என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pakistan PM"
- பாகிஸ்தானில் தற்போது காபந்து அரசு நடந்து வருகிறது
- எங்கள் மண்ணை ஆப்கன் பயங்கரவாதிகள் பயன்படுத்துகிறார்கள்
கடந்த 2018ல் பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்தார் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்.
கடந்த 2022ல் இம்ரான்கான் மீது கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஷாபாஸ் ஷெரீப், அதிபர் ஆரிப் ஆல்விக்கு சிபாரிசு செய்தார். அதை ஆல்வி ஏற்று கொண்டதை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
காபந்து பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் (Anwar Ul Haq Kakar) ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்றார். அங்கு தற்போது காபந்து அரசு நடைபெற்று வருகிறது.
2024 பிப்ரவரி 8 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே சமீப சில மாதங்களாக பாகிஸ்தானில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து அந்நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் பதவியேற்றது முதல் எங்கள் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. முன்பை விட 60 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலைப்படை தாக்குதல்களில் 500 சதவீத அதிகரிப்பை பார்க்கிறோம். எங்கள் மண்ணை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பாகிஸ்தானுக்கு எதிரான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களில் 2,267 பாகிஸ்தானியர்கள், அந்த அமைப்பினரால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்; 15 ஆப்கான் தற்கொலைபடையினரும் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்நாட்டு அமைதிக்கான நடவடிக்கை. இதை செய்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது.
இவ்வாறு அன்வர் தெரிவித்தார்.
- இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கைது செய்வதற்கான தடை தற்காலிகமாக நீட்டிப்பு.
- பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
ஆனால் அவர் வழக்கில் ஆஜராகவில்லை. இதனால் நேற்று முன்தினம் இம்ரான்கானை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக களமிறங்கினர்.
அதன்படி நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் அவரது ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அதில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.
இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீட்டித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இம்ரான்கான், அவரது நெருங்கிய உதவியாளர் ஷா மெக்மூத் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்.
- உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாபாத் :
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒருவருக்கு அவரது தாயின் இழப்பைக் காட்டிலும் பெரிதான இழப்பு என்று எதுவும் இருந்து விட முடியாது. தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே என உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
- அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
- தெற்காசியாவில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள் இருந்தாலும், போர் ஒரு விருப்பமல்ல. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
1947 முதல் மூன்று போர்களை சந்தித்துள்ளோம். இதன் விளைவாக, இரு தரப்பிலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம் என்று உலக மன்றத்திற்கு நான் உறுதியளிக்கிறேன்.
ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் தனது ராணுவ நிலைகளை இந்தியா அதிகரித்துள்ளது. இதனால் அது உலகிலேயே மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. பயங்கரவாதம், மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி) 2-வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார்.
இந்த விழாவில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நோபளம், பூடான், கிர்கிஸ்தான், மொரீசியஸ் உள்ளிட்ட 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இது எதிர்பாராதது. இத்தகைய பிரச்சனையில் இருந்து இந்தியா விரைவில் விடுபடும். இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர நட்புறவுடன் திகழ வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் விரும்புகிறார். எனவே தான் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இப்பிராந்தியம் வளர்ச்சி பெற காஷ்மீர், சியாசின் மற்றும் சர்கிரீக் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக ஈரான் சென்று இருந்தார். அப்போது தெக்ரானில் ஈரான் அதிபர் ஹசன் ரக்கானியுடன் கூட்டாக பேட்டி அளித்தார்.
அப்போது, “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிகவும் பாதிக்கப்படுவதை நான் அறிவேன். பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதை ஈரானும், பாகிஸ்தானும் விரும்பவில்லை. அதில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறோம்.
இரு நாடுகளிடையே நல்ல நிலையும், நட்பையும் உருவாக்கும் என நம்புகிறோம்” என்றார். இவரது இக்கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவர் குர்ரம் தஸ்தகீர் கூறும்போது, “பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாக பிரதமர் கூறியிருப்பது முதன் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது.
வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை இதுவரை எந்த பிரதமரும் அளித்தது இல்லை. இந்த அறிக்கை மூலம் பிரதமர் இம்ரான்கான் ராஜ்ய ரீதியிலான மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு இழைத்துவிட்டார். இதற்குமுன்பு இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மோடி பிரதமரானால் தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என முரண்பாடான கருத்து கூறினார்” என்றார்.
முன்னாள் வெளியுறவு மந்திரியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி.யுமான ஹினா ரப்பானி கூறும்போது, ‘இம்ரான்கான் இதுபோன்று கேலிக்கூத்தான கருத்துக்களை தொடர்ந்து கூறுவதால் நாட்டை பற்றிய எங்களின் கவலை அதிகரித்துள்ளது’ என்றார். #Imrankhan
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சி பகுதியை சேர்ந்தவர் அலி ராசா அபிடி(46). பிரபல தொழிலதிபரான இவர் முத்தாஹிதா குவாமி அமைப்பு கட்சியின் முக்கிய பிரமுகராக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் கராச்சிக்கு உட்பட்ட 251-வது தொகுதியில் முத்தாஹிதா குவாமி அமைப்பின் சார்பில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கராச்சி நகரின் கயாபான் இ காசி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நேற்றிரவு காரில் வந்த இவரை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிடி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Pakistanlawmaker #SyedAliRazaAbidi #Karachilawmaker
சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்பதை மோடி அரசுக்கு காட்டுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடு சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்று இந்தியாவுக்கு இப்போது பாடம் நடத்துகிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார். பாகிஸ்தானை டெரரிஸ்தான் (பயங்கரவாத நாடு) என பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமர்சித்தார்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப்பும் இம்ரான் கான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அலகாபாத்தைச் சேர்ந்த கயிப் (வயது 38), இந்தியாவுக்காக 125 ஒருநாள் போட்டிகளிலும், 13 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். #ImransRemarks #MohammadKaif
