search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விரதம் தொடங்கிய இந்து முன்னணி தொண்டர்கள்
    X

    கோப்புபடம்.

    விநாயகர் சதுர்த்தி விரதம் தொடங்கிய இந்து முன்னணி தொண்டர்கள்

    • இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • கோவை, திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    திருப்பூர் :

    வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.அதில், கோவை திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் காப்பு கட்டி, விரதம் துவங்கினர்.

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×