search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YOUTH AWARD"

    • முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும்.

    சேலம்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்கும்.

    2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள தகுதிகள் உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த ஏப்ரல் மாதம் 2022 அன்று (01.04.2022) 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக்கப்பப்பட வேண்டும்).

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இந்த விருதிற்கு விண்ணப்பிக்க www.sdat.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்கள் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம். 31.5.2023 மாலை 4 மணி ஆகும் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்து உள்ளார்.

    • குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும்
    • வருகிற 31-ந்தேதி கடைசி நாள்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

    முதல்-அமைச்சர் மாநில 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படவுள்ளது.

    விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    தகுதிகள்:-

    15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் (1.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் (31.03.2023) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

    கடந்த நிதியாண்டில் அதாவது 1.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்ப டக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந்தேதி மாலை 4 மணிக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவர் அவர் கூறியுள்ளார்.

    • ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும்.
    • உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    ஈரோடு, 

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 ஆயிரத்துடன் பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

    இதற்கு 1-4-2023 அன்று 15 வயது நிரம்பியவர்களும், 31-3-2023 அன்று 35 வயதுக்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும், சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவராகவும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்களாக இருக்கக்கூடாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    இந்த விருதுக்கு www.sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நேரு யுவகேந்திரா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
    • மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது பெற தகுதியான இளைஞர்கள் மன்றங்கள் விண்ணப்பிக்க நேருயுவகேந்திரா அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திராவுடன் இணைந்து மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளையோர் மன்றத்திற்கு "மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மன்ற விருது" வழங்கப்பட உள்ளது.

    இளையோர் மன்றங்களின் மூலமாக குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு. கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளையோர்களுக்கு திறன்வளர்ச்சி பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு பணிகளை செய்து வரும் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விருது பெற தகுதி உள்ளவையாக கருதப்படும்.

    மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சங்கங்களின் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2021 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2022 மார்ச் 31-ந்தேதிக்குள் தங்கள் பகுதிகளில் சேவை செய்தமைக்கான போட்டோ ஆதராங்கள், பாராட்டு சான்றிதழ்கள், அழைப்பிதழ்கள், பத்திரிக்கை செய்திகள் மற்றும் பயனாளிகள் பெயர் பட்டியல் மட்டும் தகுதி உள்ளவையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

    மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் இளைஞர், மகளிர் மன்றத்திற்கு முறையே முதலாவதாக ரூ.75 ஆயிரமும், இரண்டாவதாக ரூ.50 ஆயிரமும், மூன்றாவதாக ரூ.25 ஆயிரமும் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.3 லட்சமும். இரண்டாம் பரிசாக ரூ. ஒரு லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் உள்ளது.

    இதற்தான விண்ணப்பத்தை பெரம்பலூர், நான்கு ரோடு, நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் வரும் 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்கவேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேரி எண்: 04328 - 296213 மற்றும் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    ×