறைவாக வந்திருந்தது. இதனால் தாமரை பூவின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.100, மஞ்சள்செவந்தி ரூ.170, வெள்ளை செவந்தி ரூ.200, அரளி ரூ.290-க்கு விற்பனை யானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு ஆயுத பூஜையையொட்டி ஏராள மான வியாபாரி களும், பொதுமக்களும் பூக்கள் வாங்க வந்திருந்த தால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்பனை
    • பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோவை,

    நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவ னங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கோவில்களில் தினந்தோறும் அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. இதற்காக பூக்கள் அதிக ளவில் பயன்படுத்தப்படு கிறது. பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பூக்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோது கிறது. பூக்கள் விலை உயர்ந்திருந்தாலும் பூஜை க்காக பொதுமக்கள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

    மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200-க்கும், மற்றொரு ரகம் ரூ.800-க்கும் விற்பனையானது. முதல் ரக மல்லிகைப்பூ மார்க்கெட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது.முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.320-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்கள் விற்பனையான விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

    சம்பங்கி - ரூ.240, அரளி - ரூ.400, ஜாதி பூ- ரூ.800, ரோஜா - ரூ.300, கலர் செ வ்வந்தி - ரூ.240, தாமரை 1 - ரூ.40, செண்டுமல்லி - ரூ.80, கோழிக்கொண்டை பூ - ரூ.120, மஞ்சள் அரளி - ரூ.400, துளசி - ரூ.50, மருகு ஒரு கட்டு -ரூ.20, மரிக்கொழுந்து 1 கட்டு - ரூ.30, வாடாமல்லி -ரூ.120

    வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை மற்றும் 24-ந் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×