search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானவரித்துறை"

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

    குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

    வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தற்போது வருமான வரிச் சட்டங்களின்படி 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
    • ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வரிகள் கழிக்கப்படவில்லை என்பது வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

    ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தற்போது வருமான வரிச் சட்டங்களின்படி 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் வெற்றி பெற்றால், கேமிங் நிறுவனம் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு வரியை கழிக்க வேண்டும்.

    வருமானவரி சட்டம் 1961-பிரிவு 194 பி-ன் படி லாட்டரிகள் அல்லது குறுக்கெழுத்து புதிர்களில் வெற்றி பெற்ற வருமானத்திற்காக செலுத்துவதற்கு வரி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வரிகள் கழிக்கப்படவில்லை என்பது வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கேமிங் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற் பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ×