search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    X

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.

    கடலூர் எம்.புதூரில் உள்ள சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    இந்நிலையில், கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×