search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் பானைகள்"

    • கவுண்டம்பாளையம் பகுதியில் 40 குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
    • எங்களிடம் முக்கால் அடி முதல் மண்பானைகள் உள்ளன.

    கவுண்டம்பாளையம்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன.

    இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வர்ணம் பூசுவது, பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதிற்கு தயாராகி வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையில் முக்கியம் வகிப்பது, மண்பானை தான். மண்பானை பயன்பாடு குறைந்திருந்தாலும், பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை மண்பாண்டம் தான் பிடிக்கிறது. ஏனென்றால் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பொங்கல் அன்று மண்பானையில் பொங்கல் வைப்பது தொடர்ந்து வருகிறது.

    பித்தளை, சில்வர் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் தற்போது இருந்தாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கமானது இருந்து தான் வருகிறது.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், பொங்கலிடுவதற்கு பயன்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி கோவை கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்திலேயே தொழிலாளர்கள் தொடங்கி விட்டனர்.

    இருந்தபோதிலும் மாவட்டத்தில் பெய்த பருவமழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மண்பானை தயாரிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    ஒரு அடி முதல் பெரிய அளவிலான மண்பானைகள் வரை என சிறியதும், பெரியதுமாக மண்பானைகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகிறார்கள்.

    இந்த பானைகள் தயாரிக்கப்பட்டு, கோவை மட்டுமின்றி பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தாங்கள் தயாரிக்கும் பானைகளை ரூ.70-ல் இருந்து ரூ.100 வரைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இவர்களிடம் வாங்கி செல்லும் வியாபாரிகள் அதனை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    மண்பானைகள் தயாரிப்பு ஒருபுறம் மும்முரமாக நடந்து வந்தாலும், மண்பானை தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான மண் கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மண்பானை தொழிலாளர் வெங்கடாஜலம் என்பவர் கூறியதாவது:-

    கவுண்டம்பாளையம் பகுதியில் 40 குடும்பத்தினர் மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் மண்பானை தயாரிப்பதற்கு மாங்கரை, கணுவாய், தடகாம் உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து தொழிலில் ஈடுபட்டு வந்தோம்.

    ஆனால் தற்போது எங்களுக்கு மண்பானை செய்வதற்கு தேவையான மண் கிடைப்பதில்லை. இதனால், நாங்கள் தற்போது வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது வரும் மண்ணை விலைக்கு வாங்கி மண்பானை செய்து வருகிறோம்.

    இந்த மணலில் மண்பானை செய்வது மிகவும் சிரமம். வேறுவழியின்றி இதனை செய்து வருகிறோம். இந்த மண்ணும் ஒரு மூட்டை ரூ.5100-ல் இருந்து ரூ.5400 வரை விற்கப்படுகிறது. ஒரு லோடு என்றால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் ஆகிறது.

    அப்படி வாங்கி தான் நாங்கள் மண்பானை செய்து வருகிறோம். எங்களிடம் முக்கால் அடி முதல் மண்பானைகள் உள்ளன. இந்த பானைகளை ரூ.70-ல் இருந்து ரூ.100 வரை விற்பனை செய்து வருகிறோம்.

    தொழிலுக்கு தேவையான மண் கிடைப்பதிலும், வாங்குவதிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது பொங்கலுக்கான பானைகள் தயாரித்து வருகிறோம்.

    இந்த தொழிலுக்கு தேவையான மண் மற்றும் அரவை எந்திரம், கலவை எந்திரங்களை அளித்து, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு;

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் உச்சம் அதிக அளவில் உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வீடுகளில் வெயில் தாக்கம் அதிக அளவில் தெரிகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், கரும்பு பால், தர்பூசணி ஆகியவற்றை அதிகம் விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் வீடுகளில் பெரும்பாலா னவர்கள் பிரிட்ஜில் தண்ணீர் வைத்து பருகி வருகின்றனர்.

    அதேபோன்று மண்பானையி லும் தண்ணீர் வைத்து குடிக்க தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இது குறித்து மண்பானை விற்பனை செய்வோர் கூறியதாவது:-

    தரமான மண்பானை செய்வதற்காக மண் எடுப்பதில் கட்டுப்பாடு, விதிமுறை அதிகம் உள்ளதால் தயாரிப்பு குறைந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    சாதாரண மண் பானை 350 ரூபாய், பைப் இணைக்கப்பட்ட மண்பானை ரூ. 450-க்கும் விற்பனை ஆகிறது. உடலுக்கு நல்லது என்ற நோக்கத்தில் வீடு, கடைகள் அலுவலக ங்களு க்காக வாங்கி செல்கின்றனர்.

    மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர். இதனால் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உற்சாக மாக கொண்டாடப்படுகிறது.
    • பொங்கல் என்றாலே புது அரிசியும், செங்கரும்பும், வெல்லமும் கூடவே புதுப்பானையும் நினைவுக்கு வரும்.

    வாழப்பாடி:

    தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உற்சாக மாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே புது அரிசியும், செங்கரும்பும், வெல்லமும் கூடவே புதுப்பானையும் நினைவுக்கு வரும்.

    மாறிவரும் கலாச்சாரத்திற்கேற்ப நகர்ப்புற பெண்கள் மட்டுமின்றி, கிராமப்புற பெண்களும், சமைப்பதற்கு மண் பாண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, இன்டோலியம், எவர் சில்வர் உள்ளிட்ட உலோகத்தாலான நவீன பாத்திரங்களை பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆனால், தமிழர்களின் பாராம்பரியத்தை பறைச்சாற்றும் பொங்கல் பண்டிகை வந்து விட்டால், தமிழகம் முழுவதும் குடும்பத்தோடு வார விழா எடுக்கும் அனைத்து தரப்பு மக்களும், தினம்தோறும் புதுப்புது மண் பானைகளில் பொங்கலிட்டு சமைத்து உண்டு மகிழ்வதை மரபு மாறாமல் தொடர்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், புதுமண தம்பதியருக்கு பெண் வீட்டு பொங்கல் சீதனமாக புத்தாடை, கரும்பு, நெல் தானியம், மஞ்சள், பாத்திரங்கள் மட்டுமின்றி, நம் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் வண்ண கோலமிட்ட மண் பானைகளையும் பரிசாக வழங்குவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது. இதனால், இந்த நவீன காலத்திலும் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை தருணத்தில் மண் பானைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் கிராமியக் கைத்தொழில், பழங்காலம் தொட்டு இன்றளவிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குலத்தொழிலாகவே இருந்து வருகிறது. நவீன சமையல் பாத்திரங்களின் மீதான மோகம் அதிகரித்து, மண்பாண்டங்களுக்கு வரவேற்பு குறைந்ததால், இச்சமூகத்தை சேர்ந்த தற்கால சந்ததியர், இத்தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில், வேலைவாய்ப்பைத் தேடிச் செல்கின்றனர்.

    ஆனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 300 ஆண்டுகளுக்கு மேலாக மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் குலத்தொழிலை கைவிடாமல் இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கிராமத்தில் விதவிதமான மண் பானைகள் தயாரிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் பானைகள், ஜனவரி முதல் வாரத்தில், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தை மண்பாண்ட கைவினைத் தொழிலாளர்கள் கூறியதாவது:

    ' பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், முன்னோர்களின் வழியில் பாரம்பரிய முறையில் மண் பாண்டங்கள் தயாரிக்கும் கைத்தொழிலை கைவிடாமல் குலத்தொழிலாக தொடர்ந்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மண் பானைகள் தயாரிப்புத் தொழில் முடங்கிக்கிடந்தது.

    கடந்த சில தினங்களாக மழையின்றி வெய்யில் அடித்து வருவதால், பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம். ஓரிரு தினங்களில் பானைகளை சூளையில் வைத்து சுட்டு பதப்படுத்தி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதி வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    3 மாதங்களாக மழை பெய்து வந்ததோடு, நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால், பானைகள் செய்வதற்கு உகந்த களிமண் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மண் பானைகள் உற்பத்தியும், வருவாயும் குறைந்துள்ளது' என்றனர்.

    • பண்டிகை திருநாளை யொட்டி மண்அடுப்புகள், மண்பானை அதிக விற்பனை செய்யப்படும்.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதியும், 16-ந்தேதி மாட்டு பொங்கலும், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என வரிசையாக விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் கரும்புடன் பாரம்பரிய மண்பானைகள், மண் அடுப்புகள் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். பொங்கல் பண்டிகை அன்று பாரம்பரிய முறைப்படி புதிய மண்பானை வாங்கி பொட்டு வைத்து பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி மண் அடுப்பில் ஏற்றி பொங்கல் வைப்பார்கள். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கூட இந்த முறையை தான் பின்பற்றி வருகின்றனர்.

    தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 18 நாட்களே உள்ளன. இதனை முன்னிட்டு தஞ்சையில் தற்போது பல்வேறு இடங்களில் கரும்புகள் விற்பனை தொடங்கியுள்ளது.

    அதேபோல் தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் மண்பானைகள், அடுப்புகள் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் தயார் செய்யப்பட்ட மண்பானை , அடுப்புகள் விற்பனையும் நடந்து வருகிறது. இது தவிர வியாபாரிகளும் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது:- தற்போது மக்கள் மீண்டும் மண்பாண்ட பொருட்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக பொங்கல் பண்டிகை மண்பாண்ட தொழிலுக்கு எப்போதுமே புத்துயிர் வழங்கும் பண்டிகை. அன்றயை தினம் மண்பானைகள், அடுப்புகள் அதிகளவில் விற்பனை ஆகும். கோவில், கிராமபுறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் மக்கள் புதுமண்பானைகளில் பொங்கல் வைப்பதை விரும்புகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் வரும் நாட்களில் மண்பானை , அடுப்புகளின் விற்பனை அதிக அளவில் நடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    ×