என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடர் விடுமுறையால் ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்
- தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு, தனியார் நிறுவனங்க ளிலும் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர்.
சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஏராள மானோர் திரும்பி வருகின்ற னர். இவர்களுக்காக சிறப்பு ரெயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்கள் கிடைக்கும் பஸ்களில் ஏறி சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் நேற்று முதலே பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் இருப்பதால் பலஊர்களில் இருந்து இங்கு வந்து பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக தேனி, பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவர்கள் திண்டுக்கல் வந்து பின்னர் இங்கிருந்து பஸ் மூலம் தங்கள் ஊருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் திண்டுக்கல்லில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களும் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இன்னும் 3நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. இதனிடையே திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும், வெளியூர்களில் இருந்து திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் ஆம்னி பஸ்களிலும் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்