search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu munnani"

    • கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
    • கடந்த 10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. பக்தர்கள் பலர் குண்டம் இறங்கும் போது தீக்காயம் அடைந்தனர்.10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது. இதைக்கண்டித்து இந்து முன்னணி அமைப்பு சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் ஆர்.எஸ்.எஸ்.கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார், கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் காளிமுத்து, கோவில் மிராசுதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே வருகிற 20-ந் தேதி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது.
    • 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    பெருமாநல்லூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்ர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது. இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அலட்சியத்தாலும் குண்டம் திருவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. குண்டம் இறங்குவதில் ஏராளமான பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர். இதன்காரணமாக 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    விரதம் இருந்து குண்டம் இறங்க வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க கோவிலுக்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்தநிலையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்த ஒட்டுமொத்த இரும்பு கொட்டகையும் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்து அல்லாதவர்களுக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது. குண்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு பெருமாநல்லூர் நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.
    • திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம், அச்சமின்றி தங்கி பணியாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீ சார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம் 5-ந் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.இந்த சிறப்பு ரெயிலில் 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.

    பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ெரயிலில் திருப்பூர் திரும்பி வருகின்றனர். திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ெரயில்களில் அதிக அளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் திரும்புவதால் திருப்பூர் தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநில தலைவர் காடஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம். அச்சமின்றி தங்கி பணியாற்றலாம். சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்க கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை என்றார்.

    உத்திரபிரதேச இந்துமத் பொறுப்பாளர் சிவமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் மொழி ஒரு பிரச்சினை இல்லை. தமிழர்கள் காசிக்கு வருகின்றனர். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து வணங்குகிறோம். எப்போதும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு வந்துவிடக்கூடாது என்றார்.

    • வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
    • கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பகுதியில், பெரும்பான்மை மக்கள் வசித்து வரும் பகுதியில், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலை கட்ட அனுமதி வாங்கி, வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக, ஏற்கனவே சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இது குறித்து நேற்று இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் இந்து முன்னணியினர், பல்லடம் தாசில்தார் மற்றும் பல்லடம் போலீஸ் நிலையத்தில், அந்தக் கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    • பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்து மதத்துக்கு எதிராக பேசியதாக கூறி அவரை கண்டித்து நேற்று நீலகிரி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக அவர்கள் பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதற்கு போட்டியாக கடைகளை வழக்கம்போல் திறந்து கொள்ளலாம் என்று தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

    இருப்பினும் நேற்று இந்த பகுதிகளில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கோவை-சத்தியமங்கலம் சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பின்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடு புரத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில்இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் லோகநாதன்,சர்வேஸ்வரன், ராஜ்குமார்,மற்றும் இந்து முன்னணி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
    • ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    திருப்பூர்  :

    இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    அதேவேளையில், சென்னையில் கடந்த ஜூலை 31 ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கலை இலக்கிய முன்னணி மாநிலப் பொறுப்பாளா் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால், திராவிடர் கழகத்தின்ர கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு தனிப்படை அடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவித்துக் கொள்வது.இந்து தெய்வங்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
    • சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகா் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி பெருவிழா தமிழகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

    இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளா்ப்போம்' என்ற தலைப்பில் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவானது பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.சிலைகளை சேதப்படுத்தியவா்களை காவல் துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இந்து முன்னணி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக சாா்பில் மனு :

    விநாயகா் சிலைகளை சேதப்படுத்திய நபா்களைக் கைது செய்யக் கோரி பாஜக. சாா்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பி.செந்தில்வேல் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை சிலா் சேதப்படுத்தியுள்ளனா்.சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஆகவே விநாயகா் சிலைகளை தேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம்.
    • தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத் திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது.இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது . மேலும் , தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் , கோவையில் எச்.ராஜா போன்றோரும் கலந்து கொள்ள உள்ளனர் .வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.1983 ஆம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது முதலே அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் .

    மேலும், பங்களாதேஷ் போன்ற நாட்டிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள். திருப்பூர் போன்ற ஊர்களில் மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். தமிழகம் குறிவைக்கப்பட்டு எந்நேரமும் கலவரம் வரும் என்ற சூழல் நிலவுகிறது. உளவுத்துறை சரிவர செயல்படுவதில்லை .இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • கோவை, திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    திருப்பூர் :

    வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.அதில், கோவை திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் காப்பு கட்டி, விரதம் துவங்கினர்.

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
    • திருப்பூா் மாநகரில் செப்டம்பா் 3ந் தேதி விநாயகா் விசா்ஜனம் நடைபெறும்.

    திருப்பூர் :

    இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் விநாயா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 1.25 லட்சம் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதில் திருப்பூா் மாநகரில் 1,200 மற்றும் மாவட்டத்தில் 3,800 என மொத்தம் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

    திருப்பூா் மாநகரில் வரும் செப்டம்பா் 3ந் தேதி நடைபெறும் விநாயகா் விசா்ஜன பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநிலத் தலைவா் அண்ணாமலை பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளா்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், படியூர், காங்கயம்பாளையம், காடையூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் (செப்டம்பர்) 1-ந்தேதி அனைத்து சிலைகளும் உடையார் காலனிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவடைகிறது. பின்னர் அனைத்து சிலைகளும் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், வடக்கு பகுதி விசர்ஜன ஊர்வலம் துவக்கும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் பெரியார் காலனியில் நடந்தது. மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சேவுகன், கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் 25ந் தேதி, ஒவ்வொரு விநாயகர் கமிட்டிக்கும், 5 பேர் வீதம், புதிய பஸ் நிலையம், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை போட்டு, காப்பு கட்டி விரதம் துவக்கம், செப்டம்பர் 3-ந் தேதி விசர்ஜன ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்டமான ரதங்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு குழு அமைப்பது ஆகியன குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது
    • தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் :

    ஆலயங்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பத்திரத்தை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது என்று இந்து முன்னணி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நீதிமன்றமே வரையறுத்த பின்னரும் கூட அறங்காவலா்களை நியமிக்காமலும், கோவில் நிலங்கள் எவ்வளவு உள்ளது, குத்தகைதாரா்கள் வாடகையாக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து இந்து சமய அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம், அபிஷேக கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் என்று அனைத்துக்கும் கட்டணம் வாங்கிய பிறகும் கோவில்களை நிா்வகிக்க முடியாதா? கோவில்களுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய நகைகளைக் கொண்டு சிரமப்பட்டு கோவில்களை நிா்வகிக்க வேண்டாம். இந்த நகை உருக்கும் திட்டம் மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×