search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரிப்பு
    X

    ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரிப்பு

    • நாகையாபுரம் அருகே ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.
    • திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் சபரிமலை கண்ணன் என்பவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இவரது ஆட்டு கொட்டகையில் இருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது. இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் ஆடுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

    Next Story
    ×