search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் பள்ளிகளுக்கு 26-ந் தேதி விடுமுறை
    X
    கோப்பு படம்

    புதுவையில் பள்ளிகளுக்கு 26-ந் தேதி விடுமுறை

    • எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

    தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    எழுத்து தேர்வு சுமூகமாக நடைபெற அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×