குண்டுவெடிப்புகள் அதிகரித்துள்ளது ஏன்? மனம் திறக்கிறார் பிரதமர் அன்வர்

பாகிஸ்தானில் தற்போது காபந்து அரசு நடந்து வருகிறதுஎங்கள் மண்ணை ஆப்கன் பயங்கரவாதிகள் பயன்படுத்துகிறார்கள்
குண்டுவெடிப்புகள் அதிகரித்துள்ளது ஏன்? மனம் திறக்கிறார் பிரதமர் அன்வர்
Published on

கடந்த 2018ல் பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்தார் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்.

கடந்த 2022ல் இம்ரான்கான் மீது கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஷாபாஸ் ஷெரீப், அதிபர் ஆரிப் ஆல்விக்கு சிபாரிசு செய்தார். அதை ஆல்வி ஏற்று கொண்டதை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

காபந்து பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் (Anwar Ul Haq Kakar) ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்றார். அங்கு தற்போது காபந்து அரசு நடைபெற்று வருகிறது.

2024 பிப்ரவரி 8 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே சமீப சில மாதங்களாக பாகிஸ்தானில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இது குறித்து அந்நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எங்கள் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் பதவியேற்றது முதல் எங்கள் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. முன்பை விட 60 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலைப்படை தாக்குதல்களில் 500 சதவீத அதிகரிப்பை பார்க்கிறோம். எங்கள் மண்ணை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பாகிஸ்தானுக்கு எதிரான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களில் 2,267 பாகிஸ்தானியர்கள், அந்த அமைப்பினரால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்; 15 ஆப்கான் தற்கொலைபடையினரும் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்நாட்டு அமைதிக்கான நடவடிக்கை. இதை செய்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

இவ்வாறு அன்வர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com