search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் சங்கம்"

    • ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதற்கு முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை புத்தாண்டு தினத்தில் நிறைவேற்றி உள்ளார்.

    கொரோனா காலங்க ளில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11 சதவீதம் வழங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த ஆண்டு 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

    அதே போல் கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் மீது அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்து ஆசிரியர், அரசு ஊழியர்களின் மன உளைச்சலை போக்கினார்.

    தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    அவர் அனைவரும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத்திட்டம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்ற நம் பிக்கை உள்ளது. மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 3 சதவீத அக விலைப்படி உயர்வுக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
    • 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளதாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    75-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான 3 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் அரசுத் துறைகளில் பணிபுரியும் 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார்.

    கொரோனா காலங்களில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக விலைப்படி உயர்வை சென்ற ஆண்டு 11 சதவீதம் மட்டுமே உயர்த்தி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி ஆசிரியர், அரசு ஊழியர்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

    அது மட்டுமில்லாமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதியை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

    கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து பழிவாங்கல் நடவடிக்கையும் ரத்து செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

    மேலும் கடந்த 1-ந்தேதி தலைமை செயலகத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பேரமைப்பான ஜாக்டோ- ஜியோவின் நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர், உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    அவர் உறுதியளித்தபடி ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையான 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    விரைவில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் வழங்குவார் என்று நம்புகிறோம். விரைவில் நடைபெற இருக்கும் ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் கலந்து கொண்டு ஆசிரியர், அரசு ஊழியர்களின் மேலும் சில கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பார் என்றும், சில கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்ற உறுதியையும் மாநாட்டில் தருவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×