search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial assistance"

    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து 33 சதவீத பங்களிப்பு நிதியாகவும் செயல்படுத்தப்பட உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம் மற்றும் தன்னார்வலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ தீர்வு காண அதிநவீன திட்டத்தை தமிழ்நாடு அரசுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிதலுக்கும், சிகிச்சைக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.60 கோடியாகும். நமக்கு நாமே திட்டம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து 33 சதவீத பங்களிப்பு நிதியாகவும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி, 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், 1 லினியர் ஆக்ஸிலரேட்டர் என ரூ.60 கோடியில் அமைய உள்ளது. பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ரூ.5 லட்சம், பொதுச்செயலாளர் திருக்குமரன் ரூ.5 லட்சம், துணை தலைவர் இளங்கோவன் ரூ.5 லட்சம், பையிங் ஏஜெண்ட் ரூ.5 லட்சம், சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன் ரூ.50 லட்சம், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ் ரூ.25 லட்சம், சுலோச்சனா ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் ரூ.25 லட்சம், ரோட்டரி சங்கத்தின் சார்பாக ரூ.5 கோடி, கைலாஷ் மார்பிள்ஸ் சார்பாக ரூ.25 லட்சம், ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி ரூ.5 லட்சம் வழங்குவதற்கு ஒப்புதல் மற்றும் காசோலைகளை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    • நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி நாடார் கூலி தொழிலாளி.
    • கணவர் இறந்து விட்டதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், வறுமையில் வாடுவதாகவும் கூறி நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்திடம் உதவி கேட்டு மனு கொடுத்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி நாடார் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் கடந்த 26-6-2022 அன்று கரையிருப்பு காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது மனைவி புஷ்பம் தனது கணவர் இறந்து விட்டதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், வறுமையில் வாடுவதாகவும் கூறி நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்திடம் உதவி கேட்டு மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை சங்க நிர்வாக சபை கூட்டத்தில் வைத்து பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்க முடிவு செய்து, புஷ்பத்திடம் சங்கத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ராஜகுமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் மற்றும் சங்க காரிய கமிட்டி, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ருப்பூர் கோட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
    • அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஜெயலட்சுமி திருப்பூர் கோட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பயனாளியின் பங்களிப்பு தொகையான ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 700-ஐ ஜெயலட்சுமியால் முழுமையாக செலுத்த முடியாமல் திணறினார்.

    இந்த தகவலறிந்ததும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் இந்திரா சுந்தரம் ஜெயலட்சுமி நிதியுதவி செய்ய முடிவு செய்தார். இதன்படி ரூ.33 ஆயிரத்து 700-க்கான வரைவோலையை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் முன்னிலையில் இந்திரா சுந்தரம் ,மூதாட்டி ஜெயலட்சுமியிடம் வழங்கினார். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் பூர்ணிமா, ராஜா முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்துதல் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) 98656 78453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.
    • கலெக்டர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (வயது40). இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு நிவேதா (16) என்ற மகளும், ஹரி (10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லதாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

    தென்னந்தோப்பில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். லதா சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனை அறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.இதனை கொண்டு புதிய வீடு கட்டப்பட்டது. நேற்று அசோக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார். முன்னதாக நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் பஹாத் முகமது வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க ஒன்றிய செயலாளர் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • காங்கிரஸ் பிரமுகர் மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.

    திசையன்விளை:

    காங்கிரஸ் பிரமுகர் சிங்கை முருகன். இவருடைய மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரின் மருத்துவ செலவிற்காக நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் சார்பில் மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.

    அப்போது ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ், வள்ளியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ், பணகுடி ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
    • 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த பெரியசாமி. இவா்களது மகன்கள் முனியசாமி (30), அருண்குமாா் (24), காசிசுமன் (20) மலைச்செல்வம் (18). இவர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது பலத்த காற்றில் படகு கவிழ்ந்து முனியசாமி, மலைச்செல்வன் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

    மீனவர் முனியசாமிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க, பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினரை அவர்களது வீட்டுக்கு சென்று முனியசாமியின் மனைவி சவுபாக்கியம், மலை செல்வத்தின் தாயார் வேளாங்கண்ணியை சந்தித்து ஆறுதல் கூறினார். 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசு நிதி உதவியும், முனியசாமி மனைவிக்கு அரசு வேலையும் வாங்கி தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், தி.மு.க மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.

    கடலூர் எம்.புதூரில் உள்ள சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    இந்நிலையில், கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    20 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பொருளாதார சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி திரட்ட அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். #PakistanPM #ImranKhan #ImranKhanUAEvisit #financialassistance
    அபுதாபி:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். 

    உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான அரசு செலவினங்களுக்கு மட்டும் 1200 கோடி டாலர்கள் பணம் தேவைப்படும் நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். 

    பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. 

    இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக கடந்த வாரம் சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 600 கோடி டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. இந்த வாரம் மலேசியாவுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு மேலும் சுமார் 600 கோடி டாலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் இம்ரான் கான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  சென்றுள்ளார்.

    அவருடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரைஷி, நிதி மந்திரி அஸாத் உமர் ஆகியோரும் சென்றுள்ளனர்.

    அபுதாபி நகரில் உள்ள அதிபர் மாளிகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரும் அந்நாட்டின் முப்படைகளின் துணை தளபதியுமான ஷேக் முஹம்மது பின் சயித்-ஐ இன்று அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். #PakistanPM #ImranKhan #ImranKhanUAEvisit #financialassistance
    ரூ.3,466 கோடியில் 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது. #Cabinet #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு ஒரு திட்டத்தை உலக வங்கி உதவியுடன் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.3,466 கோடி செலவாகும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது.



    இதில் ரூ.2,628 கோடியை உலக வங்கி வழங்கும். ரூ.747 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தரும். எஞ்சிய ரூ.91 கோடியை மத்திய நீர் ஆணையம் அளிக்கும்.

    இதில் தமிழக அணைகள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.543 கோடி ஆகும்.

    அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுகிற ஊழியர்கள் சம்பளம் ரூ.2 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும் மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.250-ம் வழங்கப்படும். இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 
    மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #school
    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை மூலம் 31 ஆயிரத்து 200 பள்ளிக் கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது ஆங்கில பள்ளிகள் மோகத்தால் பல பெற்றோர் தனியார் ஆங்கில பள்ளிகளிலேயே மாணவர்களை சேர்க்கிறார்கள்.

    எனவே, அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. பல இடங்களில் 15-க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்கி வருகிறார்கள்.

    ஏற்கனவே அரசு இவ்வாறு குறைவான மாணவர்களை கொண்டு செயல்படும் 800 பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைக்கவும், 33 பள்ளிகளை நிரந்தரமாக மூடவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அரசு இதை மறுத்தது.

    இபபோது 3 ஆயிரம் பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாநில அரசுகள் நடத்தக்கூடிய பள்ளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்கிறது. சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டீரிய மத்திய மிக் அபியான் ஆகிய திட்டங்களின் கீழ் ஏற்கவே பள்ளிகளுக்கு உதவிகளை செய்து வந்தது.

    இப்போது இந்த 2 திட்டங்களையும் இணைத்து சமக்ரா சிக்ஷா அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி உதவிகளை செய்கிறது.

    ஆனால், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது.

    அதில், தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் குறைவாக மாணவர்கள் கொண்ட பல பள்ளிகளை இணைக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    தற்போது 15 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைப்பது என்று மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில அரசிடம் இருந்து தகவல் சென்றுள்ளது. அந்த பள்ளிகளுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி மிகவும் குறைவான மாணவர்களை கொண்ட 1053 பள்ளிகளை அருகில் உள்ள மற்ற பள்ளிகளோடு இணைக்க முடிவு செய்துள்ளனர். 1950 பள்ளிகளை மூடவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    மத்திய அரசின் நிதி கிடைக்காது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மத்திய அரசு மாநில பள்ளிகளுக்கு கழிவறை, மேலாண்மை, புத்தகம், நூலகம் போன்றவற்றுக்கும் திட்டங்கள் மூலம் உதவி வருகிறது.

    இவற்றையும் மாணவர்கள் குறைவாக உள்ள மாநில அரசு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளை மூடினால் மற்ற 28 ஆயிரத்து 200 பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வரை மத்திய அரசின் நிதி கிடைக்கும்.



    இது சம்பந்தமாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு மறுக்கும் போது, மாநில அரசுகள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    அரசு பள்ளிகளில் வசதியும், போதிய ஆசிரியர்களும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் எப்படி அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள் என்று கூறினார்.

    வருங்காலத்தில் 15-ல் இருந்து 100 மாணவர்கள் வரை படிக்கும் 25 ஆயிரம் பள்ளிகளுக்கு கூட மத்திய அரசு நிதி உதவிகளை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #school
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்தார். #KeralaFloods #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் பேரழிவை சந்தித்துள்ள கேரளாவிற்கு பல பகுதிகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. அவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகம், கேரளாவுக்கு உதவ முன்வந்தது. தங்களது வெற்றியில் கேரள மக்களுக்கு எப்போதும் பங்கு உள்ளதாக கூறிய ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்று தெரிவித்தார். இதற்காக சிறப்பு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்.



    இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

    நிவாரணப்பணிகள், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்பாக விவாதிப்பதற்கு, ஆகஸ்ட் 30-ம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார். #KeralaFloods #PinarayiVijayan

    ×