search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    காந்தி விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • சிறப்பாக பணியாற்றும் பஞ்சாயத்து, தலைவர்களை ஊக்கப்படுத்த உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
    • 37 பஞ்சாயத்துகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட உள்ளது

    ஈரோடு,

    ஊரக வளர்ச்சி அலகு, பஞ்சாயத்து தலைவர்களின் தலைமை பணியை வெளி கொணரும் வகையிலும், பஞ்சாயத்து சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான முயற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றும் பஞ்சாயத்து, தலைவர்களை ஊக்கப்படுத்த உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த, 2006 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2006–07 முதல், 2009–10ம் ஆண்டு வரை, 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு, 15 விருதுகள் வீதம், 60 பஞ்சாயத்து தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம், ரூ.5 லட்சம் ரூபாய்க்கான வெகுமதியுடன் உத்தமர் காந்தி விருது வழங்கப்படும்.

    இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. எனவே கடந்த, 2022 முதல் மீண்டும் மாவட்டத்துக்கு, 1 வீதம் சிறந்த, 37 பஞ்சாயத்துகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட உள்ளது.

    இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், 225 பஞ்சாயத்துகளில் சிறந்த நிர்வாக மேம்பாடு, புதுமை முயற்சி பணி, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் பஞ்சாயத்தை ஊக்கப்படுத்த, http://tnrd.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தளத்தில் பஞ்சாயத்துக்கு வழங்கப்படும் பயனர் முகவரி, கடவு சொல்லை பயன்படுத்தி உள் நுழைந்து, அனைத்து காரணிகளை தேர்வு செய்து உள்ளீடு செய்து சேமிப்பதன் மூலம் படிவத்தை தாக்கல் செய்யலாம்.

    இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×