search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெய்டு"

    • தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து பா.ஜ.க.-வில் இணைகின்றனர்
    • டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைகின்றனர்

    மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தபாஸ் ராய். பல்வேறு மோசடிகள்  சம்பவம் தொடர்பாக கடந்த ஜனவரி 12 -ல் இவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது.

    அப்போது திரிணாமுல் கட்சி சார்பில் அவருக்கு ஆதரவாக யாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை தபாஸ் ராய் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராடப்போவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நேற்று அவர் பா.ஜ.க.-வில் சேர்ந்தார். கடினமான சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரசை (டிஎம்சி) விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.

    இது குறித்து திரிணாமுல் கட்சி தலைவர் சாந்தனு சென் கூறியதாவது:-

    தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து தபாஸ் ராய் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார். பதவி ஆசைக்காக கட்சியை விட்டு விலகிய தபாஸ் ராய் போன்ற துரோகிகளை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    அவருக்கு அனைத்து வித பதவிகளையும் திரிணாமுல் கட்சி கொடுத்தது. ஆனால் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார். அவருக்கு கொள்கை, சித்தாந்தம் கிடையாது. அமலாக்கத் துறை (ED)சோதனைக்கு பயந்துதான் பா.ஜ.க.-விடம் சரணடைந்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான அசோக் சவான் சமீபத்தில் பா.ஜ.க.-வில் இணைந்தார்.குஜராத் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அர்ஜுன் மோத்வாடியா நேற்று முன்தினம் பா.ஜ.க.-வில் இணைந்தார்.

    கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர்.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ.-க்கு பயந்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’.
    • இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குனர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார் என்றார்.


    நடிகை ஸ்ரீ திவ்யா பேசியதாவது, 'ரெய்டு' படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
    • இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.


    மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'ரவுடீசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
    • இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.



    மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    இந்நிலையில், 'ரெய்டு' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'அழகு செல்லம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாணியில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்றன.
    • ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் ரெய்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக 'ரெய்டு' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

    இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    • தாசில்தார் அஜித்குமார் ராயிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரித்தார்கள்.
    • 98 ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல், முறைகேடு, லஞ்ச புகார்களை விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல், லஞ்ச புகாரில் சிக்கும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு லோக்அயுக்தா போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், அரசு அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து நேற்று முன்தினம் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

    இந்த சோதனையின் போது 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து குவியல், குவியலாக தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் லோக் அயுக்தா போலீசாரிடம் சிக்கியது. அந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்களை லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தினார்கள். மேலும் 15 அரசு அதிகாரிகள் மீதும் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்திய 15 அரசு அதிகாரிகளில் பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராயும் (வயது 42) ஒருவர் ஆவார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய பணம், நகைகள், சொகுசு கார்கள், சொத்து ஆவணங்களை பார்த்து லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர்.

    அதாவது தாசில்தார் அஜித்குமார் ராய்க்கு சொந்தமான பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பசவேசுவராநகர், தொட்டபள்ளாப்பூர், கோலூர் உள்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

    சோதனையின் போது அஜித்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், 5 சொகுசு கார்கள், 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், பிரபல நிறுவனங்களின் 65 கைக்கெடிகாரங்கள், 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.

    இதுதவிர பல்வேறு இடங்களில் சொத்து வாங்கி அவர் குவித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதாவது பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் மட்டும் 98 ஏக்கருக்கு நிலம் வாங்கி வைத்திருந்ததற்கான சொத்து ஆவணங்களும் லோக் அயுக்தா போலீசாரிடம் சிக்கி இருந்தது.

    அந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அங்கு குதிரை பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்காக, குதிரை பந்தய பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்குவதற்கும் தாசில்தார் அஜித்குமார் ராய் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர் நிலமும், பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் 18 ஏக்கருக்கு பண்ணை வீட்டை தாசில்தார் அஜித்குமார் ராய் வாங்கியதும் தெரியவந்தது.

    அதாவது தனது பெயரிலும், தன்னுடைய மனைவி பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பினாமி பெயர்களில் தாசில்தார் அஜித்குமார் ராய் சொத்துகள் வாங்கி குவித்திருப்பதற்கான ஆவணங்கள் லோக் அயுக்தாவுக்கு சிக்கி இருந்ததால், அவர் வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சுமார் ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தை லோக் அயுக்தா போலீசார் தீவிரமாக எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் நேற்று முன்தினத்தில் இருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து தாசில்தார் அஜித்குமார் ராயிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரித்தார்கள். அதாவது நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி முதல் நேற்று காலை 10.30 மணி வரை 30 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. விசாரணையின் போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது உறுதியானதை தொடர்ந்து நேற்று தாசில்தார் அஜித்குமார் ராயை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.

    இதுகுறித்து லோக் அயுக்தா போலீஸ் ஐ.ஜி. சுப்பிரமணிய ராய் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்துள்ளதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் சிக்கிய சொத்து பத்திரங்கள், பிற ஆவணங்கள் குறித்து தாசில்தாரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம், என்றார்.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள தாசில்தார் அஜித்குமார் ராயின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு அசோக் உத்தரவிட்டு இருக்கிறார். அவரது வங்கி கணக்குகளின் பண பரிமாற்றங்கள் குறித்து லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைதான தாசில்தார் அஜித்குமார் ராயை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த சொத்துகளை வாங்கியது எப்படி?, அதற்கான வருவாய் ஆதாரங்களை அளிக்கும்படியும் தாசில்தாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக சொத்து குவித்த தாசில்தார் கைதாகி இருக்கும் சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கணவருக்கு பரிசாக கிடைத்த பொருட்கள்

    பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கெடிகாரங்கள், பிளாட்டினம் நகைகள், பரிசு பொருட்கள் சிக்கி இருந்தது.

    அதுபற்றி அஜித்குமார் ராயின் மனைவிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரித்த போது, இந்த பொருட்கள் அனைத்தும் தனது கணவருக்கு பரிசாக கிடைத்ததாகவும், அதில் ஒவ்வொரு நபரின் பெயர்கள் எழுதப்பட்டு இருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தங்க நகைகள், பிளாட்டினத்தை தாங்கள் விலைக்கு வாங்கியதாகவும் அஜித்குமார் ராயின் மனைவி போலீசாரிடம் கூறி இருக்கிறார்.

    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தாசில்தார்

    பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாரான அஜித்குமார் ராய் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அதாவது பெங்களூருவில் ரெயின்போ டிரவ் லே-அவுட், சர்ஜாபுரா ரோட்டில் ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக தாசில்தார் அஜித்குமார் ராய் செயல்பட்டு இருந்ததால், அவரை பணியிடை நீக்கம் செய்திருந்தனர். அதன்பிறகு, மீண்டும் பணிக்கு சேர்ந்திருந்த அவர், சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்து வந்தது தெரிந்தது. இதுபற்றி வந்த புகார்களை தொடர்ந்து லோக் அயுக்தா போலீசார் அஜித்குமார் ராய் வீட்டில் சோதனை நடத்தி பணம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெய்டு’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக 'ரெய்டு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.


    ரெய்டு

    ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ரெய்டு

    அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

    குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

    வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
    • பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் சோதனை.

    'இந்தியா மோடி மீதான கேள்வி' என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

    குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆவணப்படத்தின் யூ டியூப் வீடியோ மற்றும் அதன் இணைப்புகளை கொண்ட டுவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கி இருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.

    பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த டிஜிட்டல் ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து சேகரித்ததாகவும் தெரிகிறது.

    • விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி சிபிஐ அதிரடியாக நடவடிக்கை.
    • மது விற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை.

    மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட ஏராளமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. துணை முதல்வர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சிபிஐயின் அடுத்தகட்ட நடவடிக்கையாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி சிபிஐ அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    மது விற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ சோதனை.
    • அதனால்தான் நம் நாடு இன்னும் நம்பர் 1-ஆக இல்லை என்று டெல்லி துணை முதல்வர் கூறியுள்ளார்.

    டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கை விதிகளில் மாற்றம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு தனியாருக்கு சாதகமாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மதுபான கொள்கையில் மாற்றம் செய்ததால் ஆம் ஆத்மி அரசுக்கு மிகப்பெரிய அளவில் முறைகேடாக பணம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இதையடுத்து மதுபான கொள்கை விதிகள் திருத்தத்தை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்றது. என்றாலும், மதுபான விதிகள் திருத்தத்தில் உடந்தையாக இருந்த 6 அதிகாரிகளை அதிரடியாக நீக்கம் செய்து டெல்லி கவர்னர் நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் அவர் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி மதுபான கொள்கை விதிகள் திருத்தம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக 6 மாநிலங்களில் 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லியில் துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் அவரது அமைச்சக அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனைகளுக்கு துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா டுவிட்டரில் பதிவிட்டார். அதில் அவர், 'சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறேன். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். 'எதுவும் வெளியில் வரப்போவதில்லை' என்று கூறியிருந்தார்.

    இதே கருத்தை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'சி.பி.ஐ. ரெய்டு சிறப்பாக செயல்பட்டதற்கான வெகுமதி' என்று வெளியிட்டிருந்தார்.

    • இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் ரெய்டு.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. டாணாக்காரனின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.

    இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக நடிக்கும் படம் ரெய்டு.


    ரெய்டு ஃபர்ஸ்ட் லுக்

    இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

    ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

    இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×