search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holiday"

    • சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

    அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.

    அதிலும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நெரிசலில் சிக்கும் வாகனங்களால் வார விடுமுறை நாட்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் விபத்து சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது பற்றி சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விடுமுறை நாட்களில் புதுவைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் அதிக அளவு கொண்டாட்டத்தில் போதையுடன் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுகிறது.

    இதில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இரவு மட்டுமே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

    இதில் பெரும்பாலானோர் மறுநாள் காலையில் சென்று விடுவார்கள். இது ஒவ்வொரு வாரமும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது

    ஆனாலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.

    திருப்பூர்,அக்.21-

    தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து, சிவகாசி, சிவகங்கை, மதுரை, தேனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து,திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு 40 சிறப்பு பஸ்கள், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்கள் என மொத்தம் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.

    கூட்டத்துக்கு ஏற்ப இரவில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றனர்.

    • தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு, தனியார் நிறுவனங்க ளிலும் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஏராள மானோர் திரும்பி வருகின்ற னர். இவர்களுக்காக சிறப்பு ரெயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்கள் கிடைக்கும் பஸ்களில் ஏறி சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் நேற்று முதலே பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் இருப்பதால் பலஊர்களில் இருந்து இங்கு வந்து பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

    குறிப்பாக தேனி, பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவர்கள் திண்டுக்கல் வந்து பின்னர் இங்கிருந்து பஸ் மூலம் தங்கள் ஊருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் திண்டுக்கல்லில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களும் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இன்னும் 3நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. இதனிடையே திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும், வெளியூர்களில் இருந்து திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் ஆம்னி பஸ்களிலும் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    • மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அதிகாரத்தை கலெக்டர் வழங்கினார்.
    • புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சிவகங்கை

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய அடை மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல் லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் சிவ கங்கை மாவட்டத்திலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மழையின் தாக்கத்திற்கு ஏற்றாற்போல் பள்ளிகளை இயக்குவது தொடர்பாக அந்தந்த பகுதி தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், சூழ்நி லைக்கு தகுந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா? அல்லது பள்ளிகளை நடத்தலாமா? என்று தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரி–வித்துள்ளார்.

    இது சிவகங்கை மாவட்டத்தில் புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • அரசு விடுமுறை நாட்ககளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.
    • இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    நகராட்சி , மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அரசாணை 152 மற்றும் அரசாணை 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும்.

    செயல் திறன் பணியாளர்களுக்கு இரண்டு கட்ட பதவி உயர்வை வழங்கிட வேண்டும்.

    நகராட்சிகளின் தரத்தினை உயர்த்தி புதிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.

    அரசு விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.

    பிற துறை பணிகளை நகராட்சி மாநகராட்சி ஊழியர்களை கொண்டு ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.

    1.10.1996 -க்கு முன்பாக பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.

    01.04.2003 க்கு பின்பாக பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் இன்று 52 பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    வருகிற 17-ந் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதமும், அடுத்த மாதம் 15-ந் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது என்றுமாநகராட்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில தலைவர் வெங்கிடுசாமி தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டதா என ஆய்வு நடை பெற்றது.
    • 131 நிறுவனங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தொழிலாளா்களின் சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என கடைகள், நிறுவன ங்கள், உணவு நிறுவ னங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 131 நிறுவ னங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    இதில், சட்ட விதிகளி ன்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 68 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 44 முரண்பாடுகளும், மோட்டாா் நிறுவன ங்களில் 6 முரண்பாடுகளும் என மொத்தம் 118 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மே ற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர்.
    • அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

    பூதலூர்:

    தொடர்ந்து விடுமுறை நாளாக அமைந்ததால் நேற்று கல்லணையில் கூட்டம் அலைமோதியது. கார் நிறுத்துமிடங்களில் இடம் இல்லாததால் கொள்ளிடம் புதிய பாலத்தில் இரு இருபுறமும் கார்கள் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்ததால் காவிரி ஆற்றில் பாலங்களில் அருகில் குளிக்காமல்,

    பாலத்திற்கு அருகில் சற்று மேடான பகுதிகளில் கடலில் குளிப்பது போல் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு சாதனங்க ளிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர். கல்லணையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலடி வழியாக வந்த பாஸ்கள் அனைத்தும் புதிய படத்தி லிருந்து திருப்பி விடப்ப ட்டன. இதனால் பொதுமக்கள் சற்று அவதிப்பட்டனர்.

    • கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பல்வேறு சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் தற்போது கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய இதமான சீதோசனம் நிலவி வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர். தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி இனி வரும் நாட்களில் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 100 சிறப்பு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை), 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டியும், 18-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டியும் பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 சிறப்பு பஸ்களும் என கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் நாளை ( வெள்ளிக்கிழமை ), நாளை மறுநாள் (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    அதேபோன்று விடுமுறைக்கு வந்த பணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 18-ந் தேதியும், 19-ந் தேதியும் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். முன்பதிவு செய்யும் பயணி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்ப வர்களின் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்த ப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டின் பிரதமர் ஒருவர் அனைத்து நேரத்திலும் பணியில் இருக்கிறார்.
    • இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் முதல்வராக இருந்த மோடி 2014-ல் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர் பிரதமர் ஆனார்.

    இந்நிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

    2014 முதல் ஒருநாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை. நாட்டின் பிரதமர் ஒருவர் அனைத்து நேரத்திலும் பணியில் இருக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தகவல் அறியும் சட்டம் மூலம் அளிக்கப்பட்டுள்ள பதிலை அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, "பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் பணியாற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததே இல்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தகவல் அறியும் சட்டம் மூலம் 2-வது கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. பிரதமர் பதவியேற்றது முதல் அவர் எத்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பதே அந்த 2-வது கேள்வியாகும்.

    இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், "இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஏறக்குறைய ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி என்ற வகையில் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

    • எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

    தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    எழுத்து தேர்வு சுமூகமாக நடைபெற அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×