search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தள்ளுபடி வரம்பு உயர்வு... ரூ.7 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த தேவையில்லை
    X

    தள்ளுபடி வரம்பு உயர்வு... ரூ.7 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த தேவையில்லை

    • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
    • மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது

    புதுடெல்லி:

    வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.

    மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3 லட்சம் வரை - வரி இல்லை
    • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை- 5 சதவீத வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)
    • ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீத வரி
    • ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீத வரி
    • ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீத வரி
    • ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி.
    Next Story
    ×