search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய்துறை"

    • சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியே சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கனராக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறப்பது தொடர்கதையாகி வந்தது.

    இதையடுத்து வனவிலங்குகள் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களும், இதர வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி வட்டார மக்கள் அவசர தேவைகளுக்காக இரவு நேரத்திலும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அனுமதிச்சீட்டு (பாஸ்) வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. இதன்படி தாளவாடி வட்டார மக்களுக்கு வாகன அனுமதிச்சீட்டு வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    நீதிமன்றம் உத்தரவின்படி சத்தியமங்கலம்-மைசூரு சாலையில் இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அவசர தேவைகளுக்காக இந்த சாலையில் பயணிக்கும் உள்ளூர் மக்கள் தங்களின் ஆதார் அட்டையை காட்டினால் அனுமதிக்கப்படுகின்றனர். இதை வரைமுறைப்படுத்தும் வகையில் தாளவாடி வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வருவாய்த்துறை மூலம் வாகன அனுமதிச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இந்த அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தாளவாடி வட்டாட்சியர் ரவிசங்கர் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி.புத்தகம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளின் ஜெராக்ஸ் நகல்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.

    • பட்டதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட கோட்ட அதிகாரிகளாகவும், ஆர்.டி. ஏ.க்கள் தாசில்தாராகவும் பதவி இறங்குகிறார்கள்.

    சென்னை:

    வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு குரூப்-2 தேர்வு மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

    இவர்கள் பட்டப்படிப்பு தகுதியாக கொண்டவர்கள். இவர்கள் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு துணை தாசில்தார் பதவி உயர்வை அடைவர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயரக்கூடும்.

    இதுதவிர வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்றவர்கள் குரூப்-4 தேர்வு மூலம் தேர்வாகி பணியாற்றி வருகிறார்கள். இவர்களும் வருவாய் ஆய்வாளராகவும், துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஒ போன்ற உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற முடியும்.

    1995-ம் ஆண்டு 133 அரசாணையின்படி நேரடியாக வருவாய் அலுவலராக பணிநியமனம் பெற்றவர்களுக்கு பட்டதாரிகள் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை எதிர்த்து பட்டதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வருவாய் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது செல்லும். நேரடியாக நியமனம் அல்லாத வருவாய் ஆய்வாளர்கள் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் முன்னுரிமை வழங்கலாம்.

    பட்டதாரிகளாக இல்லாதவர்களுக்கு முன்னுரிமை கிடையாது என்று தெரிவித்தது. 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நேரடி நியமன வருவாய் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை செல்லும் என்று உறுதிப்படுத்தியது.

    கடந்த 15 ஆண்டுகளாக வழக்குகளால் தாமதம் ஆன வருவாய் துறையில் ஏற்பட்ட பதவி உயர்வு குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த காலங்களில் இளநிலை உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஒ வரை சென்றுள்ளனர். பட்டதாரிகள் அல்லாமல் பதவி உயர்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    அவர்களை தற்போது பதவி இறக்கம் செய்யக் கூடிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட கோட்ட அதிகாரிகளாகவும், ஆர்.டி. ஏ.க்கள் தாசில்தாராகவும் பதவி இறங்குகிறார்கள்.

    ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள், துணை தாசில்தார் பதவிக்கு தரம் இறக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில தலைவர் சையது அபுதாகீர் கூறுகையில், 'துணை ஆட்சியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டு களாக வழங்கப்படவில்லை. அந்த பதவி உயர்வு வழங்கினால் அந்த இடங்களுக்கு பலர் வர வாய்ப்பு உள்ளது.

    அதனால் ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஓ.க்கள் பதவி உயர்வு பெறுவார்கள். அவர்கள் இடங்களுக்கு தாசில்தார் பதவி உயர்வு பெறுவார்கள். தகுதி இறக்க நடவடிக்கையின் மூலம் பாதிக்கக்கூடும். அதிகாரிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.

    • வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

    அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சோதனை நடத்தினர்.

    நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 13 மணிநேரம் சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்தது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி இன்று நடைபெற்றது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் மதிப்பீடு செய்தனர்.

    லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×