search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் விருது"

    • முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும்.

    சேலம்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்கும்.

    2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள தகுதிகள் உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த ஏப்ரல் மாதம் 2022 அன்று (01.04.2022) 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக்கப்பப்பட வேண்டும்).

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இந்த விருதிற்கு விண்ணப்பிக்க www.sdat.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்கள் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம். 31.5.2023 மாலை 4 மணி ஆகும் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்து உள்ளார்.

    • குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும்
    • வருகிற 31-ந்தேதி கடைசி நாள்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

    முதல்-அமைச்சர் மாநில 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படவுள்ளது.

    விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    தகுதிகள்:-

    15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் (1.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் (31.03.2023) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

    கடந்த நிதியாண்டில் அதாவது 1.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்ப டக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந்தேதி மாலை 4 மணிக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவர் அவர் கூறியுள்ளார்.

    ×