search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "encroachment"

    • மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடுகளாக உள்ளது.இந்த நிலையில் திட்டச்சேரி கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் மழை நீர் வடிகால் சரியில்லாத காரணத்தால் மழை நீர் வடிந்து முதலியார் தெருவழியாக தைக்கால் தெரு குடிசை பகுதியில் வந்து சேர்கிறது.

    அதேபோல் புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழை நீர் கிளி வாய்க்கால் வழியாக தைக்கால் தெருவை வந்தடைகிறது.

    இதனால் மொத்த மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.இதனால் குடிசை வீடுகளின் சுவர்கள் சாய்ந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்துதைக்கால் தெரு சுமதி தெரிவித்த தாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிவ வழியில்லாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.இதனால் கொசு மற்றும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

    இதுகுறித்து தைக்கால் தெருவை சேர்ந்த ஜீவா கூறியதாவது:-

    கடந்தாண்டு பெய்த கனமழையில் இதேபோல் குடிசை பகுதிகள் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.அதனை அகற்றி தர கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அமராவதி கூறும்போது:-

    தற்போது வடிகால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் வடியாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடியவும், வடிகால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
    • இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் ஏரி அமைந்துள்ளது செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 60 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளது நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த இந்த பகுதியில் தற்போது ஏறி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் ஆட்டு கிடா பலியிட்டும் வணங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த ஏரி நிரம்பியதன் காரணமாக அறுபது ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யாமல் இருந்த மக்கள் தற்போது நெல் நடவு தொடங்கியுள்ளனர். இதனால் இந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து இதே போன்று வருடா வருடம் ஏரி நிரம்ப அதிகாரிகள் நீர் வழி பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப், சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாந்தி மூக்கையா என்பவருக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளும்படி வருவாய் துறை மூலம் கால அவகாசத்துடன் தகவல் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபர் நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் ஏனைய பகுதிகளை அகற்றினர். மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தகுதி அடிப்படையில் அதே பகுதியில் வசிப்பதற்கு வேறொரு இடமளிக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், நாச்சியாபுரம் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிளி மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

    • பேருந்து நிறுத்தமும், ஊரின் நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது.
    • கழிவுநீர் அடைக்காமல் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் திருப்பூர் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    56-வது வார்டுக்கு உட்பட்ட சந்திராபுரம் மெயின் ரோட்டில், அம்மா உணவகம் எதிர்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சாக்கடைகால்வாயை ஆக்கிரமித்தும் நல்ல தண்ணீர் வரும் தொட்டிகளை அடைத்தும்ஒரு மிகப்பெரிய அளவில் செட் ஒன்றை உணவகம் நடத்துவதற்காக, ஒருவர் அமைத்துள்ளார். அந்த இடத்தில் பேருந்து நிறுத்தமும், ஊரின்நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது. பொதுமக்கள் பயன்பாட்டில்உள்ள அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் விநியோகம் சீராகநடைபெறவும் வடிகாலில் கழிவுநீர் அடைக்காமல் செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

    • ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் ஏற்படும் விபத்து அபாயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • கோட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் ஏற்படும் விபத்து அபாயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி ரோட்டோர ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    திருப்பூர் கோட்ட அளவில் ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைத்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அந்தந்த துறைகள் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருப்பூர் கோட்ட அளவிலான ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, நில அளவை துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள். திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 21 இடங்களில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. முறையான, முன்னறிவிப்பு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    • அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது.
    • நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    பொங்கலூர் அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது. அந்நிலத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தொங்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மந்தை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார் என மலைப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததன் பேரில் நில அளவை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாளை 29-ந் தேதிக்குள் கட்டடங்களை அகற்றி, மந்தை புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என்று திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனருக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

    • பழனி பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது
    • பழனி பஸ் நிலையம், ஆக்கிரமிப்பு அகற்றம்

    பழனி:

    பழனியில் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடைக்காரர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இது தவிர சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றால் நகருக்குள் நுைழய முடியாத நிலை உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பணம் மற்றும் உடமைகளை பறிகொடுத்த பக்தர்கள் போலீஸ் நிலையங்களுக்கு செல்ல தயங்கி திரும்பிச் சென்று விடுகின்றனர். இதனால் கொள்ளையர்கள் தொடர்ந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபடுவது நடந்து வருகிறது.

    இது தவிர சாலையோர குடிமகன்கள் ஆங்காங்கே மயங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து அதனை அகற்ற நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    ஆணையாளர் கமலா உத்தரவின் பேரில் பொறியாளர் ெசல்வி மற்றும் போலீசார், போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் ஒவ்வொரு கடையாக சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்தனர்.

    அந்த கடைகளுக்கு முன்பு மஞ்சள் நிற குறியீடு வரைந்து இதைத் தாண்டி வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    பஸ் நிலையத்தை ெதாடர்ந்து அனைத்து பகுதிகளிலும் இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று ஆணையாளர் கமலா தெரிவித்தார்.

    • பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. சவாரி செயல் பட்டு வரும் கடைகளின் கோடுகள் மற்றும் கடையின் பொருள்களை ரோடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து மெர்சல் ஏற்படுவதோடு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தற்போது ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இததனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ரோட்டை அளவீடு செய்யும் போது ஒரு சில பெரிய கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கடை உரிமையாளர்களுக்கு விரைவில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கருத்தை முடித்து அகற்ற வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஜூலை 8-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தனர். இந்தநிலையில் பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டிஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அந்த வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஜூலை 8-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற திருப்பூர் கோட்டாட்சியர் பண்டரிநாதன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், நகராட்சி ஆணையாளர் விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார், மற்றும் போலீசார், தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்தவர்கள் வீடுகளை காலி செய்ய அவகாசம் கேட்டனர் பின்னர் அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு நாள் அவகாசம் அளிக்குமாறும் அதற்குள் தாங்களாகவே வீடுகளை காலி செய்து விடுவதாகவும் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் நந்தகோபால், மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிநடைபெற்றது. வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பு.
    • ஆக்கிரமிப்பு செய்து பச்சனம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் பெண் ஒருவர் போலியாக பட்டா தயார் செய்து வீடு கட்டி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா. தொழிற்சங்க தலைவர் பி.கே.சின்னப்பன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஓமலூர் வட்டம் பச்சனம்பட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்து பச்சனம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் பெண் ஒருவர் போலியாக பட்டா தயார் செய்து வீடு கட்டி வருகிறார்.

    இதனால் பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் அவதிப்பட்டு வருவது தொடர்பாக கோவிந்தராஜ் என்பவர் ஓமலூர் வட்டாட்சியரிடமும் கோட்டாட்சியர் உட்பட 5 பேரிடம்மனு கொடுத்தும் இதுவரை அந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தப்படவில்லை.

    இது குறித்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நான் கேட்டால் அவர் அவதூறாக பேசுகிறார். எனவே இதுபற்றி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சாலை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்ததால் பேருந்து திரும்ப முடியாமலும் இருசக்கர வாகனம் வந்தால் கூட கடந்து செல்ல முடியாமல் இருப்பது தெரியவந்தது.
    • அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் ஒன்றியம் சப்பையபுரம் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பஸ்வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1½ கிமீ நடந்து வரவேண்டிய நிலையில் இருந்தனர்.

    பள்ளி மாணவர்கள் முதியவர்கள் என பலரும் இதனால் சிரமபட்டனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் விசாரித்த போது சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சாலை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்ததால் பேருந்து திரும்ப முடியாமலும் இருசக்கர வாகனம் வந்தால் கூட கடந்து செல்ல முடியாமல் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து வருவாய் தறையினர், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வேயர் ஆகியோரை கொண்டு நில அளவை செய்து ஆக்கரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்கிரமிப் பாளர்களிடம் எதிர்ப்பு வந்தால் போலீசார் துணையுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லியிருந்தார்.

    அதன்படி இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. 50 போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், கிராமநிர்வாக அலுவலர் அருண் சர்வேயர் கண்ணன், ஊராட்சித்தலைவர் பிரதிபா ரமேஷ், துணைத்தலைவர் அமுதா கண்ணன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளி்ட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். பொதுமக்கள் நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அந்த வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால்உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவர்களிடம் அங்கு வசிக்கும் மக்கள் கால அவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்க கேட்டனர்.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நாளை 8ந்தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் குடியிருப்புவாசிகள் திடீரென வீடுகளை காலி செய்தால், தொழில் மற்றும் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் .எனவே அந்த இடத்திற்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த தாசில்தார் நந்தகோபால் நீதிமன்ற உத்தரவை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாளைக்குள் ஆக்கிரமிப்புப் குடியிருப்புகளை அகற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு குடியிருப்புவாசிகள் மேலும் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். தாசில்தார் மறுக்கவே கூட்டம் முடிவுற்றது.

    ×