search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayudha Puja"

    • ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம்.
    • அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    சேலம்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பூஜை பொருட்கள் விற்பனை

    அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர்.

    இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில வாங்கி சென்றனர்.

    சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாபேட்டை, பட்டைக்கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பல் பூசணியை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றனர்.

    இதேபோல், பால் மார்க்கெட் பகுதியிலும் பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கும், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து வியாபாரம் செய்தனர். மேலும், சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை ஜொராக நடந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டையை சேர்ந்த பழ வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரையும், திராட்சை கிலோ ரூ.100-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80-க்கும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.80-க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட பழங்கள் விற்பனை கூடுதலாக நடந்தது.

    ரூ.700 ஆக உயர்வு

    இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையம் யொட்டி உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.

    சன்ன மல்லிகை ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.280-க்கும், சாமந்தி கிலோ ரூ.120 முதல் 200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், அரளி பூக்கள் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை ஆகிறது.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூ வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:-

    இந்த மார்க்கெட்டுக்கு பூசாரிப்பட்டி, அரியனூர், சீரகாபாடி, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு விவசாயிகள் சாமந்தி பூக்கள் கொண்டு வருகின்றனர். பட்டர் ரோஸ் பெங்களூருவில் இருந்து வருகிறது. அரளிப்பூக்கள் பனமரத்துப்பட்டி, திருமனூர் வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மல்லிகை பூ மல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், குண்டுமல்லி பனமரத்துப்பட்டி பகுதியில் இருந்தும் முல்லை பூக்கள், கன்னங்குறிச்சி, வீராணம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். அதேபோல் ஆயுத பூஜையை முன்னிட்டு வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    • பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலியானார்.
    • டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக்கூடலுார் பழைய காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், (வயது21) . டிரைவர். இவர், காட்டுக்கூடலுாரில் கார்த்திக் என்பவரது டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார். பின்னர் ஏரியில் கிருஷ்ண குமார் குளித்தபோது ஆழமான பகுதியில் சென்று சிக்கிய கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கிருஷ்ணகுமார்உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது .
    • விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச்சென்றனர் இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஆயுத பூஜை , விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பின்னலாடை நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை சுத்தம் செய்து வாழை மரக்கன்றுகள் வாங்கி வீடுகளின் வாயில் மற்றும் நிறுவனங்களின் நுழைவாயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம் . இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது . விற்பனை நிறைவடைந்ததை அடுத்த கொண்டு வந்திருந்த வாழை மரங்கள் விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர் . இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் . இந்த துப்புரவு பணியினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்துடன் மார்க்கெட் களை கட்டியது

    திருப்பூர் :

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று பூ மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுத பூஜைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் செவ்வந்தி பூ அதிக அளவில் உள்ளன. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வந்தனர். இதனால் மார்க்கெட் மக்கள் கூட்டத்துடன் களை கட்டியது. பூக்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், முல்லை ரூ.600, ஜாதிமல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.400 வரைக்கும், சம்பங்கி ரூ.300, செண்டுமல்லி ரூ.160, பட்டு பூ ரூ.100, அரளி ரூ.400 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பூக்களின் விலையும் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ஏற்ற இறக்கமாக இருந்தது.

    பழங்கள் விற்பனை

    இதேபோல் பூஜைக்கு தேவையான பழங்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் பழம் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ரூ.100 முதல் ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஆரஞ்சு ரூ.100, மாதுளை ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும், சாத்துக்குடி ரூ.80, திராட்சை ரூ.120, அண்ணாச்சி பழம் ரூ.80, வாழைப்பழம் அதிகபட்சமாக ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் அலங்கார தோரணங்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் புத்தம் புது வடிவில் வைக்கப்பட்டுள்ள பல அலங்கார ெபாருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், வெண் பூசணி, எலுமிச்சம்பழம், தேங்காய் மற்றும் அவல், பொரி, கடலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    • தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பயணிக்க அதிக பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை அக்டோபர் 4 மற்றும் 5-ந் தேதியில் கொண்டாடப்பட உள்ளது. காந்தி ஜெயந்தி 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாளில் வருகிறது. 1-ந்தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாகும். 3-ந் தேதி ஒருநாள் அரசு ஊழியர்கள் விடுப்பு போட்டால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 1-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் தினசரி இயக்கப்படுகின்ற 2100 பஸ்களுடன் 2050 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1650 சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பை பாஸ் (பணிமனை அருகில்) இருந்து இயக்கப்பட உள்ளது.

    கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. தினசரி வழக்கமாக செல்லக்கூடிய 2100 பஸ்களுக்கு முன்பதிவு முடிந்தவுடன் சிறப்பு பஸ்களுக்கு தொடங்கும்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரையில் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். 30, 1-ந் தேதி மட்டுமின்றி, 2 மற்றும் 3-ந் தேதிக்கும் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி அரசு பஸ்களில் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பயணிக்க அதிக பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். வழக்கமாக இயக்கக்கூடிய பஸ்களில் இடங்கள் நிரம்பிய பின்னர் சிறப்பு பஸ்களுக்கு முன் பதிவு செய்யப்படும். பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

    இன்று மகாளய அமாவாசை என்பதால் மேல்மலையனூருக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆயுதபூஜை மற்றும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். #Mutharasan #Bus

    கரூர்:

    கரூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரஸ்வதிபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதையொட்டி பொது மக்கள் வெளியூர் பயணங்களை அதிகளவில் மேற் கொள்கின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் அதிகளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல், மத்திய ரெயில்வே துறையானது சென்னை-நெல்லை, சென்னை-கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் பண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அந்த ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட, 3 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல் பொருத்த மற்ற காரணங்களை கூறி மாநில அரசு இழுத்தடிக்கிறது.

     


    தமிழகத்தில் அமைச்சர்கள், அவர்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த சோதனையை மத்திய அரசாங்கம் எதற்காக மேற்கொள்கிறது? என்பதை புரிந்து கொள்ளவே முடிய வில்லை. இது தமிழகத்தை பணியவைக்கும் முயற்சியாக தெரிகிறது.

    பாலியல் புகாரில் சிக்கிய மத்திய மந்திரி அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணைக்கு ஒத்துழைத்து தனது நேர்மையை அவர் நிரூபிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் மக்களின் கருத்தை கேட்டு செயல் படுத்தவேண்டும்.

    அந்த திட்டத்தின் பாதிப்புகள் குறித்து வெளியே பேசினாலே கைது நடவடிக்கை என்றாகி விட்டது. எனவே தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என நினைக்க தோன்றுகிறது.

    ரபேல் போர் விமான ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கோருகின்றன. மடியில் கனம் இல்லையென்றால் இதனை ஏற்று மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Mutharasan #Bus

    ×