search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Tax refund"

    • வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின.

    புதுடெல்லி :

    வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த 'சம்வாத்' அமர்வில், சி.பி.டி.டி. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

    * வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கூடுதலாக செலுத்தி இருந்தால் அவற்றை திரும்பச்செலுத்துவதற்கான (ரீபண்ட்) அவகாசம் கடந்த 2021-22-ம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் இது 21 சதவீதமாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் இது 42 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

    * கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதியன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    * இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின. ரூ.2,480 கோடி கூடுதல் வரியாக வசூலாகி உள்ளது.

    * கடந்த நிதி ஆண்டின் இறுதியில் (மார்ச் 31, 2023) 4 லட்சத்துக்கும் அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் (ஆன்லைன் வழியான மதிப்பீடுகள்) நிறைவு அடைந்துள்ளது.

    * 2021-22 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில், முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் 60 சதவீதம் குறைந்துள்ளது.

    * முகமற்ற மதிப்பீடுகள் வழியாக 1 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×