என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayudha Puja"

    • காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும்.
    • அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூரில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரெயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4 மணியில் இருந்து 5 சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கடைசி சிறப்பு ரெயில் 6.25 மணிக்கு காட்டாங்குளத்தூரில் இருந்து புறப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி அந்த ரெயில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 6.10 மணிக்கு காட்டாங்குளத்தூரை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
    • கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டார்.

    இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.

    விஜயின் பிரச்சாரப் பேருந்து, பிரச்சார வேன் உள்ளிட்டவற்றிற்கு ஆயுத பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டுள்ளது. விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • யட்ச ராஜன் வரத்தின் பலனால் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தனர்.
    • திருநங்கையாக இருந்த அர்ச்சுனன், உத்தரனுக்கு தேரோட்டியாகச் சென்றான்.

    மகாபாரதத்தில் துரியோதனன், தன் தாய்மாமன் சகுனியைக் கொண்டு சூழ்ச்சி செய்து, பஞ்சபாண்டவர்களை சூதாட்டத்தில் வென்றான். இதனால் பாண்டவர்கள் ஐவரும், பன்னிரெண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞான வாசமும் செல்லும்படி நேர்ந் தது. காட்டில் 12 வருடத்தை கழித்த பாண்டவர்கள், 13-வது வருடத்தை துரியோதனிடம் செய்த ஒப்பந்தப்படி, தலைமறைவாக வாழத் திட்டமிட்டனர்.

    யட்ச ராஜன் வரத்தின் பலனால் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தனர். எனவே அவர்களை, உருவத்தை மாற்றிக்கொண்டு, மத்ஸ்ய தேசத்தின் அதிபதியான விராட மகாராஜாவிடம் பணியாற்றும்படி, தவும்ய மகரிஷி அனுப்பி வைத்தார். அதன்படி தருமன், கங்கன் என்ற பெயரில் சகுன - தர்ம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாக உருமாறினான். பீமன் தனது சமையல் திறமையால், வல்லபன் என்ற பெயரில் சமையல்காரன் ஆனான். அர்ச்சுனன், ஏற்கனவே ஊர்வசியிடம் பெற்றிருந்த சாபத்தின்படி பிருஹன்னனை என்ற திருநங்கையாக மாறினான். நகுலன், தாமக்ரந்தி என்ற பெயரில் குதிரை பராமரிப்பாளனாகவும், சகாதேவன், தந்திரி பாலன் என்ற பெயரில் பசுக்களை காப்பவனாகவும் பொறுப்பேற்றனர். திரவுபதி, சைந்திரி என்ற பெயரில் ராணியின் வேலைக்காரியாக சேர்ந்தாள்.

    இப்படி பாண்டவர்கள் விராட மன்னனின் அரண்மனையில் 10 மாதங்கள் தலைமறைவாக இருந்தனர். 'பாண்டவர்கள் இருக்கும் இடம் செழிப்பாக இருக்கும்' என்று பீஷ்மர் சொன்ன தகவலை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை தேடச் சொன்னான் துரியோதனன். ஒற்றர்களும், விராட தேசம் மிகவும் செழிப்பாக இருப்பதாக வந்து சொன்னார்கள். பாண்டவர்கள் அங்குதான் இருக்க வேண்டும் என்று கருதிய துரியோதனன், திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மாவை, விராட நகரத்தை ஒரு புறத்தில் இருந்து தாக்கும்படி உத்தரவிட்டான். மற்றொரு புறத்தில் இருந்து கவுரவர்கள் படை தாக்கும் என்றும் கூறினான்.

    அப்படி விராட நகரத்தை தாக்கிய சுசர்மாவை எதிர்ப்பதற்காக, தருமர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் சென்றார் விராட மன்னன். அவர்கள் அந்தப் படையை விரட்டி அடித்தனர். துரியோதனன் முதலானவர்கள் விராட நகரத்தின் வடக்கு பக்கத்தில் இருந்து போரிட வந்தனர். அவர்களை எதிர்க்க விராட மன்னனின் மகன் உத்தரம் படையெடுத்துச் சென்றான்.

    அப்போது திருநங்கையாக இருந்த அர்ச்சுனன், உத்தரனுக்கு தேரோட்டியாகச் சென்றான்.

    துரியோதனனின் படையைக் கண்டு உத்தரன் பயந்து ஓட முயன்றான். ஆனால் அவனைத் தடுத்த அர்ச்சுனன், நீ தேரை செலுத்து, நான் அவர்களோடு யுத்தம் செய்கிறேன்' என்றான். பின்னர் அங்கிருந்த வன்னி மரத்தின் அருகே சென்று, மரத்தின் அடியில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வந்து துரியோதன படையுடன் போரிட்டு வெற்றி யும் பெற்றான், அர்ச்சுனன். அந்த தினம் 'ஆயுத பூஜை' என்று கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் ஆயுதங்கள், நாம் வேலை செய்வதற்கான கருவிகளை பூஜிப்பது நன்மை தரும். மறுநாள் விஜயதசமி அன்று வன்னி மரத்தை பூஜிப்பதும், விஷ்ணு பகவானை தியானிப்பதும், லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். மேலும் பெருமாள் கோவில்களில் வன்னி மரத்தில் பானம் போடும் நிகழ்வு நடக்கும்.

    விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியாக முடியும் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் ஒருசேர வழிபட்டால் வளமான வாழ்வு அமையும். அன்னை, மகிஷாசுரன் என்ற தீமையை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதை போன்று, நம் மனதில் உள்ள கோபம், தீய எண்ணம், பொறாமை, பேராசை போன்றவை அழிந்து நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.

    • நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    • ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம்.
    • அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    சேலம்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பூஜை பொருட்கள் விற்பனை

    அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர்.

    இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில வாங்கி சென்றனர்.

    சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாபேட்டை, பட்டைக்கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பல் பூசணியை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றனர்.

    இதேபோல், பால் மார்க்கெட் பகுதியிலும் பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கும், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து வியாபாரம் செய்தனர். மேலும், சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை ஜொராக நடந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டையை சேர்ந்த பழ வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரையும், திராட்சை கிலோ ரூ.100-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80-க்கும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.80-க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட பழங்கள் விற்பனை கூடுதலாக நடந்தது.

    ரூ.700 ஆக உயர்வு

    இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையம் யொட்டி உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.

    சன்ன மல்லிகை ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.280-க்கும், சாமந்தி கிலோ ரூ.120 முதல் 200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், அரளி பூக்கள் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை ஆகிறது.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூ வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:-

    இந்த மார்க்கெட்டுக்கு பூசாரிப்பட்டி, அரியனூர், சீரகாபாடி, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு விவசாயிகள் சாமந்தி பூக்கள் கொண்டு வருகின்றனர். பட்டர் ரோஸ் பெங்களூருவில் இருந்து வருகிறது. அரளிப்பூக்கள் பனமரத்துப்பட்டி, திருமனூர் வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மல்லிகை பூ மல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், குண்டுமல்லி பனமரத்துப்பட்டி பகுதியில் இருந்தும் முல்லை பூக்கள், கன்னங்குறிச்சி, வீராணம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். அதேபோல் ஆயுத பூஜையை முன்னிட்டு வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.
    • 7 நிமிடங்களில் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனை சிறப்பு ரெயில்கள் அறிவித்தாலும் அவை அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு விடப்பட்ட சிறப்பு ரெயில்கள் கோடை விடுமுறைக்கு பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

    வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் எப்போதும் முழு அளவில் செல்கின்றன.ரெயில்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய திட்டமிட்ட முன்பதிவு தான் சிறந்ததாக உள்ளது.

    ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமின்றி வசதியாகவும், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதாலும் சாதாரண முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் தட்கல் மூலம் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யவும் மக்கள் தயாராக உள்ளனர்.

    இந்த நிலையில் ரெயில் பயணத்தை திட்டமிட்டு தொடர வசதியாக 4 மாதங்களுக்கு முன்னதாக அதாவது 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

    பண்டிகை காலங்கள், விசேஷ நாட்களை கணக்கிட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணத்தை மக்கள் தொடர்கின்றனர்.

    இந்த நிலையில் ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமையும், அதற்கு மறுநாள் 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

    எனவே 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ந் தேதி (புதன்கிழமை) பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 10-ந் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டு செல்பவர்கள் நாளை (12-ந் தேதி) வேண்டும். ஆயுத பூஜை நாளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி பயணத்தின் 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க விருபுபவர்கள் இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய காத்து நின்றனர்.

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், அடையாறு, அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்பதிவு மையங்களில் குறைந்த அளவில் மக்கள் வரிசையில் நின்றனர்.

    இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பெரும்பாலும் டிக்கெட் கவுண்டர்களுக்கு வருவது இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்து விடுகின்றனர்.

    அதன்படி முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பி விட்டன. கவுண்டர்களில் வரிசையில் நின்ற சிலருக்கு உறுதியான டிக்கெட் கிடைத்தது.

    7 நிமிடங்களில் தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஒரு சில ரெயில்களில் ஏ.சி. வகுப்பு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் கோவை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழக்கமான ரெயில்கள் அனைத்திலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.

    • விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம்.
    • வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப் படும் தசரா பண்டிகை நேற்று தொடங்கியது.

    இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் இடங்கள் நிரம்பின.

    தமிழகத்தில் ஆயுதபூஜை, வருகிற 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை), 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.


    இதனை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 10-ந் தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கான இடங்கள் நிரம்பின.

    குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் நெல்லை, முத்து நகர், அனந்தபுரி, திருச்செந்தூர், பொதிகை, பாண்டியன், கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன.

    இதேபோல கோவை செல்லக் கூடிய ரெயில்களில் இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடிக்கிறது. பெங்களூர் பயணத்திற்கும் இடமில்லை. சிறப்பு ரெயில்களும் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன. தீபாவளி, பொங்கல், வரை அதில் இடமில்லை.

    ஆயுதபூஜை விடுமுறை பயணத்திற்கு இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் முன்பதிவு விறு விறுப்பாக இருக்கும் என்று அரசு விரைவு போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரி வித்தார்.


    ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி வருகிற 9, 10-ந் தேதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றிய அறிவிப்பு 7-ந் தேதி வெளியிடப்படும்.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் 14 அல்லது 15-ந் தேதி நடைபெறும்.

    அதில் தமிழகம் முழுவ தும் சிறப்பு பஸ்கள் இயக்கு வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பஸ்கள் வந்துள்ளன. பழைய பஸ்களுக்கு பதிலாக இவை இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலியானார்.
    • டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக்கூடலுார் பழைய காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், (வயது21) . டிரைவர். இவர், காட்டுக்கூடலுாரில் கார்த்திக் என்பவரது டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார். பின்னர் ஏரியில் கிருஷ்ண குமார் குளித்தபோது ஆழமான பகுதியில் சென்று சிக்கிய கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கிருஷ்ணகுமார்உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது .
    • விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச்சென்றனர் இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஆயுத பூஜை , விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பின்னலாடை நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை சுத்தம் செய்து வாழை மரக்கன்றுகள் வாங்கி வீடுகளின் வாயில் மற்றும் நிறுவனங்களின் நுழைவாயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம் . இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது . விற்பனை நிறைவடைந்ததை அடுத்த கொண்டு வந்திருந்த வாழை மரங்கள் விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர் . இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் . இந்த துப்புரவு பணியினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்துடன் மார்க்கெட் களை கட்டியது

    திருப்பூர் :

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று பூ மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுத பூஜைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் செவ்வந்தி பூ அதிக அளவில் உள்ளன. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வந்தனர். இதனால் மார்க்கெட் மக்கள் கூட்டத்துடன் களை கட்டியது. பூக்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், முல்லை ரூ.600, ஜாதிமல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.400 வரைக்கும், சம்பங்கி ரூ.300, செண்டுமல்லி ரூ.160, பட்டு பூ ரூ.100, அரளி ரூ.400 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பூக்களின் விலையும் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ஏற்ற இறக்கமாக இருந்தது.

    பழங்கள் விற்பனை

    இதேபோல் பூஜைக்கு தேவையான பழங்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் பழம் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ரூ.100 முதல் ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஆரஞ்சு ரூ.100, மாதுளை ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும், சாத்துக்குடி ரூ.80, திராட்சை ரூ.120, அண்ணாச்சி பழம் ரூ.80, வாழைப்பழம் அதிகபட்சமாக ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் அலங்கார தோரணங்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் புத்தம் புது வடிவில் வைக்கப்பட்டுள்ள பல அலங்கார ெபாருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், வெண் பூசணி, எலுமிச்சம்பழம், தேங்காய் மற்றும் அவல், பொரி, கடலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    ×