search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gutkha"

    ஆற்காட்டில் குட்கா விற்ற 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.#Gutkha #Gutkhaseized

    ஆற்காடு:

    ஆற்காடு பஜாரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்கப்படுவதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்றிரவு பஜாரில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    மொத்த வியாபாரம் செய்து வரும் 3 மளிகை கடைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பலவகை போதை பாக்குகள் பார்சல், பார்சல்களாக சிக்கியது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர்களான ஆற்காடு எம்பெருமான் தெருவை சேர்ந்த தங்கபாண்டி (64), ராணிப்பேட்டை புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (33) மற்றும் அவருடைய தம்பி ஜெயக்குமார் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். #Gutkha #Gutkhaseized

    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #MaduraiCentralPrison

    மதுரை:

    மத்திய சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை சிறைக்குள்ளேயே அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    சென்னை புழல் சிறையில் சொகுசு மெத்தை, பீடி, சிகரெட், செல்போன் போன்றவை கைதிகளுக்கு தாராளமாக கிடைத்துள்ளன. இதனை சில கைதிகள் செல்போனில் படம் பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி புழல் சிறையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சிறைக்குள் முறைகேடுகள் நடந்தருப்பது தெரியவந்தது. அங்கிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து கோவை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் போலீசார் அடுத்தடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறை டி.ஜ.ஜி. பழனி தலைமையில் திலகர் திடல் போலீஸ் உதவி கமி‌ஷனர் வெற்றிச் செல்வம் கரிமேடு இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு மத்திய சிறைக்கு வந்தனர்.

    மத்திய சிறையின் ஒவ்வொரு பிளாக்குகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் பங்கேற்றனர்.

    தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பயங்கரவாதிகள் அறை போன்றவற்றில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின் போது, சிறையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, பீடி, சிகரெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    காலை 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, ஜெயில் அதிகாரி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். #MaduraiCentralPrison

    தமிழக அரசில் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் உடனே பதவி விலக வேண்டும் என ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பச்சமுத்து கூறியுள்ளார். #gutkha #ministervijayabaskar
    பெரம்பலூர்:

    இந்திய ஜனநாயக கட்சியின் திருச்சி மண்டல ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது.
    மாநில தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், மாநில விவசாய பிரிவு செயலாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் அன்பழகன் உட்பட பலர் பேசினர். கட்சி நிறுவனர் பச்சமுத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் கட்சி செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, அரசியல் நிலைப்பாடு, வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளுதல், தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் செயல்பாடு போன்றவை குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    பின்னர் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் கூறுகையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டவுடன் அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக கட்சியில் உயர் பதவி கொடுப்பது அங்கே குறைகள் அதிகமாக உள்ளது என அர்த்தம். அதை எங்கே வெளியே சொல்லி விடுவார் என பதவி கொடுத்து மறைக்கின்றனர்.

    தமிழகத்தில் வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எனவே அரசு இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஊழலை கண்டித்து தி.மு.க. கண்டன போராட்டம் நடத்தியது. இதனால் மக்கள் அலை அவர்கள் பக்கம் திரும்பி விடுமோ என்ற பயத்தால் தற்போது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஆட்சி நடத்துவதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என்றார்.  #gutkha #ministervijayabaskar
    விராலிமலையில் அதிமுக-திமுகவினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #dmk #gutkha
    விராலிமலை:

    குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் அங்குள்ள திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர். இதில் விராலிமலை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கடந்த 2016 சட்டமன்ற தேர்த லில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டவருமான தென்னலூர் பழனியப்பன் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் மீது அவதூறாக பேசுதல் 294, 323, 301 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து தென்னலூர் பழனியப்பனையும், பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    இந்தநிலையில் பொன்ராமலிங்கத்தை கொடைக்கானலில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து விராலிமலையில் இன்று அ.தி.மு.க.வினர் பேரணி நடத்தினர். அப்போது விராலிமலை மெயின்ரோட்டில் தி.மு.க. நிர்வாகி பழனியப்பனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அருகே வரும் போது அ.தி.மு.க.வினருக்கும், பழனியப்பனின் ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெட்ரோல் பங்க்கில் கல்வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். #dmk #gutkha
    குட்கா ஊழலில் போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை என்று மாதவராவ் வாக்குமூலம் அளித்துள்ளார். #Gutkha #ministervijayabaskar

    சென்னை:

    சென்னை செங்குன்றம் அருகே குட்கா ஆலை மற்றும் குடோன் நடத்தி வந்தவர் மாதவராவ். இதன் பங்குதாரர்களாக உமாசங்கர் குப்தா சீனிவாசராவ் ஆகியோர் இருந்தனர்.

    இவர்கள் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்து பல கோடி ரூபாய் குவித்தனர்.

    சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.


    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து மாதவராவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதேபோல் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பிறகு சூடு பிடித்தது. கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    பின்னர் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு மற்றும் கலால்துறை அதிகாரிகள் என 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர்களில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு இன்று வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    குட்கா ஆலை மற்றும் குடோன் சட்டவிரோதமாக செயல்பட்ட காலகட்டத்தில் செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    அப்போது மாதவராவிடம் இருந்து லஞ்சம் பெற்று இடைத்தரகர்கள் 2 பேர் வாயிலாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சம்பத்குமார் கூறி உள்ளார். மேலும் புழல் உதவி கமி‌ஷனராக இருந்த மன்னர்மன்னன் இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் அவர் கூறியதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சி.பி.ஐ. அதிகாரிகளிடம் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை. இது சத்தியம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அடுத்தகட்டமாக டி.எஸ்.பி. மன்னர் மன்னனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #Gutkha #ministervijayabaskar

    குட்கா சோதனையின் உண்மை நிலையை சி.பி.ஐ.யும், மத்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #Gudka #cbi #centralgovernment

    திருப்பூர்:

    ஆசியா விளையாட்டு போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தருணுக்கு திருப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஜி.கே வாசன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குட்கா சோதனையின் உண்மை நிலையை சி.பி.ஐ.யும், மத்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும். தமிழக அரசும், அதன் செயல்பாடும் கேள்விக்குறியாகி வருகிறது. தமிழக அரசும், போலீசாரும் தமிழகத்தில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழகத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    விழாவில் த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி, மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #gkvasan #Gudka #cbi #centralgovernment

    குட்கா ஊழல் புகார் குறித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீதான புகார் ஆதாரமற்றது என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றினார்.

    அப்போது குட்கா ஊழல் பிரச்சினையில் சரியாக விசாரணை நடத்தவில்லை. அவர் பணியில் திறமையில்லாதவராக இருந்தார் என்று முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் நான் நேர்மையானவன். என்மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜார்ஜ் குற்றம் சாட்டுகிறார். நான் நேர்மையானவன் என்பதை எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன் என்று அறிவித்திருந்தார்.


    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள பனையபுரத்தில் இன்று அரசு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: குட்கா ஊழல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டி உள்ளாரே?

    பதில்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆதராமற்றது.

    கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யப்படுவார்களா?

    பதில்: இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

    குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவது உறுதி என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #ministervijayabaskar #Gutkha

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்திற்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தித்தொடர்பாளரும், கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    தமிழிசை சவுந்திரராஜன் செல்லும் விமானத்தில் இனி செல்லப்போவதில்லை. இனிமேல் ரெயிலில் பயணம் செய்யப் போகிறோம். பொதுமக்களும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் பதவியில் உள்ள டி.ஜி.பி வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெறுவது இந்தியாவிலேயே முதல்முறை. சி.பி.ஐ. அதிரடி சோதனைக்குப்பின், அமைச்சர் பதவியில் விஜயபாஸ்கர் தொடரக்கூடாது, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், சிபிஐ சம்மன் அனுப்பும். அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவது உறுதி.


    தமிழகம் முழுவதும் மணல்கொள்ளை நடைபெறுகின்றது. இதில் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில பொருளாளர் ரெங்கசாமி, அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் குடவாசல் ராஜேந்திரன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர். #pugalenthi #ministervijayabaskar #Gutkha

    குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ministerjayakumar #ministerVijayabaskar #Gutkha
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல் டீசல் விலை  உயர்வை  குறைப்பதற்கு மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல், மண்எண்ணை ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. தினகரன் வரும் காலத்தில் நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என தனிமைப்பட்டு நிற்பார்.

     ராஜுவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கருத்துக்கு வலு சேர்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே சட்ட வல்லுனர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை என்பது தான் அரசின் நோக்கம். தி.மு.க. மத்தியிலும் , மாநிலத்திலும் அதிக அதிகார பலத்தோடு இருந்தபோது அவர்களது விடுதலையை உறுதிப்படுத்தவில்லை.


    குட்கா ஊழல் தொடர்பாக  சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர், எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று கூறியிருக்கிறார்.  ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministerjayakumar #ministerVijayabaskar #Gutkha
    செங்குன்றம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள குட்கா வியாபாரி கிடங்குக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்தனர். #GutkhaScam #GutkhaCBIProbe

    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த தடை அமலில் இருந்து வருகிறது. ஆனால் தடையை மீறி சென்னையில் குட்கா விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

    சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து விட்டு குட்கா விற்கப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக குட்கா நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் செங்குன்றம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அந்த கிடங்கு குட்கா பங்குதாரர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்கு சொந்தமானதாகும். அங்கு கணக்கில் வராத பல்வேறு மூலப் பொருட்கள் மற்றும் குட்கா பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குட்கா கிடங்குக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து செங்குன்றத்தில் குட்கா வியாபாரி மாதவராவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் குட்கா எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரம் இருந்தது.

     


     

    மேலும் தடையை மீறி குட்கா விற்பனை செய்வதற்கு சென்னையில் உள்ள இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 23 பேருக்கு சுமார் ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல் இடம் பெற்றிருந்தது. டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அந்த இரு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் எந்தெந்த தேதிகளில் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் கை மாறியது என்று எழுதப்பட்டிருந்தது.

    இவர்கள் தவிர கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் குட்கா வியாபாரிகள் லஞ்சம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது.

    அந்த ரகசிய டைரி மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டைரியில் இடம் பெற்றிருந்த ஒரு அமைச்சர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு டெல்லியில் இருந்து வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. டைரியில் உள்ள தகவல்களையும் வருமான வரித்துறை அனுப்பியிருந்தது.

    ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தவில்லை என்ற அதிருப்தி எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    அதன்படி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். கடந்த மே மாதம் இது தொடர்பான வழக்கை பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூன் மாதம் விசாரணையை தொடங்கினார்கள். முதலில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தனர்.

     


     

    நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் இருந்து மீண்டும் வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான குட்கா வியாபாரி மாதவராவை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். சுமார் 10 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

    வருமான வரித்துறை, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஏராளமான கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். அந்த கேள்விகளை சரமாரியாக கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    குட்கா விற்பதற்கு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது? ஒவ்வொரு அதிகாரியும் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள்? லஞ்சப் பணம் கைமாறியதில் யார்- யாரெல்லாம் உடந்தையாக இருந்தனர்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

    சில கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கையில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு கேட்டனர். இதனால் மாதவராவ் பல்வேறு உண்மைகளை கூறி இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குட்கா வியாபாரி மாதவராவ் கொடுத்துள்ள தகவல்கள் பல கோடி லஞ்சம் கை மாறியதை உறுதிபடுத்தி இருப்பதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மதியம் விசாரணை முடிந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    முறைகேடுகள் உறுதியாகி இருப்பதால் சோத்துப்பாக்கத்தில் உள்ள மாதவராவின் குட்கா குடோனுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டனர். அதை ஏற்று சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அந்த கிடங்குக்கு சீல் வைத்தனர். ஏற்கனவே வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ள நிலையில் தற்போது சி.பி.ஐ.யும் அந்த கிடங்குக்கு சீல் வைத்துள்ளது.

    இதற்கிடையே குட்கா வியாபாரி மாதவராவ் கொடுத்துள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 உயர் போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இரு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கில் சிக்கி இருக்கும் நிலையில் சி.பி.ஐ.யின் வேகமான விசாரணை காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GutkhaScam #GutkhaCBIProbe

    குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். #Gutkha #supremeCourt #CBI
    புதுடெல்லி:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.


    எனினும், எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்பதால், தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஏற்கனவே தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கூறியிருந்தது.

    இந்நிலையில், குட்கா ஊழலில் சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #supremeCourt #CBI
    ×