search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டுக்கு   சட்ட ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டுக்கு சட்ட ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு

    • சட்ட ஆலோசகர் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
    • மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டுக்கு நீதிமன்ற பணிகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் சட்ட ஆலோசகர் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், தகுதி வாய்ந்த பல்கலைக்கழகம் மூலமாக பி.எல்., அல்லது அதற்கு நிகரான சட்டம் சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகள் உயர்நீதிமன்றம் அல்லது நீதிமன்றம் குறித்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படும். விண்ணப்பதாரருடைய பணி திருப்தி அளிக்காத பட்சத்தில் போலீஸ் சுப்பிரண்டு சம்மந்தப்பட்டவருடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு ஒருவரை நியமிக்க அதிகாரம் உடையவர் ஆவார். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விரைந்து அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×