search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசியில் பனியின் தாக்கம் அதிகரிப்பு
    X

    நெல்லை, தென்காசியில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

    • தை மாதம் நிறைவுற்ற நிலையில் சமீப காலமாக மாலை முதல் காலை நேரம் வரையிலும் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.
    • பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் செல்வோர் விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை விட மிக குறைவாகவே பெய்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி பணிகள் நடைபெறவில்லை.

    பனிப்பொழிவு அதிகரிப்பு

    அதற்கு மாறாக இந்த 2 மாவட்டங்களிலும் கடந்த கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து தை மாதம் நிறைவுற்ற நிலையில் சமீப காலமாக மாலை முதல் காலை நேரம் வரையிலும் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.

    நெல்லை சுற்றுவட்டா ரங்களில் வென்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் அதிக அளவு காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வண்ணா ர்பேட்டை பைபாஸ் சாலை, நயினார்குளம் சாலை, ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தொலை தூரத்தில் வரும் வாகனங்களை சரியாக அறிய முடியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் வேதனை

    பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் செல்வோர் விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர். வயல்களில் நிறைந்திருக்கும் நெல் மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழையால் விளைய வேண்டிய பயிர்கள், பனியால் பாதிக்கப்படும் நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் பனி காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பெரும்பாலான ஆஸ்பத்திரி களில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

    Next Story
    ×