search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறு நிறுவனங்கள்"

    • விருதுநகரில் குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் மானிய கடன்களை அமைச்சர் வழங்கினார்.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர்

    சென்னையில் வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு விருதுநகரில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவி லான கள நிகழ்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

    5 தொழில் முனை வோர்களுக்கு ரூ.6.81 கோடி திட்ட மதிப்பிலான கடனுத விகளையும், 34 தொழில் முனைவோர்களுக்கு ரூ.84.48 லட்சம் மதிப்பில் மானியத்திற்கான காசோ லைகளையும், 114 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1524.82 கோடி மதிப்பில் மாவட்ட த்தில் முதலீடு செய்து தொழில் புரிவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொரு ளாதாரம் கொண்ட மாநில மாக உயர்த்தும் விதமாக, தமிழக முதலமைச்சர் வருகின்ற ஜனவரி மாதம் 07 மற்றும் 08 தேதிகளில் "சர்வ தேச முதலீட்டாளர்கள் மாநாடு 2024"-க்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தவும், வெளி நாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த பல்வேறு முதலீட்டா ளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் முன்னோட்டமாக 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் ரூ.1500 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    • 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்துதல் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) 98656 78453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×