search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax"

    • பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
    • வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

    அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த 2பேர் பழங்கரை பிரிவு அருகே இறங்கினா். இதையடுத்து, போலீசாா் அவா்கள் இருவரும் கொண்டு வந்த கைப்பைகளில் சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 கோடி இருந்தது தெரியவந்தது. அப்பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

    விசாரணையில் அவா்கள் வேலூா், சைதாப்பேட்டையை சோ்ந்த ஆரீப் (வயது 47), பொன்னியம்மன் நகரை சோ்ந்த அப்துல் காதா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின.

    புதுடெல்லி :

    வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த 'சம்வாத்' அமர்வில், சி.பி.டி.டி. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

    * வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கூடுதலாக செலுத்தி இருந்தால் அவற்றை திரும்பச்செலுத்துவதற்கான (ரீபண்ட்) அவகாசம் கடந்த 2021-22-ம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் இது 21 சதவீதமாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் இது 42 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

    * கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதியன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    * இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின. ரூ.2,480 கோடி கூடுதல் வரியாக வசூலாகி உள்ளது.

    * கடந்த நிதி ஆண்டின் இறுதியில் (மார்ச் 31, 2023) 4 லட்சத்துக்கும் அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் (ஆன்லைன் வழியான மதிப்பீடுகள்) நிறைவு அடைந்துள்ளது.

    * 2021-22 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில், முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் 60 சதவீதம் குறைந்துள்ளது.

    * முகமற்ற மதிப்பீடுகள் வழியாக 1 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதேபோல், கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து, அதிகாரிகள் நேற்று இரவு மீண்டும் துணை மேயர் வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

    துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
    • வருமான வரி கணக்குகளை படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.

    புதுடெல்லி :

    ஆன்லைனில் 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.

    இதர படிவங்களில் தாக்கல் செய்வது விரைவில் தொடங்கும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    படிவம் 1-ஐ மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். படிவம் 2-ஐ, வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர், ரூ.50 லட்சத்துக்கு மிகாத ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்கிறார்கள்.

    • வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு செய்த நல்லாசிரியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி காவல் நிலைய சரகம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கே.ராமச்சந்திரன்(38) என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

    இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் வருமான வரி தொடர்பான நிறுவனத்தை மதுரை, ராமநாத புரம் ஆகிய இடங்க ளில் நடத்தி வருகிறார்.

    இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சி.பி.ஐ. கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து 2022ம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பிணையில் வந்துள்ளார்.

    இந்த நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ. 12 லட்சம் வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை இருப்பதால் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

    குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

    வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
    • 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் உள்ளனர். இப்போது ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருமானவரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் மிகப்பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது.

    தனிநபர்கள் ரூ.7 லட்சம் வரை எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. சேமிப்பின் காரணமாக அவர்கள் போடக்கூடிய விலக்குகளில் அளவை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

    • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
    • மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது

    புதுடெல்லி:

    வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.

    மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3 லட்சம் வரை - வரி இல்லை
    • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை- 5 சதவீத வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)
    • ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீத வரி
    • ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீத வரி
    • ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீத வரி
    • ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி.
    • திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
    • திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் செயலாளா்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடா்பான பயிற்சி குமரன் மகளிா் கல்லூரியில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா். இதில் வருமான வரித்துறை அதிகாரி ஜான்பெனடிக்ட் அசோக், பட்டயக்கணக்காளா் விஷ்ணுகுமாா், தாராபுரம் சரக துணைப்பதிவாளா் மணி ஆகியோா் வருமான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) தொடா்பாகவும், டிடிஎஸ் ரிட்டா்ன் பெறுவது தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கினா்.

    இதில் திருப்பூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம், மூலனூா், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 150 கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்கள் பங்கேற்றனா்.

    • வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

    அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சோதனை நடத்தினர்.

    நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 13 மணிநேரம் சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்தது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி இன்று நடைபெற்றது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் மதிப்பீடு செய்தனர்.

    லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • வருமான வரி விகிதாசாரத்தை மாற்ற வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டது முதல் அநேகமாக எல்லாவித பொருட்கள் மீதும் அதிகபட்ச விகிதாசாரத்தில் வரி விதிக்கப்பட்டு பணக்காரர்கள் முதல் பாமரர்கள் வரை சுமை ஆகிவிட்டது. சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை.

    செலவினங்கள் மீது விதிக்கப்படும் வரியே சேவை வரி என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி, வருமானம் அதிகமுடையோர்க்கு மட்டுமே விதிக்கப்படும் நிலையில் சேவை வரி என்ற செலவின வரி அனைத்து தரப்பினரிடமும் பாகுபாடின்றி வசூலிக்கப்படுகிறது.

    வருமானத்துக்கும் வரி, அதேநேரம் செலவினத்துக்கும் வரி என்ற கொள்கை நியாயமற்றது. எனவே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதனை கவனத்தில் கொண்டு வருகிற மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களை மாற்றியமைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் வரிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும். வருமான வரி வரம்பை ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 80 ஆண்டு நிறைவடைந்த மிக மூத்த குடிமக்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரிகள் சுமையானது என்ற மக்களின் எண்ணத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வியாபாரம் சார்ந்த சலுகைகளுக்கும் ஒரு சதவீதம் வரி பிடித்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள சாய ஆலை உரிமையாளர் சங்க அரங்கில் வருமான வரி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க தலைவர் காந்திராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் மாதேஸ்வ–ரன், துணை செயலாளர் சுதாகரன் முன்னிலை வகித்தனர்.

    ஆடிட்டர் செந்தில்குமார் பேசும்போது, தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்ப–ளம், ஜாப்ஒர்க் கட்டணம், சுத்திகரிப்பு கட்டணங்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்து உரிய காலத்துக்குள் சாய ஆலைத்துறையினர் செலுத்த வேண்டும்.

    இதன்மூலம் அபராதம் போன்ற வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம். பட்ஜெட்டில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நிலம், கட்டிடங்கள் வாங்கும்போது ரூ.50 லட்சத்துக்கு மேல் பத்திரப்பதிவு அல்லது வழிகாட்டி மதிப்பு இருந்தால் ஒரு சதவீ–தம் வருமான வரி செலுத்த வேண்டும்.

    இதேபோல் வியாபாரம் சார்ந்த சலுகைகளுக்கும் ஒரு சதவீதம் வரி பிடித்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபார நிமித்தமான சலுகைகளுக்கு 1 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. சாய ஆலைத்துறையினர் வருமான வரி குறித்து நன்கு அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.

    ×