search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்
    X

    கல்லணையில் உள்ள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த மக்கள்

    கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்

    • ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர்.
    • அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

    பூதலூர்:

    தொடர்ந்து விடுமுறை நாளாக அமைந்ததால் நேற்று கல்லணையில் கூட்டம் அலைமோதியது. கார் நிறுத்துமிடங்களில் இடம் இல்லாததால் கொள்ளிடம் புதிய பாலத்தில் இரு இருபுறமும் கார்கள் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்ததால் காவிரி ஆற்றில் பாலங்களில் அருகில் குளிக்காமல்,

    பாலத்திற்கு அருகில் சற்று மேடான பகுதிகளில் கடலில் குளிப்பது போல் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு சாதனங்க ளிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர். கல்லணையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலடி வழியாக வந்த பாஸ்கள் அனைத்தும் புதிய படத்தி லிருந்து திருப்பி விடப்ப ட்டன. இதனால் பொதுமக்கள் சற்று அவதிப்பட்டனர்.

    Next Story
    ×