search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பிக்க அழைப்பு"

    • தமிழ்நாடு அரசு நடத்தும் எலக்ட்ரோ கார்டியோ கிராம் அல்லது டிரெட்மில் டெக்னீசியன் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
    • ஓ.சி. பிரிவை சேர்ந்த முன்னாள் படை வீரர் களுக்கு 50 வயது உச்சவரம் பாகும். மற்ற பிரிவை சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

    தருமபுரி,  

    மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய இ.சி.ஜி. டெக்னீசியன் காலி பணி யிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப் பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் இ.சி.ஜி. டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு பணி யாளர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். இந்த பணியிடங்களில் முன்னாள் படை வீரர் களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. எனவே பழைய கல்வி திட்டப்படி பி.யூ.சி. படித்தவர்கள், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற வர்கள் அதனுடன் பல் கலைக் கழக படிப்பு, தமிழ்நாடு அரசு நடத்தும் எலக்ட்ரோ கார்டியோ கிராம் அல்லது டிரெட்மில் டெக்னீசியன் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஓ.சி. பிரிவை சேர்ந்த முன்னாள் படை வீரர் களுக்கு 50 வயது உச்சவரம் பாகும். மற்ற பிரிவை சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

    விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப் பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அது குறித்த விவரத்தை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்கு மாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தருமபுரி யில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலு வல கத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு சார்பாக சுற்றுலாத்துறை விருந்துகள் வழங்கப்பட உள்ளன.
    • இவற்றை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டு உள்ளது.

    சேலம்:

    உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விருதுகள் வருகிற செப்டம்பர் மாதம்  வழங்கப்படுகிறது.

    அதன்படி தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள் நாட்டு சுற்றுலா ஏற்பட்டாளர், சிறந்த பயண பங்குதா ரர், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம் உள்ளிட்ட 17 வகையான விருதுகள் வழங்கப்படுகிறது.

    விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாதுறை இணையதளத்தில் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும். இந்த தகவலை சுற்றுலாத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    • வேளாண் அடுக்கு திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் விவசாயிகள் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி, விவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று 'GRAINS' என்ற இணை யத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இத்தளத்தில் விவசாயிகளின் விபரம் இணைக்கப்படுவதால் வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, தோட்டக்க லை துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல் துறை, ஊரக வள்ர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

    தவிர நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவாகும். தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து தொடர்ந்து பலன்களை பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு 2021-2022 ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.
    • .1,00,000 ரொக்கப் பரிசுத் தொகையும் தமிழ்நாடு முதல் அமைச்சரால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தனிநபர், நிறுவனம், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள் , கல்லூரிகள் , தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர்களை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது வழங்க சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு 2021-2022 ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட உள்ளது. மேலும் 2022-2023-ம் ஆண்டிற்கான இவ்விருது பெற கீழ்கண்ட துறைகளில் ஈடுபாட்டுடன் செயல்படும் தகுதியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தனிநபர், நிறுவனம், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள் , கல்லூரிகள் , தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்பாதுகாப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு, மாசு குறைப்பு, நெகிழி பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழலை மறுசீரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை தருமபுரி மாவட்ட கலெக்டரின் தலைமையிலான மாவட்ட விருதுக் குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் 2023-ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன்-5 ம் நாள் 'தமிழ்நாடு பசுமை சாதனையாளர்" விருதும், ரூ.1,00,000 ரொக்கப் பரிசுத் தொகையும் தமிழ்நாடு முதல் அமைச்சரால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பம் குறித்த தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    எனவே, தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொண்ட தங்களின் செயல்பாட்டை உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் 15.04.2023-க்குள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதியமான் கோட்டை, ஓசூர் புறவழிச்சாலை, சோகத்தூர் அஞ்சல், ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், தருமபுரி வட்டம், தருமபுரி மாவட்டம் (தொலைப்பேசி எண் 04342-270005) என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • சிறப்பாக பணியாற்றும் பஞ்சாயத்து, தலைவர்களை ஊக்கப்படுத்த உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
    • 37 பஞ்சாயத்துகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட உள்ளது

    ஈரோடு,

    ஊரக வளர்ச்சி அலகு, பஞ்சாயத்து தலைவர்களின் தலைமை பணியை வெளி கொணரும் வகையிலும், பஞ்சாயத்து சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான முயற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றும் பஞ்சாயத்து, தலைவர்களை ஊக்கப்படுத்த உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த, 2006 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2006–07 முதல், 2009–10ம் ஆண்டு வரை, 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு, 15 விருதுகள் வீதம், 60 பஞ்சாயத்து தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம், ரூ.5 லட்சம் ரூபாய்க்கான வெகுமதியுடன் உத்தமர் காந்தி விருது வழங்கப்படும்.

    இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. எனவே கடந்த, 2022 முதல் மீண்டும் மாவட்டத்துக்கு, 1 வீதம் சிறந்த, 37 பஞ்சாயத்துகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட உள்ளது.

    இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், 225 பஞ்சாயத்துகளில் சிறந்த நிர்வாக மேம்பாடு, புதுமை முயற்சி பணி, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் பஞ்சாயத்தை ஊக்கப்படுத்த, http://tnrd.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தளத்தில் பஞ்சாயத்துக்கு வழங்கப்படும் பயனர் முகவரி, கடவு சொல்லை பயன்படுத்தி உள் நுழைந்து, அனைத்து காரணிகளை தேர்வு செய்து உள்ளீடு செய்து சேமிப்பதன் மூலம் படிவத்தை தாக்கல் செய்யலாம்.

    இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நேரு யுவகேந்திரா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
    • மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது பெற தகுதியான இளைஞர்கள் மன்றங்கள் விண்ணப்பிக்க நேருயுவகேந்திரா அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திராவுடன் இணைந்து மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளையோர் மன்றத்திற்கு "மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மன்ற விருது" வழங்கப்பட உள்ளது.

    இளையோர் மன்றங்களின் மூலமாக குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு. கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளையோர்களுக்கு திறன்வளர்ச்சி பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு பணிகளை செய்து வரும் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விருது பெற தகுதி உள்ளவையாக கருதப்படும்.

    மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சங்கங்களின் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2021 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2022 மார்ச் 31-ந்தேதிக்குள் தங்கள் பகுதிகளில் சேவை செய்தமைக்கான போட்டோ ஆதராங்கள், பாராட்டு சான்றிதழ்கள், அழைப்பிதழ்கள், பத்திரிக்கை செய்திகள் மற்றும் பயனாளிகள் பெயர் பட்டியல் மட்டும் தகுதி உள்ளவையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

    மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் இளைஞர், மகளிர் மன்றத்திற்கு முறையே முதலாவதாக ரூ.75 ஆயிரமும், இரண்டாவதாக ரூ.50 ஆயிரமும், மூன்றாவதாக ரூ.25 ஆயிரமும் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.3 லட்சமும். இரண்டாம் பரிசாக ரூ. ஒரு லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் உள்ளது.

    இதற்தான விண்ணப்பத்தை பெரம்பலூர், நான்கு ரோடு, நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் வரும் 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்கவேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேரி எண்: 04328 - 296213 மற்றும் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • சட்ட ஆலோசகர் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
    • மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டுக்கு நீதிமன்ற பணிகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் சட்ட ஆலோசகர் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், தகுதி வாய்ந்த பல்கலைக்கழகம் மூலமாக பி.எல்., அல்லது அதற்கு நிகரான சட்டம் சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகள் உயர்நீதிமன்றம் அல்லது நீதிமன்றம் குறித்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும். விண்ணப்பதாரருடைய பணி திருப்தி அளிக்காத பட்சத்தில் போலீஸ் சுப்பிரண்டு சம்மந்தப்பட்டவருடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு ஒருவரை நியமிக்க அதிகாரம் உடையவர் ஆவார். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விரைந்து அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    • ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
    • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023- க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீ்ர்மரபினர் இன மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23 ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்டுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரி யிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதி யான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023- க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    அனுப்பவேண்டிய முகவரி:- ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை 5.தொலைபேசி எண் 044-29515942.மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com. இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் யோகநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராசிபுரம் வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 185 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    ஆதி, பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன் பதிவு செய்து பயன்பெறலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டுவரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன மீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்துதல் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) 98656 78453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படு கிறது.
    • பயிற்சி தொடங்கும் நாள் 08.08.2022 ஆகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்ப டும் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 22-வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படு கிறது. வரும் 28-ந்தேதி வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-ஐ ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்கள் பெற்று 01.08.2022 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முதல்வர், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் பர்கூர் - 635104 கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும், பயிற்சி தொடங்கும் நாள் 08.08.2022 ஆகும்.

    பயிற்சியாளர் சேர்க்கைக்கு கல்வி தகுதி பழைய பதினோராம் வகுப்பு அல்லது புதிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பயிற்சி சேரும் நபர் தமிழகத்தில் ஏதேனும் ஒரு கூட்டுறவு சங்கம்/நிறுவனம்/வங்கி பணியில் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 1) பணி நியமன உத்திரவின் நகல், 2) பணிச்சான்று, 3)பயிற்சியில் சேருவதற்கு ரிய தீர்மானம் உண்மை நகல்கள், 4)பழைய பதினோராம் வகுப்பு அல்லது புதிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் உண்மை நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் உண்மை நகல் சமர்பிக்கப்பட வேண்டும். தொடர்பு மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: 04343-265652, என்ற எண்ணில் கொள்ளலாம்.

    முழுநேர பட்டய படிப்பு

    இதேபோல முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மாணவர் சேர்கைக்கான கல்வித்தகுதி 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 10+2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் சேரலாம். 01.08.2022. அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. இப்பயிற்சியின் நிறைவில் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடு பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் சேர்த்து வழங்கப்படும்.

    விண்ணப்ப படிவத்தை பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், பர்கூரில் விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-ஐ ரொக்கமாக செலுத்தி வரும் 28-ந்தேதி வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) பெற்றுக் கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்க ளுடன் 01.08.2022 மாலை 5.30மணிக்குள் பதிவஞ்சல் அல்லது கூரியர் மூலம் மட்டுமே, முதல்வர் பர்கூர் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையம் பர்கூர்-635104 கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், காலதாமாதமாக பெறப்ப டும் விண்ணப்பங்கள் எக்கார ணத்தைக் கொண்டும் பரிசீலக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படு கிறது.

    ×