search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயிலில் அடைப்பு"

    • லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்ததில் லட்சுமி கள்ளத்தொடர்பை கைவிடாததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கார் பறிமுதல்

    இந்த வழக்கில் தொடர்புடைய ரகுவின் கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகியோரிடம் விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 நாட்கள் அனுமதி கொடுத்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல் அவர்களிடம் நடத்திய விசாரணையில் லட்சுமி கொலையில் 3 பேரும் உடந்தையாக இருந்ததும், இதற்காக ெசாகுசு கார் ஒன்றை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த காரை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.

    ஜெயிலில் அடைப்பு

    மேலும் இவர்கள் 3 பேருடைய போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் அவர்களை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 2 அழகிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
    • சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே முளகுமூடு நிங்காரவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்ப தாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வீட்டில் அரைகுறை ஆடையுடன் 2 பெண்களும் ஒரு ஆணும் இருந்தனர். போலீசார் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிடிபட்டவர் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த ரவீந்திரன் (வயது 61) என்பது தெரியவந்தது.

    போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் நிங்காரவிளை பகுதியில் தன்னுடைய சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    மீட்கப்பட்ட 2 பெண்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ரவீந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட ரவீந்திரன் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    விபச்சார கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ரவீந்திரன் வீட்டை சொந்த தேவைக்கு என்று எடுத்துள்ளார். இங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார்.

    அடிக்கடி இந்த வீட்டிற்கு ஆட்கள் வந்து சென்றதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வாலிபர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    • மின் பாதையை மாற்றி அமைக்க சென்றனர்
    • லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

    வெம்பாக்கம்,

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சக்திவேல். இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    ரூ.2 ஆயிரம் லஞ்சம்

    இவர் ஆலந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் சில மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் மேல்பகுதி வழியாக மின் கம்பி செல்கிறது.

    அதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டிடப் பணியை நிறுத்தி வைத்துள்ளார். வீட்டின் மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி பாதையை மாற்றி அமைக்க, சக்திவேல் வெம்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் அஜித்பிரசாத்தை தொடர்பு கொண்டார்.

    அப்போது திட்ட மதிப்பீடு தொகை ரூ.37 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று உதவி பொறியாளர் கூறிஉள்ளார்.

    அதன்படி சக்திவேல் மின்வாரியம் பெயரில் ரூ.37 ஆயிரத்துக்கான தொகையை டி.டி.யாக எடுத்துக் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உதவிப் பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் 10 பேர் வீட்டின் மீது செல்லும் மின் பாதையை மாற்றி அமைக்க சென்றனர். அப்போது மீண்டும் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டனர்.

    சக்திவேல் பணம் தர மறுக்கவே, மின்வாரிய அதிகாரி வேலையை தொடர்ந்து செய்ய மறுத்தார்.

    இதனால் மனமுடைந்த சக்திவேல், உதவிப் பொறியாளர் அஜித் பிரசாத் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சக்திவேலிடம்கொடுத்து, அதை உதவி பொறியாளர் அஜித்பிரசாத்திடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

    ஜெயிலில் அடைப்பு

    அதன்படி அவரிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவிப்பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் விசாரணையை தொடர்ந்து மின்வாரிய உதவிப் பொறியாளர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள் (58). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • பழனியம்மாளுக்கும், செங்கோட்டுவேலனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே மாவுருட்டி புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள் (58). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் செங்கோட்டுவேலன்(39). பொறியியல் பட்டதாரி யான இவர், காளான் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். பழனியம்மாள் தனது மகள் ரம்யாவை கடந்த 12 வருடங்களுக்கு முன் செங்கோட்டு வேலனுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் செங்கோட்டுவேலனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டுவேலனிடம் கோபித்துக் கொண்டு ரம்யா தனது 2 குழந்தைகளுடன் தாய் பழனியம்மாள் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்று விட்டார்.

    இதையடுத்து நேற்று

    மாமியார் பழனியம்மாள் வீட்டுக்கு சென்று மனை வியை வீட்டுக்கு வரும்படி செங்கோட்டுவேலன் அழைத்துள்ளார். ஆனால் ரம்யா வர மறுத்துவிட்டார். அப்போது பழனியம்மாளுக்கும், செங்கோட்டுவேலனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செங்கோட்டுவேலன், தனது கையில் வைத்திருந்த கத்தியால் பழனியம்மாளை குத்தியுள்ளார். வலி தாங்க முடியா மல் அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது செங்கோட்டுவேலன் அங்கி ருந்து தப்பி சென்றுவிட்டார். பழனியம்மாளை நாமக்கல் லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனியம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற செங்கோட்டுவேலனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.


    • வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு செய்த நல்லாசிரியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி காவல் நிலைய சரகம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கே.ராமச்சந்திரன்(38) என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

    இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் வருமான வரி தொடர்பான நிறுவனத்தை மதுரை, ராமநாத புரம் ஆகிய இடங்க ளில் நடத்தி வருகிறார்.

    இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சி.பி.ஐ. கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து 2022ம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பிணையில் வந்துள்ளார்.

    இந்த நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ. 12 லட்சம் வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை இருப்பதால் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    • வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலி தொழிலாளி.
    • அவரின் 10 மற்றும் 11 வயதுள்ள 2 மகள்களுக்கும், வெள்ளை யன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலி தொழிலாளி.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அவரின் 10 மற்றும் 11 வயதுள்ள 2 மகள்களுக்கும், வெள்ளை யன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, சிறுமி களின் பெற்றோர் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வெள்ளையனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தெரு ராகவேந்திர நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தறி தொழிலாளி.
    • மல்லசமுத்திரம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டனர். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தெரு ராகவேந்திர நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தறி தொழிலாளி.

    சம்பவத்தன்று வடுகம்பா–ளையம் கிராமத்தைச் சேர்ந்த தறி தொழிலாளி தனபால் (31), வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரும் கணேசனை அழைத்துக் கொண்டு மல்லசமுத்திரம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டனர். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கணேசன் வீட்டிற்கு சென்ற தனபால் அங்கிருந்த கணேசனின் மனைவி லோகேஸ்வரியிடம் தகராறு செய்து லோகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி லோகேஸ்வரி(38) வெண்ணந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை ஜெயிலில் தனபால் அடைக்கப்பட்டார்.

    • இளம்பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளார்.
    • பிறகு அந்த படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வரும்படி தொந்தரவு செய்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மல்லூர் பாரப்பட்டி மேச்சேரியாம்பா ளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). இவர், இளம்பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளார். பிறகு அந்த படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வரும்படி தொந்தரவு செய்துள்ளார். மேலும் அந்த படத்தை வாட்ஸ் அப்பிலும் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மல்லூர் போலீஸ் நிலையத்தில் செல்வகுமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி, ஆபாசமாக படம் எடுத்து கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தார்.

    • நான் ரூ.25 லட்சத்து 27 ஆயிரம் பணம் கொடுத்தேன்.பணம் கொடுத்த பிறகு அவர்கள் எனக்கு வேலை எடுத்து தரவில்லை
    • விசாரணை நடத்தியதில் ஆகாசுடன் மேலும் சில கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே ஆண்டர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சலின் வயது 32. இவர் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    நான் கடந்த 2016-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்து வேலைக் காக ஆன்லைன் இணையதளத்தில் பதிவு செய்துள்ளேன். அப்போது சில எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்ட நபர்கள் டெல்லியில் விமான நிலைய பராமரிப்பு பணிகள் காலியாக இருப்பதாகவும், அதில் எனக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்கள். இதற்காக நான் ரூ.25 லட்சத்து 27 ஆயிரம் பணம் கொடுத்தேன்.பணம் கொடுத்த பிறகு அவர்கள் எனக்கு வேலை எடுத்து தரவில்லை.தொடர்ந்து என்னை ஏமாற்றி வந்தனர்.

    எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்- இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப், பெர்லின் பிரகாஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் மெர்சிலின் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து டெல்லி விரைந்து சென்ற சைபர் கிரைம் போலீசார் டெல்லி ராமவிகார் பகுதி யைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 21) என்பவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். ஆகாசிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறினார்‌. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆகாசுடன் மேலும் சில கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவர்களை பிடிக்க போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.வேறு நபர்களிடம் ஏமாற்றி பணம் பறித்தார்களா என்பது குறித்தும் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஆகாஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • கணவர் துபாயில் வேலை பார்த்து வருவதால் பெண் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
    • பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் வாலிபர் வசித்து வருகிறார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள வீர கேரளத்தை சேர்ந்த 40 வயது இளம்பெண்.

    இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். பெண் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பாலகுமார் (வயது 31) என்பவர் வசித்து வந்தார். இளம்பெண் கணவர் இல்லாமல் இருப்பதை அறிந்த அவர் அடிக்கடி சைகைகள் காட்டி ஆபாசமாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் பாலகுமார் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை கட்டி பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனையடுத்து பாலகுமார் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து இளம்பெண் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டி பிடித்து தவறாக நடக்க முயன்ற பாலகுமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை ைகது செய்தனர். பின்னர் போலீசார் பாலகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×